திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
| Weapon =[[பாஞ்சசன்யம்|சங்கு]], [[சக்கரத்தாழ்வார்|சக்கரம்]], [[சாரங்கம்|வில்]] மற்றும் [[கௌமோதகி|கதாயுதம்]] |
| Weapon =[[பாஞ்சசன்யம்|சங்கு]], [[சக்கரத்தாழ்வார்|சக்கரம்]], [[சாரங்கம்|வில்]] மற்றும் [[கௌமோதகி|கதாயுதம்]] |
||
| Consort = ஸ்ரீதேவி, பூதேவி |
| Consort = ஸ்ரீதேவி, பூதேவி |
||
| Mount = [[கருடாழ்வார்|கருடன்]] |
|||
| Planet = |
| Planet = |
||
}} |
}} |
02:54, 11 சூலை 2018 இல் நிலவும் திருத்தம்
திருமால் | |
---|---|
மயிலாப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் சிலை | |
அதிபதி | முல்லை (திணை) |
ஆயுதம் | சங்கு, சக்கரம், வில் மற்றும் கதாயுதம் |
துணை | ஸ்ரீதேவி, பூதேவி |
திருமால் அல்லது பெருமாள் என்பவர் வைணவ சமயத்தின் ஸ்ரீவைஷ்ணவ மரபைப் பின்பற்றுவகள் வணங்கும் ஒரு கடவுள் ஆவார். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆசாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது.
தமிழ் இலக்கியங்களில் திருமால்
தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
பெருமாள் கோவில்கள்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலில் கூறப்படும் 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.[1]
வழிபாடு
வடகலை வைணவர்கள் வேதங்களின் படியும் தென்கலை வைணவர்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் படியும் பெருமாாளுக்கு வழிபாடு செய்கின்றனர்.