சிந்தித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 17: வரிசை 17:


[[File:Eugene de Blaas A Pensive Moment.jpg|thumb|right|228px|''A Pensive Moment'' (1904), by [[Eugene de Blaas]]]]
[[File:Eugene de Blaas A Pensive Moment.jpg|thumb|right|228px|''A Pensive Moment'' (1904), by [[Eugene de Blaas]]]]
மேற் கூறப்பட்ட கருத்துகளிலிருந்து அடிப்படையான நடைமுறைச் சார்ந்த செயல்பாடுகள், உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட சிந்தனை அமைப்புகளின் வீச்சு பற்றி அறிய முடிகிறது.. இருப்பினும் தீர்வு காண முடியாத மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடங்கியிருத்தல் கோட்பாட்டின்படி அணுகுவதன் மூலம் வெல்லவோ அல்லது புறந்தள்ளவோ முடியும். இதனை ஹீடெக்கர்(Heidegger), பியாஜே(Piaget), வைகோட்ஸ்கி(Vygotsky), மெரியூ-பான்ட்டி(Merleau-Ponty) மற்றும் பொருள் பயன்வழிக் கொள்கையர் ஜான் டூயீ(John Dewey) ஆகியோர் உரூதிப்படித்தியுள்ளனர்.
The word ''thought'' comes from [[Old English]] ''þoht'', or ''geþoht'', from stem of ''þencan'' "to conceive of in the mind, consider".<ref>{{cite web |url=http://www.etymonline.com/index.php?search=Thought |title=Etymology of Thought |accessdate=2009-05-22 |last=Harper |first=Douglas |work=Online Etymology Dictionary}}</ref>

மேற் கூறப்பட்ட கருத்துகளிலிருந்து அடிப்படையான நடைமுறைச் சார்ந்த செயல்பாடுகள், உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட சிந்தனை அமைப்புகளின் வீச்சு பற்றி அறிய முடிகிறது.. இருப்பினும் தீர்வு காண முடியாத மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடங்கியிருத்தல் கோட்பாட்டின்படி அணுகுவதன் மூலம் வெல்லவோ அல்லது புறந்தள்ளவோ முடியும். இதனை ஹீடெக்கர்(Heidegger), பியாஜே(Piaget), வைகோட்ஸ்கி(Vygotsky), மெரியூ-பான்ட்டி(Merleau-Ponty) மற்றும் பொருள் பயன்வழிக் கொள்கையர் ஜான் டூயீ(John Dewey) ஆகியோர் உரூதிப்படித்தியுள்ளனர்.


மனதைத் தனியாகப் பிரித்து, அதனை தனியாக பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. மாறாக மனம், உள்ளடங்கிய செயல்பாட்டுக் கருவி, எதிர்நோக்கும் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரச்சினையை தீர்க்கும் முறை சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. மனம் சார்ந்த நடைமுறைச் சார்ந்த பகுப்பாய்வினை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினை தீர்ப்பது இயலாததாகும்.
மனதைத் தனியாகப் பிரித்து, அதனை தனியாக பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. மாறாக மனம், உள்ளடங்கிய செயல்பாட்டுக் கருவி, எதிர்நோக்கும் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரச்சினையை தீர்க்கும் முறை சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. மனம் சார்ந்த நடைமுறைச் சார்ந்த பகுப்பாய்வினை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினை தீர்ப்பது இயலாததாகும்.

14:57, 6 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

Girl with a Book by José Ferraz de Almeida Júnior

வார்ப்புரு:Neuropsychology

சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.

ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. அறிவியல் நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது கோட்பாடு இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஒரு அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.

இருப்பினும் மனிதர் எப்படி சிந்திக்கிறார்கள்? மூளையின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன.

நடைமுறைச் சார்ந்த கொள்கை அல்லது உள்ளடங்கியிருத்தல் கொள்கை

A Pensive Moment (1904), by Eugene de Blaas

மேற் கூறப்பட்ட கருத்துகளிலிருந்து அடிப்படையான நடைமுறைச் சார்ந்த செயல்பாடுகள், உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட சிந்தனை அமைப்புகளின் வீச்சு பற்றி அறிய முடிகிறது.. இருப்பினும் தீர்வு காண முடியாத மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடங்கியிருத்தல் கோட்பாட்டின்படி அணுகுவதன் மூலம் வெல்லவோ அல்லது புறந்தள்ளவோ முடியும். இதனை ஹீடெக்கர்(Heidegger), பியாஜே(Piaget), வைகோட்ஸ்கி(Vygotsky), மெரியூ-பான்ட்டி(Merleau-Ponty) மற்றும் பொருள் பயன்வழிக் கொள்கையர் ஜான் டூயீ(John Dewey) ஆகியோர் உரூதிப்படித்தியுள்ளனர்.

