கற்குவேல் அய்யனார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 8°30′56″N 78°00′37″E / 8.51556°N 78.01028°E / 8.51556; 78.01028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 86: வரிசை 86:
[[பங்குனி உத்திரம்|பங்குனி உத்திர]] திருவிழாவும் இங்கு அதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.<ref> [http://www.dinamalar.com/news_detail.asp?id=671879 தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா, தினமலர், 21 மார்ச் 2013] </ref>
[[பங்குனி உத்திரம்|பங்குனி உத்திர]] திருவிழாவும் இங்கு அதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.<ref> [http://www.dinamalar.com/news_detail.asp?id=671879 தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா, தினமலர், 21 மார்ச் 2013] </ref>


இந்த கோயில் சான்றோர் இன (நாடார் சமுதாய) குல தெய்வ கோயிலாகும்.
இந்த கோயில் சான்றோர்களின் தெய்வ கோயிலாகும்.


நாடார் இன மக்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்பவர்கள். மற்ற நேரங்களை விட பங்குனி உத்திரம் அன்று கட்டாயம் அய்யன் அருள் பெற சான்றோர் இன பெருமக்கள் இங்கு வருகை தருவார்கள்.
மக்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்பவர்கள். மற்ற நேரங்களை விட பங்குனி உத்திரம் அன்று கட்டாயம் அய்யன் அருள் பெற சான்றோர் இன பெருமக்கள் இங்கு வருகை தருவார்கள்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

11:22, 16 நவம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

கற்குவேல் அய்யனார் கோயில்
கற்குவேல் அய்யனார் கோயில் is located in தமிழ் நாடு
கற்குவேல் அய்யனார் கோயில்
கற்குவேல் அய்யனார் கோயில்
தமிழ்நாட்டில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:8°30′56″N 78°00′37″E / 8.51556°N 78.01028°E / 8.51556; 78.01028
பெயர்
வேறு பெயர்(கள்):கருக்குவாலை அய்யன்
பெயர்:கற்கோலய்யன்[1]
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தூத்துக்குடி
அமைவு:தேரிக்குடியிருப்பு
கோயில் தகவல்கள்
மூலவர்:கற்குவேல் அய்யனார்
சிறப்பு திருவிழாக்கள்:கள்ளர் வெட்டு திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கலை
இணையதளம்:http://karkuvelayyanartemple.tnhrce.in/

கற்குவேல் அய்யனார் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பழமையான கிராமத்து சான்றோர்(கோவிலாகும். தமிழ் நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள காயாமொழி என்ற ஊரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் குதிரைமொழி-தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. [2]

பெயர்க் காரணம்

இத்தலத்தில் குடிகொண்டிருக்கும் அய்யனார் கற்குவா என்ற மரத்தில் இருந்து தோன்றியாதாக ஐதீகம். கற்குவா அய்யன் என்றும், கற்கு வேலப்பன் என்றும், கருக்குவாலை அய்யன் என்றும் பலப் பெயர்கள் இவருக்கு உண்டு. இப்போது கற்குவேல் அய்யனார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.[3]

வரலாறு

இந்தக் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை நிறைந்தது. தேரிக்குடியிருப்பு என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதிவீர ரான சூர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனிடம் அமைச்சராக இருந்தவர் அய்யனார். இவர் சிவன் மற்றும் விஷ்ணுவின் மானிட வடிவாக பார்க்கப்படுகிறார்.

மூலவர்

பின்னர் தனியாக ஒரு கோயில் கட்டினர். அதற்கு கற்குவேல் அய்யனார் கோயில் என்று பெயரிட்டனர். அதில் பூர்ணம், பொற்கமலம் என்ற இரு தேவியருடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் அய்யனார்.

அதிசய எலுமிச்சைமரம்

அந்த நாட்டில் ஒரு அதிசய எலுமிச்சைமரம் இருந்தது. அந்த மரத்தில் தினம் ஒருமுறை மட்டுமே அந்த எலுமிச்சைபழம் காய்க்கும். அந்த பழத்திற்கு தெய்வீக சக்தி இருப்பதாகவும் அதை உண்டால் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைப்பதாகவும் மன்னன் நம்பினான். அந்த பழம் தன்னைத் தவிர வேறு யாரும் புசித்துவிடக் கூடாது என்பதற்காக பலத்த காவல் போட்டிருந்தான்.

காணாமல் போன எலுமிச்சைபழம்

அந்த மரத்தில் அந்த தினத்திற்கான பழம் ஒன்று காய்த்திருந்தது. அந்த ஊரில் ஒரு விதவைப் பெண் வாழ்ந்து வந்தாள். அவள் தினமும் விடிவதற்கு முன்பே ஊர் கிணற்றில் நீர் எடுத்து, வீடு திரும்புவாள். அன்றும் வழக்கம்போல் அதிகாலையில் கிணற்றுக்கு நீர் எடுக்க சென்றாள். மரத்தில் பழுத்திருந்த தெய்வீக கனி தானாக கிணற்று நீரில் விழுந்தது. அதை கவனிக்காமல் நீர் இறைக்கும்போது நீரோடு பழமும் விதவையின் குடத்தில் வந்து சேர்ந்தது. அதை கவனிக்காத அந்த பெண் கனியோடு வீட்டிற்கு சென்று விட்டாள்.

