அமெரிக்க உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38: வரிசை 38:


==கூட்டமைப்பின் படைகள்==
==கூட்டமைப்பின் படைகள்==
1861 ஏப்ரல் 12 ஆம் நாள் கூட்டமைப்பின் படைகள் [[தென் கரோலினா]]வின் [[சம்ட்டர் கோட்டை]]யில் இருந்த ஐக்கிய அமெரிக்காவின் படைகளைத் தாக்கியபோது போர் வெடித்தது. ஆபிரகாம் லிங்கன் பெரிய தொண்டர் போர்ப்படையைத் திரட்டினார். இந் நிலையில் மேலும் நான்கு தென் மாநிலங்கள் பிரிவதாக அறிவித்தன. போரின் முதல் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா எல்லை மாநிலங்களில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியதுடன், தென் மாநிலங்கள் மீதான கடல்வழித் தடையையும் ஏற்படுத்தியது. இரு பகுதியினரும் படைகளையும் பிற வளங்களையும் குவித்து வந்தனர். 1862 இல் இடம்பெற்ற, [[ஷைலோ போர்]] (Battle of Shiloh), [[ஆண்டீடாம் போர்]] (Battle of Antietam) போன்ற போர்களில் ஐக்கிய அமெரிக்கா முன்ன கண்டிராத அளவுக்குப் பெருமளவு இழப்புகள் ஏற்பட்டன. 1862 செப்டெம்பரில், தென் மாநிலங்களில் அடிமை முறையை ஒழிப்பதே போரின் நோக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் படைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.<ref name="தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ | accessdate=சூலை 6, 2017}}</ref>
1861 ஏப்ரல் 12 ஆம் நாள் கூட்டமைப்பின் படைகள் [[தென் கரோலினா]]வின் [[சம்ட்டர் கோட்டை]]யில் இருந்த ஐக்கிய அமெரிக்காவின் படைகளைத் தாக்கியபோது போர் வெடித்தது. ஆபிரகாம் லிங்கன் பெரிய தொண்டர் போர்ப்படையைத் திரட்டினார். இந் நிலையில் மேலும் நான்கு தென் மாநிலங்கள் பிரிவதாக அறிவித்தன. போரின் முதல் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா எல்லை மாநிலங்களில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியதுடன், தென் மாநிலங்கள் மீதான கடல்வழித் தடையையும் ஏற்படுத்தியது. இரு பகுதியினரும் படைகளையும் பிற வளங்களையும் குவித்து வந்தனர். 1862 இல் இடம்பெற்ற, [[ஷைலோ போர்]] (Battle of Shiloh), [[ஆண்டீடாம் போர்]] (Battle of Antietam) போன்ற போர்களில் ஐக்கிய அமெரிக்கா முன்ன கண்டிராத அளவுக்குப் பெருமளவு இழப்புகள் ஏற்பட்டன. 1862 செப்டெம்பரில், தென் மாநிலங்களில் அடிமை முறையை ஒழிப்பதே போரின் நோக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் படைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.tamilpaper.net/%3Ftag%3D%25E0%25AE%2589%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D-%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25B0%25E0%25AF%258D&ved=0ahUKEwjo__ypp_PUAhUFO48KHayhBSk4HhAWCCcwBA&usg=AFQjCNGTIfQYmmOvpnY9822MYJmNKTdX7Q">{{cite web | url=http://www.tamilpaper.net/?p=1003 | title=தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ | accessdate=சூலை 6, 2017}}</ref>


==ராபர்ட் ஈ லீ==
==ராபர்ட் ஈ லீ==

23:46, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

அமெரிக்க உள்நாட்டுப்போர்

இடது மேல்: டெனெசியில், ஸ்டோன்ஸ் ஆற்றில் ரோஸ்கிரான்ஸ்; வலது மேல்: கெட்டிஸ்பர்க்கில் கூட்டமைப்புக் கைதிகள்; கீழ்: ஆர்க்கன்சாசில், ஹிண்ட்மான் துறைப் போர்
நாள் ஏப்ரல் 12 1861ஏப்ரல் 9 1865
இடம் முக்கியமாக தென் அமெரிக்க மாநிலங்களில்
ஐக்கிய அமெரிக்காவின் வெற்றி; மீளமைப்பு; அடிமை முறை ஒழிக்கப்பட்டது
பிரிவினர்

ஐக்கிய அமெரிக்க நாடுகள் ("ஐக்கிய அமெரிக்கா")

அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ("கூட்டமைப்பு")

தளபதிகள், தலைவர்கள்
ஆபிரகாம் லிங்கன்,
யுலிசீஸ் கிராண்ட்
ஜெபர்சன் டேவிஸ்,
ராபர்ட் ஈ. லீ
பலம்
2,200,000 1,064,000
இழப்புகள்
110,000 போரில் சாவு,
360,000 மொத்த இறப்பு,[1]
275,200 காயம்
93,000 போரில் சாவு,
258,000 மொத்த இறப்பு,
137,000+ காயம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் (1861–1865) அல்லது மாநிலங்களுக்கு இடையேயான போர் எனப்படும் இப் போர், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும், தென் மாநிலங்களில், ஜெபர்சன் டேவிஸ் என்பவர் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உள்நாட்டுப் போர் ஆகும்.[2]

