சு. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:
[[மதுரை]] மாவட்டம் [[ஹார்விபட்டி|ஹார்விபட்டியில்]] சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை|மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில்]] பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.
[[மதுரை]] மாவட்டம் [[ஹார்விபட்டி|ஹார்விபட்டியில்]] சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை|மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில்]] பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.
== அரசியல் செயல்பாடுகள் ==
== அரசியல் செயல்பாடுகள் ==
சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் ]] முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகி, பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/opinion/columns/article26576044.ece | title=தேர்தல் களம் புகும் தமிழ் எழுத்தாளர்கள்! | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 மார்ச் 19 | accessdate=21 மார்ச் 2019 | author=செல்வ புவியரசன்}}</ref>
சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் ]] முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டுள்ளார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] மேடைகளில் கவிஞராக அறிமுகமாகி, பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/opinion/columns/article26576044.ece | title=தேர்தல் களம் புகும் தமிழ் எழுத்தாளர்கள்! | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 மார்ச் 19 | accessdate=21 மார்ச் 2019 | author=செல்வ புவியரசன்}}</ref>


== இவரின் படைப்புகள் ==
== இவரின் படைப்புகள் ==

15:47, 21 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

சு. வெங்கடேசன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.

வாழ்க்கை சுருக்கம்

மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.

அரசியல் செயல்பாடுகள்

சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகி, பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.[1]

இவரின் படைப்புகள்

குற்றச்சாட்டுகள்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தையும் சு.வெங்கடேசன் மறுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.

காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:[2]

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

  1. செல்வ புவியரசன் (2019 மார்ச் 19). "தேர்தல் களம் புகும் தமிழ் எழுத்தாளர்கள்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. மதுரை, மதுரை பதிப்பு (December 27, 2011). "மதுரைக்கு "முதல் மரியாதை':காவல்கோட்டம் புத்தகத்திற்கு "சாகித்ய அகாடமி' விருதுபெற்ற மதுரையைச்சேர்ந்த வெங்கடேசன்". தினமலர் (மதுரை). http://www.dinamalar.com/News_Detail.asp?Id=374795. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._வெங்கடேசன்&oldid=2679885" இலிருந்து மீள்விக்கப்பட்டது