பொ. பூலோகசிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
|signature = |
|signature = |
||
|}} |
|}} |
||
'''பொன். பூலோகசிங்கம்''' (ஏப்ரல் 1, 1936 - செப்டம்பர் 19, 2019) ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் [[இலக்கியம்]], [[இலக்கணம்]], [[பண்பாடு]], [[சமயம்]], வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.<ref name=MB>{{cite web|url=http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3384:2016-06-18-03-29-48&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68|title=அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்|publisher=[[பதிவுகள் (இணைய இதழ்)|பதிவுகள்]]|author=[[லெ. முருகபூபதி|முருகபூபதி, லெ]]|date|=17 சூன் 2016| accessdate=19 சூன் 2016}}</ref> இரு [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]]களிலே பங்கு கொண்டவர். |
'''பொன். பூலோகசிங்கம்''' (ஏப்ரல் 1, 1936 - செப்டம்பர் 19, 2019)<ref name=tma>[http://www.tamilmurasuaustralia.com/2019_09_22_archive.html பேராசிரியர் பொன் பூலோகசிங்கம்], தமிழ் முரசு, 22 செப்டம்பர் 2019</ref> ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் [[இலக்கியம்]], [[இலக்கணம்]], [[பண்பாடு]], [[சமயம்]], வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.<ref name=MB>{{cite web|url=http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3384:2016-06-18-03-29-48&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68|title=அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்|publisher=[[பதிவுகள் (இணைய இதழ்)|பதிவுகள்]]|author=[[லெ. முருகபூபதி|முருகபூபதி, லெ]]|date|=17 சூன் 2016| accessdate=19 சூன் 2016}}</ref> இரு [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு]]களிலே பங்கு கொண்டவர். |
||
==வாழ்க்கைச் சுருக்கம்== |
==வாழ்க்கைச் சுருக்கம்== |
||
[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[வவுனியா]]வில் [[செட்டிக்குளம்]] என்ற ஊரில் பொன்னையா உடையார் சோதி ரத்தினம் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் [[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|சம்பத்தரிசியார் கல்லூரி]]யிலும் கற்று சித்திபெற்று அங்கிருந்து [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு]] அனுமதி பெற்று 1961 ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், [[சு. வித்தியானந்தன்]] ஆகியோரின் மாணவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று 1963 முதல் 1965 வரை [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்]] திராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். வவுனியாவில் முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டவரும் இவரே என்பது சிறப்புக்குரியது. |
[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[வவுனியா]]வில் [[செட்டிக்குளம்]] என்ற ஊரில் பொன்னையா உடையார் சோதி ரத்தினம் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் [[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|சம்பத்தரிசியார் கல்லூரி]]யிலும் கற்று சித்திபெற்று அங்கிருந்து [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு]] அனுமதி பெற்று 1961 ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், [[சு. வித்தியானந்தன்]] ஆகியோரின் மாணவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று 1963 முதல் 1965 வரை [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்]] திராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். வவுனியாவில் முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டவரும் இவரே என்பது சிறப்புக்குரியது. [[எடின்பரோ பல்கலைக்கழகம்|எடின்பரோ பல்கலைக்கழகத்தில்]] பேராசிரியர் எஸ். பிற்கோடர் உடன் இரண்டாம் மொழி கற்பித்தல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.<ref name="Virakesari">{{Citation |title=மறக்கமுடியாத பூலோகசிங்கம் |date=26 செப்டம்பர் 2019 |newspaper=வீரகேசரி}}</ref> |
||
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1965 இல் சேர்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[களனி பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் 1997 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு தனது பேராசியர் பதவியை விட்டு விலகி புலம் பெயர்ந்து [[அவுஸ்திரேலியா]] சென்று [[சிட்னி]] நகரில் வசித்து |