மறுநாள் கனி களவு போயிருப்பதை அறிந்த காவலர்கள் வீடு வீடாக தேடினர். வீட்டுக்குள் காவலர்கள் நுழைய முற்படும் போது அய்யனார் தடுத்தார். அறியாப் பெண் தவறேதும் புரியவில்லை என்றுரைத்தார். மன்னன் அவற்றை காதில் வாங்கவில்லை. வீரர்கள் சோதனையிட்ட போது விதவை வீட்டு தண்ணீர் குடத்தில் அந்த கனி இருப்பதைக் கண்டனர். சினம் கொண்ட மன்னன் விதவைக்கு மரண தண்டனை வழங்கினான். தான் திருடவில்லை என்று அந்த பெண் எவ்வளவோ எடுத்துச் சொல்கிறாள். மன்னன் கேட்கவில்லை.

ஒன்றுமறியாத அப்பெண் தன்னை குற்றமற்றவள் என்று நிரூபிக்க முடியாமல் சாபம் கொடுக்கிறாள். இந்த நாடு மண்மாரி பொழிந்து அழிந்து போகும்படி சாபமிடுகிறாள். தனக்கு ஆதரவாக பேசிய அய்யனார் இருக்குமிடம் மட்டும் அழியாதிருக்கும்படியும், அவரது பரிவாரங்கள் மென்மேலும் புகழ் சேரவும் வாழ்த்திவிட்டு மடிந்தாள்.[4]

நாடு முழுவதும் செந்நிற மண்மாரி பொழிந்தது. அய்யனார் இருந்த இடம் மட்டும் தப்பித்தது. எல்லாம் அழிந்த பின் அய்யனாரும் அங்கிருந்த கருக்குவா மரத்தினுள் புகுந்து தன்னை அதனுள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

சில நூற்றாண்டுகள் கடந்தபின், மீண்டும் கிராமம் தழைத்தது. மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது. அப்போது சிலர் கருக்குவா மரத்தை வெட்ட முயன்றனர். வெட்டிய இடத்தில் இரத்தம் கசிந்தது. அப்போது மரத்தினுள் இருந்து அசரிரீ ஒன்று 'அய்யனார் இந்த மரத்தில் வாழ்கிறார்.' என்றது. கிராமத்தினர் அந்த மரத்தை வழிபட தொடங்கினர்.

திருவிழாக்கள்

இக்கோயிலில் பலவகையான திருவிழாக்கள் நடைபெற்றுவருகின்றன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவையாகும்.

கள்ளர் வெட்டுத் திருவிழா

கள்ளர் வெட்டுத் திருவிழா என்பது வருடத்தில் ஆறு நாட்கள் தொடர்ச்சியாக கொண்டாடப்படுவது. தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் கடைசி ஐந்து நாட்களும் மார்கழி மாதத்தின் முதலாம் நாளும் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஆறாம் நாள் திருவிழாவான கள்ளர் வெட்டுத் திருநாள்தான் மிகப் பிரசித்திப் பெற்றது. கள்ளர் வெட்டு அன்று காலையில் பால்குடம் எடுத்தல், அதன்பின் தாமிரபரணி நதியின் தீர்த்தம் யானை மீது வெள்ளிக் குடத்தில் கொண்டு வருதல். அதனைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.[5]


மாலை 4 மணிக்கு 'கள்ளர் வெட்டு' வைபவம் நடைபெறுகிறது. இளநீரைதான் இங்கு கள்ளராக உருவகப் படுத்தப் படுகிறது. கோவிலின் பின்புறமுள்ள செம்மண் தேரியில் இந்த இளநீர் கள்ளராக வெட்டப் படுகிறது. வெட்டப் பட்ட இளநீரில் இருந்து மண்ணில் விழும் நீர் புனிதமாக கருதப்படுகிறது.[6]


நீர் பட்ட மண்ணை பக்தர்கள் எடுத்துச் சென்று தங்கள் விளைநிலங்களில் தூவுகிறார்கள். கல்லாப் பெட்டியில் வைத்துக் கொள்கிறார்கள். மகசூல் கூடும். வியாபாரம் செழிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை.

பங்குனி உத்திரம்

பங்குனி உத்திர திருவிழாவும் இங்கு அதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.[7]

இந்த கோயில் சான்றோர்களின் தெய்வ கோயிலாகும்.

மக்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்பவர்கள். மற்ற நேரங்களை விட பங்குனி உத்திரம் அன்று கட்டாயம் அய்யன் அருள் பெற சான்றோர் இன பெருமக்கள் இங்கு வருகை தருவார்கள்.

மேற்கோள்கள்