கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 68: வரிசை 68:
பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) எனப் பெயர் பெற்றார்.
பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) எனப் பெயர் பெற்றார்.


இங்குள்ள விநாயகர் கோடி விநாயகர்என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இங்கு இறைவன் பரமசிவனுக்கு கோடிஸ்வரன் என்பதை போல மற்ற பாிவார தெய்வங்களுக்கு கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.


== பாடியோர் ==
== பாடியோர் ==

13:57, 26 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:கொட்டையூர் கோடீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கொட்டையூர்
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கோடீஸ்வரர்
தாயார்:பந்தாடுநாயகி
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:அப்பர், திருநாவுக்கரசர்

கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

அமைவிடம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 44வது தலம் ஆகும். ஆமணக்குக் கொட்டைச் செடியின் கீழ் லிங்கம் வெளிப்பட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

கோயில் அமைப்பு

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம், நந்தியைக் காணமுடியும். முன் மண்டபத்தில் வலப்புறம் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். இதே மண்டபத்தில் ஆத்ரேய மகரிஷி (ஹேரண்டர்) உள்ளார். இடப்புறம் நடராஜர் மண்டபமும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. கருவறையின் வெளிப்புறம் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அருகே கோடி சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருசசுற்றில் கோடி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய கோடி சுப்பிரமணியர் மற்றும் கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன.

தல வரலாறு

சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில் திருவருள் பாலித்திருக்கும் சிவன் தலங்களில் கொட்டையூர் அருள்மிகு கோடீஸ்வரசுவாமி கோயில் 44ஆவது தலமாகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவில் கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையே கொட்டையூரில் உள்ளது. மார்க்கண்டேயர் பூசித்த தலம். காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஆத்ரேயமகரிஷி அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது அவருடைய திருவுருவம் இக்கோயிலில் உள்ளது. ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. மற்றொரு சமயம் சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலிலுள்ள இறைவன் கோடீஸ்வரர். இறைவி பந்தாடுநாயகி[2]. இத்தல இறைவன் திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை தன்னகத்தே கொண்டு சுயம்புமூர்த்தியாகவும், தன் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்பும் நிலையில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாகும்.[3]

பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) எனப் பெயர் பெற்றார்.

இங்கு இறைவன் பரமசிவனுக்கு கோடிஸ்வரன் என்பதை போல மற்ற பாிவார தெய்வங்களுக்கு கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பாடியோர்

சைவ சமயக்குரவர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் போற்றிப்பாடியுள்ளனர்.

பேறு பெற்றோர்

ஏரண்ட முனிவர், மார்க்கண்டேயர், பத்திரயோகி முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம்.[4]

கும்பகோணம் சப்தஸ்தானம்

கும்பகோணம் சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில், திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில், தாராசுரம் ஆத்மநாதசுவாமி கோயில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், மேலக்காவேரி கைலாசநாதர் கோயில் மற்றும் சுவாமிமலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் கும்பகோணம் முதலிடத்தைப் பெறுகிறது. சப்தஸ்தானப் பல்லக்கின் வெள்ளோட்டம் 7 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது.[5] 21 ஏப்ரல் 2016 மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் தொடர்ந்து 23 ஏப்ரல் 2016 அன்று ஏழூர்ப் பல்லக்குத் திருவிழா என்னும் விழா நடைபெற்றது.[6] விழா நாளில் பல்லக்கு இக்கோயிலுக்கு வந்து சென்றது.

குடமுழுக்கு

மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பெரும்பாலான கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும் நிலையில் இக்கோயிலில் அக்டோபர் 26, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது.[7][8][9]

மேற்கோள்கள்

  1. மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்
  2. வீ.ஜெயபால், சைவ நால்வரால் பாடப்பெற்ற திருத்தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், தஞ்சாவூர் 613 009, 2014
  3. மகாமகம் சிறப்பு மலர் 2004
  4. சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி, 43 சன்னதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியேற்றம் 636 602,
  5. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலில் சப்தஸ்தான பல்லக்கு வெள்ளோட்டம், தினமணி, 8 பிப்ரவரி 2016
  6. ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் ஏழூர் பல்லக்கு பெருவிழா, மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி, தினமணி, 22 ஏப்ரல் 2016
  7. கோடீஸ்வர சுவாமி கோயிலில் பாதாள சுரங்கப் பாதையைச் சீரமைக்க கோரிக்கை, தினமணி, அக்டோபர் 15, 2015
  8. கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 23, 2015
  9. கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், கும்பகோணத்தில் 14 கோயில்களில் குடமுழுக்கு, தினமணி, அக்டோபர் 27, 2015

இவற்றையும் பார்க்க

குடமுழுக்கிற்கு முன்பாக கோயில்