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1965 இல் சேர்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[களனி பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் 1997 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு தனது பேராசியர் பதவியை விட்டு விலகி புலம் பெயர்ந்து [[அவுஸ்திரேலியா]] சென்று [[சிட்னி]] நகரில் வசித்து வந்தார். |
||
==எழுத்துப் பணிகள்== |
|||
[[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]]யின் [[பாவலர் சரித்திர தீபகம்|பாவலர் சரித்திர தீபகத்தினை]] (1886) அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் 1975 இலும் 1979 இலும் வெளியிட்டுள்ளார். கொழும்புத்தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டது. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன. இவற்றைவிட |
[[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]]யின் [[பாவலர் சரித்திர தீபகம்|பாவலர் சரித்திர தீபகத்தினை]] (1886) அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் 1975 இலும் 1979 இலும் வெளியிட்டுள்ளார். கொழும்புத்தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டது. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன. இவற்றைவிட [[நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை]] யாழ்ப்பாணத்தில் நடத்துவதிலும் முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவராவார். ஈழத்து இலக்கிய வரலாற்றும் பாடநெறி உருவாக்கத்திலும் கணிசமான பங்களிப்பைச் செலுத்தினார். |
||
==வெளிவந்த நூல்கள்== |
==வெளிவந்த நூல்கள்== |
||
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=பூலோகசிங்கம்,_பொ.}} |
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=பூலோகசிங்கம்,_பொ.}} |
||
* ''261 அறிஞர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள்'' (1969) |
|||
* ''தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்'' (கட்டுரைத் தொகுப்பு, 1970, இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்றது) |
* ''தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்'' (கட்டுரைத் தொகுப்பு, 1970, இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்றது) |
||
* ''இந்துக் கலைக்களஞ்சியம்'' (முதற் தொகுதி, கொழும்பு, 1990) |
* ''இந்துக் கலைக்களஞ்சியம்'' (முதற் தொகுதி, கொழும்பு, 1990) |
||
* ''ஈழம் தந்த நாவலர்'' (கட்டுரைத் தொகுதி, 1997, இலங்கை அரசின் விருது பெற்றது) |
* ''ஈழம் தந்த நாவலர்'' (கட்டுரைத் தொகுதி, 1997, இலங்கை அரசின் விருது பெற்றது) |
||
* ''நாவலர் பண்பாடு'' (கட்டுரைத் தொகுதி) |
* ''நாவலர் பண்பாடு'' (கட்டுரைத் தொகுதி, 2000) |
||
* ''சிலப்பதிகார யாத்திரை'' (கட்டுரைத் தொகுதி) |
* ''சிலப்பதிகார யாத்திரை'' (கட்டுரைத் தொகுதி, 2002) |
||
* ''Poet Thambimuthu – a profile'' |
* ''Poet Thambimuthu – a profile'' |
||
* ''பாவலர் சரித்திர தீபகம். பகுதி 1''. அ.சதாசிவம்பிள்ளை (மூல ஆசிரியர்), பொ.பூலோகசிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்புத் தமிழ்ச்சங்கம், மீள் பதிப்பு, சனவரி 1975 |
* ''பாவலர் சரித்திர தீபகம். பகுதி 1''. அ.சதாசிவம்பிள்ளை (மூல ஆசிரியர்), பொ.பூலோகசிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்புத் தமிழ்ச்சங்கம், மீள் பதிப்பு, சனவரி 1975 |
||
* ''தமிழ் ஆய்வுச் சிந்தனைகள்'' (2017) |
|||
நூல்கள் தவிர பல்வேறு மலர்கள், இதழ்களில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, சமயம், இலக்கணம் என்பன சார்ந்தவை. உலாப்பிரபந்தவளர்ச்சி, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி, தத்தை விடுதூது, பதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஈழத்துத் தமிழ் இலக்கியம், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள், வன்னி நாட்டின் வரலாறு, கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சியும், தமிழ் இலக்கண விசாரம் என்பன குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும். |
நூல்கள் தவிர பல்வேறு மலர்கள், இதழ்களில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, சமயம், இலக்கணம் என்பன சார்ந்தவை. உலாப்பிரபந்தவளர்ச்சி, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி, தத்தை விடுதூது, பதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஈழத்துத் தமிழ் இலக்கியம், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள், வன்னி நாட்டின் வரலாறு, கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சியும், தமிழ் இலக்கண விசாரம் என்பன குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும். |
05:33, 26 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
பொன். பூலோகசிங்கம் | |
---|---|
