ஒப்பாரிப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
removed Category:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:ஒன்றிணைக்கப்பட வேண்டிய க... |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்), |
நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்), |
||
ஜோதி புக் செண்டர், சென்னை. |
ஜோதி புக் செண்டர், சென்னை. |
||
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் |
[[பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
05:03, 2 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ [[:ஒப்பாரிப் பாடல்|ஒப்பாரிப் பாடல்]] உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
ஒப்பாரிச் சொல் அமைப்பு
இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம் புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் படுகின்றனர். ஒப்பு + ஆரி எனப் பிரித்து அழுகைப் பாட்டு எனப் பொருள் கூறியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி. இறந்தவரை ஒப்பு சொல்லிப் பாடுவது ஒப்பாரி எனப்படும். இலக்கியங்களில் ஒப்பாரிப் பாடல்கள் “ இளிவே இழவே அசைவே வறுமையென விளியில் கொள்கை அழுகை நான்கே”
என்று அழுகைப்பாட்டிற்கு இல்லக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர். ஒப்பாரிப்பாடலை, “கையறு நிலை “ என்று சங்கஇலக்கியங்கள் கூறுகின்றன.
“ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின் கற்றோர் உரைப்பது கையறு நிலையே “
எனப் பன்னிரு பாட்டில் கையறு நிலைக்கு விளக்கம் தருகிறது.
பாரி இறந்ததும் அவன் மகள் “ அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்.....என்தையுமிலமே”
என வரும் புறநானுற்றுப் பாடலும், அதியமான் இறந்த பிறகு
“ சிறியகள் பெறினே எமக்கீயு மன்னே பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகில்துண்ணும்”
என்ற பாடலும் கையறு நிலைப்பாடல்கள் ஆகும்.
மேற்கோள்கள்
நாடு போற்றும் நாட்டுப்புறப் பாடல்கள்,முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன், (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்), ஜோதி புக் செண்டர், சென்னை.