சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு |
17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> |
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்--> |
||
| பெயர் = திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில் |
| பெயர் = திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில் |
||
| படிமம் = |
| படிமம் = Thilagaipathi temple1.jpg |
||
| படிமத்_தலைப்பு = |
| படிமத்_தலைப்பு = |
||
| படிம_அளவு = |
| படிம_அளவு = |
06:28, 24 ஏப்பிரல் 2018 இல் நிலவும் திருத்தம்
தேவாரம் பாடல் பெற்ற திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திலதர்ப்பனபுரி[1],திலதைப்பதி |
பெயர்: | திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | சிதலப்பதி (செதலபதி) |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முக்தீஸ்வரர் (மந்தாரவனேஸ்வரர்) |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
தாயார்: | பொற்கொடியம்மை (சொர்ணவல்லி) |
தல விருட்சம்: | மந்தாரை |
தீர்த்தம்: | சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு |
ஆகமம்: | சிவாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | சிவராத்திரி, திருக்கார்த்திகை. |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
திலதைப்பதி - சிதலப்பதி முத்தீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 58ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.
இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிதலப்பதி எனும் ஊரில் அமைந்துள்ளது.
தலவரலாறு
திருமாலின் அவதாரமான இராமன் மற்றும் லட்சுமணர் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்)
அமைப்பு
வாசலில் சிறிய கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. அடுத்து உள்ளே செல்லும்போது பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. திருச்சுற்றில் விநாயகர், ராமர், பிதுர் லிங்கங்கள், நற்சோதி மன்னர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், காசி விசுவநாதர், நாகர், கஜலட்சுமி, மந்தராவனேஸ்வரர், நவக்கிரகம், நால்வர், பைரவர், சூரியன், சந்திரன், ஸ்ரீதேவி பெருமாள் பூதேவி ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு இடது புறமாக சுவர்ணவள்ளி அம்மன் சன்னதி உள்ளது.
வழிபட்டோர்
சூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர் முதலானோர்
சிறப்பு
- இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார்
ஆதிவிநாயகர் பற்றிய தலபுராணப்பாடல் :
<peom> அங்கும் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத் துங்கமா முகமும்தூய துதிக்கரம் தானுமின்றி பங்கயப் பழனவேலித் திலதையாம் பதியின் மேவும் புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி </poem>
அருகிலுள்ள திருத்தலம்
- திருக்கோயிலுக்கு வெளியே அழகீசர் குடிகொண்ட அழகநாதர் திருக்கோயில் உள்ளது
இவற்றையும் பார்க்க
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- ↑ http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2014/08/28/ஆதிவிநாயகப்-பெருமான்/article2402787.ece
வெளி இணைப்புகள்
- அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில் தளம்
- www.kamakoti.org/tamil/tirumurai162.htm
சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 58 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 58 |