மனதைத் தனியாகப் பிரித்து, அதனை தனியாக பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. மாறாக மனம், உள்ளடங்கிய செயல்பாட்டுக் கருவி, எதிர்நோக்கும் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரச்சினையை தீர்க்கும் முறை சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. மனம் சார்ந்த நடைமுறைச் சார்ந்த பகுப்பாய்வினை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினை தீர்ப்பது இயலாததாகும்.

உயிரியல்:

நியூரான்கள் எனும் மூலத்திலிருந்து

நியூரான் (நியூரோன் எனப்படும் நரம்பு செல்) என்பது நரம்பு மண்டலத்தில் கிளர்வுற்ற ஒரு செல் ஆகும். இது மின்வேதி சமிக்ஞை மூலம் தகவல்களை கடத்துவதன் மூலம் செயல்பாடுகளை நிகழ்த்துகிறது. மூளை, முதுகெலும்பிகளின் தண்டுவட நரம்பு நாண், முதுகெலும்பிகளின் மேற்புற நரம்பு நாண், புற நரம்புகள் ஆகியவற்றில் நியூரான்கள் மையக் கூறாகச் செயல்படுகின்றன. தொடுவுணர்வு, ஒலியுணர்வு, ஒளியுணர்வு, போன்ற பல்வேறு உணர்வு உறுப்புகளால் தூண்டப்படும் சமிக்ஞைகளையும் உணர்வுகளைத் தூண்டும் தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச் செல்லும் சிறப்பு நியூரான்ள்கள் உள்ளன. இயக்குநரம்புக்கலங்கள் மூளை மற்றும் தண்டுவட நரம்பு நாண்களிலிருந்து சமிக்ஞைகளை பெற்று தசைகளில் குறுக்கங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் அவை சுரப்பிகளையும் பாதிக்கின்றன. மூளை மற்றும் தண்டுவட நரம்புகளில் உள்ள நியூரான்கள் இடைநியூரான்கள் இணைக்கின்றன. நியூரான்கள் தூண்டல்களுக்கேற்ற துலங்கள்களை ஏற்படுத்தி தூண்டல் தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகின்றன. இத்தகவல்கள் நியூரான்களால் செயல்முறை; பதப்படுத்தப்பட்டு  செயற்படுத்தப்பட்டு உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. நியூரான்கள் உடல் புற அணு பிரிதல் நிகழ்வுக்கு உட்படுவதில்லை. மேலும் அழிந்தபின் எப்பொழுதும் இடப்பெயற்சி செய்யப்படுவதில்லை. உடுக்கலன் சில சமயங்களில் பல்ஆற்றல்மிக்கவையாக உள்ளன. எனவே அவை நியூரான்களாக மாறுதல் பொதுவான நிகழ்வாக உள்ளது.

மனவியல்

ஒரு ரயில் பயணத்தில் மனிதன் சிந்திக்கிறான். சுவரில் உள்ள கருத்தோவியம் "'to think for myself' became less favorable".'என்னைப்பற்றி நானே நினைக்கும்போது எனக்கு சாதகமாக நான் நினைப்பது மிகவும் குறைவான அளவே ஆகும்.

அறிதல் தன்மை மனவியல் எனும் மூலத்திலிருந்து

கேள்விக்கு பதில் அல்லது ஒரு நடைமுறை பிரச்சனைக்கு அறிவார்ந்த செயல்படுத்தக்கூடிய செறிவான தீர்வு காணும் நோக்கம் கொண்டவர்களே உளவியலாளர்கள். அறிவாற்றல் உளவியல் அல்லது அறிதல் தன்மை மனவியல் என்பது உளவியலின் ஒரு பிரிவாகும். இது சிக்கல் தீர்த்தல், நினைவகம் மற்றும் மொழி போன்ற பல உள்ளக மன செயல்முறைகளை ஆராய்ந்து புதிய கூறுகளைக் கண்டறியும் பிரிவாகும். இந்த அணுகுமுறையிலிருந்து எடுக்கப்பட்ட சிந்தனையானது அறிதல் தன்மை அல்லது உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்குதல் என்று அறியப்படுகிறது. இது, மனதில் தகவல் செயலாக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. குழந்தைகளின் புலனுணர்வு வளர்ச்சியை விவரிக்கும் நிலை / கட்டங்கள் சார்ந்த கோட்பாடுகளை மாக்ஸ் வெர்தீமர்(Max Wertheimer), உல்ஃப்காங்க் கோலர்(Wolfgang Köhler) மற்றும் குர்த் கோஃபிகா(Kurt Koffka) போன்றோரின் பண்பேற்ற கெஸ்டால்ட் உளவியல் (ஜீன் ப்யாஜே)Jean Piaget வின் ஆய்வு வெளிப்பாடுகள் நன்கு பிரதிபலிக்கின்றன.

