அக்னி வசந்த மகாபாரத விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
(edited with ProveIt) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
* முருக்கம்பள்ளம், [[பர்கூர்]]<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=2026068 | title=துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி | publisher=தினமலர் | work=செய்தி | date=2018, மே, 22 | accessdate=7 சூன் 2018}}</ref> |
* முருக்கம்பள்ளம், [[பர்கூர்]]<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=2026068 | title=துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி | publisher=தினமலர் | work=செய்தி | date=2018, மே, 22 | accessdate=7 சூன் 2018}}</ref> |
||
* திருப்போரூர் |
* திருப்போரூர் |
||
* அம்மூர்,[[இராணிப்பேட்டை]] |
* அம்மூர்,[[இராணிப்பேட்டை]] |
||
* நரசிங்கபுரம் |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
09:57, 7 சூன் 2018 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் அல்லது கட்டுரைப் பகுதியில் விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. உங்களால் உதவ முடியுமெனில் இக்கட்டுரையை வளர்த்தெடுப்பதில் உதவுங்கள். இக்கட்டுரை அல்லது பகுதி பல நாட்களுக்கு தொகுக்கப்படாமல் காணப்படின், இந்த வார்ப்புருவை நீக்கி விடுங்கள். நீங்கள் இந்த வார்ப்புருவைச் சேர்த்த தொகுப்பாளராக இருந்து, நீங்கள் இதனைத் தொகுக்கும் போது {{in use}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.
இந்த கட்டுரை Arularasan. G (பேச்சு | பங்களிப்பு) ஆல் 5 ஆண்டுகள் முன்னர் கடைசியாகத் தொகுக்கப்பட்டது. (இற்றைப்படுத்துக) |
அக்னி வசந்த மகாபாரத விழா என்பது வட தமிழகத்தில் திரௌபதி அம்மன் கோயில்கள் அமைந்துள்ள கிராமங்களில் சித்திரை மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானது ஆகும். இந்த விழாவை பெரும்பாலும் நான்கைந்து ஊர்கள் சேர்ந்து நடத்தும். ஊராரின் விருப்பத்தையும் பொருளாதார வளத்தையும் பொறுத்துப் பத்து முதல் பதிமூன்று நாட்கள்வரை இவ்விழா நடைபெறும். இந்த விழா நாட்களில் பகலில் ஊர்ப் பொது இடத்திலே அல்லது பாரத கோயில் என்ற இடத்திலோ மகாபாரத சொற்பொழிவு நடக்கும், இரவில் அது கூத்தாக நடத்தப்படும். இத்திருவிழாவின் சிறப்பம்சமானது விழா நடக்கும் இரவுகளில் கட்டைக் கூத்து எனப்படும் பாரதக் கூத்து நடப்பதுதான்.
கூத்துகள்
விழா நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் கிருஷ்ணன் பிறப்பு, அம்பா அம்பாளிகை கல்யாணம், பாண்டவர் பிறப்பு, வில் வளைப்பு, திரவுபதி கல்யாணம், அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்யு சண்டை, கர்ண மோட்சம், துரியோதனன் படுகளம் போன்ற கூத்துகள் நடக்கும்.[1] கடைசி நாளின் கூத்தான கர்ண மோட்சம் விடிய விடிய நடைபெறும். பொழுது விடியத்துவங்கும்போது கூத்தில் கர்ணனின் உயிர் பிரியும். அதையடுத்து அன்றைய பகல் பொழுது துரியோதனன் படுகளம் கூத்து நடக்கும். இந்தக் கூத்தின் முடிவில் தரையில் மண்ணால் பிரம்மாண்டமாக வடிக்கப்பட்ட துரியோதனனின் உருவத்தின் தொடையானது பீமனால் பிளக்கப்படுகிறது.[2] அன்று மாலை தீமிதி விழாவும் மறுநாள் தர்மர் பட்டாபிசேகம் நிகழ்ச்சியும் நடந்து விழா முடிகிறது.[3]
தமிழகத்தில் இந்த விழா நடக்கும் சில ஊர்கள்
- கிருட்டிணகிரி[4]
- இராயக்கோட்டை
- ஒழுகூர், வாலாசாபேட்டை
- வரட்டனப்பள்ளி, பர்கூர்
- முருக்கம்பள்ளம், பர்கூர்[5]
- திருப்போரூர்
- அம்மூர்,இராணிப்பேட்டை
- நரசிங்கபுரம்
மேற்கோள்கள்
- ↑ "துரியோதனன் படுகளம் விழா ஏராளமான பக்தர்கள் கண்டுகளிப்பு". செய்தி. தினகரன். 2018 மே 7. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ பிருந்தா சீனிவாசன் (2016 மே 29). "துயரம் ததும்பும் துரியோதனன் படுகளம்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "அம்மூர் கோயிலில் துரியோதனன் படுகளம்". செய்தி. தினமணி. 2017 மே 29. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு". செய்தி. தினமலர். 2017 மே 29. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி". செய்தி. தினமலர். 2018, மே, 22. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help)