பிறப்பு | செட்டிக்குளம், வவுனியா, இலங்கை | 1 ஏப்ரல் 1936
இறப்பு | செப்டம்பர் 19, 2019 சிட்னி, ஆத்திரேலியா | (அகவை 83)
தேசியம் | இலங்கைத் தமிழர், ஆத்திரேலியர் |
கல்வி | முனைவர் (ஒக்சுபோர்டு, 1965) இளங்கலை (தமிழ்) (பேராதனை, 1961) |
பணி | பேராசிரியர் |
அறியப்படுவது | தமிழ் வரலாற்று ஆய்வாளர் |
பட்டம் | கலா கீர்த்தி |
சமயம் | இந்து |
பெற்றோர் | பொன்னையா உடையார், சோதிரத்தினம் |
வாழ்க்கைத் துணை | தனபாலதேவி |
பொன். பூலோகசிங்கம் (ஏப்ரல் 1, 1936 - செப்டம்பர் 19, 2019)[1] ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், பண்பாடு, சமயம், வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.[2] இரு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலே பங்கு கொண்டவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
இலங்கையின் வட மாகாணத்தில், வவுனியாவில் செட்டிக்குளம் என்ற ஊரில் பொன்னையா உடையார் சோதி ரத்தினம் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கற்று சித்திபெற்று அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று 1961 ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், சு. வித்தியானந்தன் ஆகியோரின் மாணவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று 1963 முதல் 1965 வரை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். வவுனியாவில் முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டவரும் இவரே என்பது சிறப்புக்குரியது. எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எஸ். பிற்கோடர் உடன் இரண்டாம் மொழி கற்பித்தல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.[3]
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1965 இல் சேர்ந்து, கொழும்புப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 1997 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு தனது பேராசியர் பதவியை விட்டு விலகி புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியா சென்று சிட்னி நகரில் வசித்து வந்தார்.
எழுத்துப் பணிகள்
ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தினை (1886) அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் 1975 இலும் 1979 இலும் வெளியிட்டுள்ளார். கொழும்புத்தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டது. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன. இவற்றைவிட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதிலும் முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவராவார். ஈழத்து இலக்கிய வரலாற்றும் பாடநெறி உருவாக்கத்திலும் கணிசமான பங்களிப்பைச் செலுத்தினார்.
வெளிவந்த நூல்கள்
- 261 அறிஞர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் (1969)
- தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள் (கட்டுரைத் தொகுப்பு, 1970, இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்றது)
- இந்துக் கலைக்களஞ்சியம் (முதற் தொகுதி, கொழும்பு, 1990)
- ஈழம் தந்த நாவலர் (கட்டுரைத் தொகுதி, 1997, இலங்கை அரசின் விருது பெற்றது)
- நாவலர் பண்பாடு (கட்டுரைத் தொகுதி, 2000)
- சிலப்பதிகார யாத்திரை (கட்டுரைத் தொகுதி, 2002)
- Poet Thambimuthu – a profile
- பாவலர் சரித்திர தீபகம். பகுதி 1. அ.சதாசிவம்பிள்ளை (மூல ஆசிரியர்), பொ.பூலோகசிங்கம் (பதிப்பாசிரியர்). கொழும்புத் தமிழ்ச்சங்கம், மீள் பதிப்பு, சனவரி 1975
- தமிழ் ஆய்வுச் சிந்தனைகள் (2017)
நூல்கள் தவிர பல்வேறு மலர்கள், இதழ்களில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, சமயம், இலக்கணம் என்பன சார்ந்தவை. உலாப்பிரபந்தவளர்ச்சி, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி, தத்தை விடுதூது, பதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஈழத்துத் தமிழ் இலக்கியம், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள், வன்னி நாட்டின் வரலாறு, கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சியும், தமிழ் இலக்கண விசாரம் என்பன குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும்.
விருதுகள்
- 1993 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் 'கலா கீர்த்தி' பட்டம் அளிக்கப்பெற்ற முதல் தமிழர் இவர்.[2]
மேற்கோள்கள்
- ↑ பேராசிரியர் பொன் பூலோகசிங்கம், தமிழ் முரசு, 22 செப்டம்பர் 2019
- ↑ 2.0 2.1 முருகபூபதி, லெ. "அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்". பதிவுகள். பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016.
{{cite web}}
: Text "date" ignored (help) - ↑ "மறக்கமுடியாத பூலோகசிங்கம்", வீரகேசரி, 26 செப்டம்பர் 2019
{{citation}}
: Check date values in:|date=
(help)