தனிநபர் சார்ந்த மற்றும் தங்களின் புரிந்துணர்தல், கண்டறிதல், மற்றும் பிரச்சினைகளை தீர்த்தல் போன்ற பல நிலைகளில், அறிதல் தன்மை மனவியலாளர்கள் மனோவியல் முறைகளையும், தூண்டல் துலங்கல் முறைகளையும் மற்றும் சோதனை அணுகுமுறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுச் சிந்தனைகளின் கூறுகள்
படைப்பாற்றல் கண்டுபிடித்தல் சிக்கல்களுக்கான தீர்வு காணல்
கற்பனைத் திறன் வளர்த்தல் காரணம் அறிதல் புதியன புனைதல்
முடிவெடுத்தல் உட்கூறு தேர்வு செய்தல் பகுத்தறிவு உளவியல் ,
அறிவாற்றல் கோட்பாடானது, சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பின்வருமாறு வகைப்படுத்துகிறது
படிமுறைத் தீர்வு விதிகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் தீர்வுகளை அடைய முடியும்
கண்டுணர்வு முறை விதிகளைப் புரிந்துகொள்ள முடியும் ஆனால் அவை எப்பொழுதும் தீர்வுகளுக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை

படிமுறைத் தீர்வு மனிதனின் நடத்தை முறைகளைத் தூண்டி கணினிகளிலின் வாயிலாக மனிதனால் பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தக்கூடிய புலனுணர்வு சார்ந்த மனவியலிலிருந்து அறிவாற்றல் சார்ந்த அறிவியல் வேறுபடுகிறது. மற்ற நேர்வுகளில் தீர்வுகள், உட்காட்சி மூலமோ அல்லது தொடர்புடைய சிந்தனைகளால் ஏற்படும் திடீர் விழிப்புணர்வு மூலமோ மூலமோ தீர்வுகள் ஏற்படலாம்.

ஜீன் பியாஜே என்பார் மேற்கொன்ட "பிறந்ததிலிருந்து முதிர்வு வரையிலான சிந்தனை வளர்ச்சி" என்ற ஆய்வு வளர்ச்சி உளவியலில் ஒரு முன்னோடி ஆய்வு ஆகும். அவரது கோட்பாடு, சிந்தனை சூழல் நடவடிக்கைகளின் அடிப்படையில் தொன்றும் புலனுணர்வு வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. திட்ட செயல்களின் வாயிலாகக் கிடைக்கும் கருப்பொருட்களின் அடிப்படையிலான கிரகிப்புகளின் மூலம் சுற்றுச்சூழல் புரிந்துகொள்ளப்படுவதாகவும், அதனை முன்னிறுத்தி அமைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் அதிக அளவு வீழ்ச்சியடைவதாகவும் பியாஜெட் அறிவுறுத்துகிறார். சமச்சீரற்ற தன்மை மற்றும் இடவசதி மற்றும் பொருத்தப்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான இடைவிளக்கத்தின் விளைவாக, தோன்றும், அனுமானம், புரிந்துணர்வு, ஒவ்வொருவரின் குணாம்சம், மற்றும் சிக்கலான தன்மை ஆகியவற்றில் இருந்து வேறுபடுகின்ற நிலைகளின் மூலம் சிந்தனை உருவாகிறது. குழந்தை பருவத்தில், முதல் இரண்டு ஆண்டுகளில் ஆரம்பகால வாழ்க்கையின் உணர்திறன் நிலைகளில் உணர்வுகள் மற்றும் செயல்களின் அடிப்படையில்தான் சிந்தனை உருவாகிறது. இதன் விளைவாக, தர்க்கரீதியாக அமைக்கப்படும் உறுதியான செயல்பாட்டின் நிலைமையில் திட்டமிடப்படும் கட்டமைப்புகள் மீதும், பண்புகள் மீதும் ஒழுங்கமைக்கப்படும் முறையான செயல்பாடுகள் உறுதிப்படுகின்றன. சமீப ஆண்டுகளில், சிந்தனை பற்றிய பியாஜேயின் கருத்துருவானது தகவல் செயலாக்க கருத்தாக்கங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. எனவே, சிந்தனையானது தகவல் பிரதிநிதித்துவம் மற்றும் செயலாக்க பொறுப்பு என்னும் செயல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இந்த கருத்தின்படி, செயலாக்க வேகம், புலனுணர்வு கட்டுப்பாடு மற்றும் பணி நினைவகம் ஆகியவை சிந்தனைச் செயலின் முக்கிய கூறுகளாகும். பியாஜேயின் நவீன கோட்பாடுகளின்படி, சிந்தனைகளின் வளர்ச்சி வேகத்திலிருந்தும், அறிவாற்றல் கட்டுப்பாட்டிலிருந்தும், உழைப்பு நினைவகத்தை அதிகரிப்பதற்கு புலனுணர்வு வளர்ச்சி அவசியமாகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தித்தல்&oldid=2349372" இலிருந்து மீள்விக்கப்பட்டது