கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஊராட்சி ஒன்றியங்கள்: இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 96: வரிசை 96:
# [[சங்கராபுரம்]]
# [[சங்கராபுரம்]]
# [[வடக்கணேந்தல்]]
# [[வடக்கணேந்தல்]]
# [[மணலூர்ப்பேட்டை]]
# [[மணலூர்பேட்டை]]


=== ஊராட்சி ஒன்றியங்கள் ===
=== ஊராட்சி ஒன்றியங்கள் ===

08:24, 27 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்
மாவட்டம்
விழுப்புரத்துடன் இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்.
விழுப்புரத்துடன் இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்.
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
நகராட்சிகள்ளக்குறிச்சி
நகரம்கள்ளக்குறிச்சி
மாவட்டம்26 நவம்பர்
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
பெயர்ச்சூட்டுகள்ளக்குறிச்சி மாவட்டம்
தலைமையிடம்கள்ளக்குறிச்சி
வருவாய் வட்டங்கள்கள்ளக்குறிச்சி, சங்கரபுரம், உளுந்தூர்பேட்டை, திருகோவிலூர், சின்னசேலம், கல்வராயன்மலை
அரசு
 • கிரண்குராலாமாவட்ட ஆட்சித் தலைவர்
பரப்பளவு
 • மொத்தம்1,600 km2 (600 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்16,82,687
 • அடர்த்தி1,100/km2 (2,700/sq mi)
மொழிகள்
 • அலுவல்முறைதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் மாவட்டங்களிலுள் ஒன்றாகும். 2019, சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டது.[1] தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக துவங்கப்படுவதை, 8 சனவரி 2019 அன்று, தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமி, சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.[2]இம்மாவட்டத்தின் தலைமையிடம் கள்ளக்குறிச்சி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார். [3][4][5][6]

கிரண் குராலா இ ஆ ப இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.[7]

மாவட்ட எல்லைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கிழக்கில் விழுப்புரம் மாவட்டம், வடக்கில் தர்மபுரி மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், மேற்கில் சேலம் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், தெற்கில் கடலூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக துவக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு 19 சூலை 2019 அன்று ஒரு தனி அலுவலரை நியமித்துள்ளது. [8]

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 573 வருவாய் கிராமங்களும் கொண்டிருக்கும்.[9] [10]

Map
கள்ளக்குறிச்சி மாவட்டம்
  1. திருக்கோவிலூர் வட்டம்
  2. கள்ளக்குறிச்சி வட்டம்
  3. உளுந்தூர்பேட்டை வட்டம்
  4. சங்கரபுரம் வட்டம்
  5. சின்னசேலம் வட்டம்
  6. கல்வராயன்மலை வட்டம்

நகராட்சிகள்

  1. கள்ளக்குறிச்சி
  2. திருக்கோவிலூர்

பேரூராட்சிகள்

  1. சின்னசேலம்
  2. தியாக துருகம்
  3. உளுந்தூர்பேட்டை
  4. சங்கராபுரம்
  5. வடக்கணேந்தல்
  6. மணலூர்ப்பேட்டை

ஊராட்சி ஒன்றியங்கள்

  1. கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம்
  2. சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம்
  3. ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம்
  4. சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம்
  5. கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்
  6. உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
  7. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம்
  8. திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்
  9. திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம்

அரசியல்

புதிதாக துவக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் என ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மணிமுக்தா, கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைகின்றன. நெல், கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதனால் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளும், மூன்று சர்க்கரை ஆலைகளும் உள்ளன.இந்த பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், பருத்தி, கம்பு, உளுந்து ஆகியவற்றை பயிரிடுகின்றனர்.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 16,82,687 ஆகும். அதில் ஆண்கள் 8,50,706 மற்றும் பெண்கள் 8,31,981 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 980 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறுவயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,96,050 ஆகவுள்ளனர். மாவட்ட மக்கள்தொகையில் சராசரி எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 10,20,833 ஆகும்.[11]

சுற்றுலாத் தலங்கள்

திருக்கோவிலூர் கபிலர் குன்று. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Tamil Nadu govt announces creation of Kallakurichi district". Times of india. பார்க்கப்பட்ட நாள் 8 ஜனவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்
  3. கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
  4. கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல்வர் இன்று துவக்கம்
  5. தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது
  6. தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயம்!
  7. செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்
  8. கள்ளக்குறிச்சி மாவட்டத் தனி அலுவலர் நியமனம்
  9. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
  10. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
  11. தமிழக மாவட்டங்கள் மற்றும் வருவாய் வட்ட வாரியான மக்கள்தொகை