க. ப. அறவாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் கடலங்குடியில் ஒரு டீ கடைக்காரரின் மகனாகப் பிறந்தார்.அவர் ஜார்ஜ் உயர்நிலைப்பள்ளி(இப்போது மேல்நிலை)யில் பயின்றார்.அங்கு இரா.கந்தசாமி என்ற தமிழாசிரியரால் தூண்டப்பட்டார்.அவரே குறிப்பிட்டுள்ளார்.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5: வரிசை 5:
|birth_name =அருணாசலம்
|birth_name =அருணாசலம்
|birth_date = {{birth date|1941|8|9}}
|birth_date = {{birth date|1941|8|9}}
|birth_place = [[திருவாரூர் மாவட்டம்]]
|birth_place = [[திருநெல்வேலி மாவட்டம்]]
|death_date = {{Death date and age|2018|12|23|1941|8|9}}
|death_date = {{Death date and age|2018|12|23|1941|8|9}}
|death_place =
|death_place =

05:00, 23 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

க. ப. அறவாணன்
பிறப்புஅருணாசலம்
(1941-08-09)ஆகத்து 9, 1941
திருநெல்வேலி மாவட்டம்
இறப்புதிசம்பர் 23, 2018(2018-12-23) (அகவை 77)
தேசியம்இந்தியா
அறியப்படுவதுஎழுத்தாளர்

க. ப. அறவாணன் (ஆகத்து 9, 1941 - திசம்பர் 23, 2018) தமிழக எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு, சென்னை அய்யாவு நாயுடு காலனி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி (திருநெல்வேலி மாவட்டம்)[1] ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோமணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாளரும் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.

எழுதிய நூல்கள்

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;

  • சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை[2]
  • தொல்காப்பியக் களஞ்சியம்
  • கவிதை கிழக்கும் மேற்கும்
  • அற்றையநாள் காதலும் வீரமும்
  • தமிழரின் தாயகம்
  • தமிழ்ச் சமுதாய வரலாறு
  • தமிழ் மக்கள் வரலாறு[3]

இதழ் ஆசிரியர்

இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள்

  • அறிவியல் தமிழியம்
  • தேடல்
  • முடியும்
  • கொங்கு

பதிப்பாசிரியர்

இ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.

அறவாணர் விருது

இவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.

விருதுகளும் கௌரவங்களும்

  • தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
  • 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ப._அறவாணன்&oldid=2617628" இலிருந்து மீள்விக்கப்பட்டது