வரலாறு

ஐக்கிய அமெரிக்க நாடுகள் எல்லாச் சுதந்திர மாநிலங்களையும், அடிமை முறை நிலவிய ஐந்து எல்லை மாநிலங்களையும் உள்ளடக்கியது. இது ஆபிரகாம் லிங்கனினதும் அவர் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியினதும் தலைமையில் இருந்தது. குடியரசுக் கட்சியினர் ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப் பகுதிகளில் அடிமை முறை விரிவாக்கப்படுவதை எதிர்த்து வந்தனர்.[3]

அடிமை முறை

19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வடபகுதி மாநிலங்கள் பலவும் அடிமைமுறையினை ஒழித்தவர்கள் பட்டியலில் இணைந்தன. ஆனால், அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றுகூட அடிமைமுறையினை ஒழித்திட முன்வரவில்லை. அமெரிக்காவில் இருந்த அடிமைகளில் பெரும்பாலோனோர் தென் மாநிலங்களிலிருந்த பண்ணைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்துவந்தனர். தென் மாநிலங்களின் பொருளாதாரம் பண்ணையடிமை முறையையே அதிகம் சார்ந்திருந்தது. அடிமைகளின் உழைப்பில் வாழ்ந்துகொண்டிருந்த தென்மாநில அமெரிக்கர்களுக்கு அவர்களை விடுதலைசெய்து தங்கள் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க விரும்பவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட விவாதத்துக்குப் பிறகு, ஓர் உடன்பாடு ஏற்பட்டது. தென் மாநிலங்களில் இருந்த அடிமைமுறையில் மாற்றமேதுமில்லை. அதேசமயம், வட மாநிலங்களில் அம்முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.[4]

குடியரசுக் கட்சியின் வெற்றி

இந்த உடன்பாடு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்கா மேற்கு நோக்கி அப்போது வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. சில ஆண்டுகளில் புதிய மாநிலங்கள் ஒவ்வொன்றாக அமெரிக்கக் குடியரசில் இணைந்துகொண்டிருந்தன. இந்தப் புதிதாய் இணைந்த மாநிலங்களில் பண்ணை அடிமைமுறையைத் தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து இரு தரப்பினருக்குமிடையில் மறுபடியும் பிரச்சினைத் தோன்றியது. இந்த நிலையில்தான் அடிமைமுறையானது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டுமென்கிற கோட்பாட்டை வலியுறுத்தியவர் ஆப்ரஹாம் லிங்கன் ஆவார். 1860 இல் நிகழ்ந்த அமெரிக்கத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 1861 இல் அமெரிக்கக் குடியரசின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. லிங்கன் தலைவரானால் தங்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகுதியாகுமென்று ஏழு தென் மாநிலங்கள் அச்சப்பட்டன. அவை, லிங்கனை குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்தன. மேலும், அவை அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து போவதாகவும் தம்மை அறிவித்துக் கொண்டன. கூட்டமைப்பு (கான்ஃபெடரசி) என்ற பெயரில் நாடு ஒன்றை அத் தென் மாநிலங்கள் ஏற்படுத்திக் கொண்டன. இந்த அறிவிப்பு ஆபிரகாம் லிங்கன் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு வெளியிடப்பட்டது. அப்படிப் பிரிந்துபோக அவற்றுக்கு உரிமை இல்லை என வடமாநிலங்கள் சொன்னதாலும், ஐக்கிய அமெரிக்கா, இதை ஒரு கிளர்ச்சியாகக் கருதியதாலும், இருதரப்புக்கும் இடையே போர் மூண்டது. இந்தப் போரில் இருதரப்பும் தங்கள் படைகளுக்குத் தலைமை தாங்க அணுகிய ஒரே ஆள் ராபர்ட் ஈ லீ ஆவார்.

கூட்டமைப்பின் படைகள்

1861 ஏப்ரல் 12 ஆம் நாள் கூட்டமைப்பின் படைகள் தென் கரோலினாவின் சம்ட்டர் கோட்டையில் இருந்த ஐக்கிய அமெரிக்காவின் படைகளைத் தாக்கியபோது போர் வெடித்தது. ஆபிரகாம் லிங்கன் பெரிய தொண்டர் போர்ப்படையைத் திரட்டினார். இந் நிலையில் மேலும் நான்கு தென் மாநிலங்கள் பிரிவதாக அறிவித்தன. போரின் முதல் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா எல்லை மாநிலங்களில் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தியதுடன், தென் மாநிலங்கள் மீதான கடல்வழித் தடையையும் ஏற்படுத்தியது. இரு பகுதியினரும் படைகளையும் பிற வளங்களையும் குவித்து வந்தனர். 1862 இல் இடம்பெற்ற, ஷைலோ போர் (Battle of Shiloh), ஆண்டீடாம் போர் (Battle of Antietam) போன்ற போர்களில் ஐக்கிய அமெரிக்கா முன்ன கண்டிராத அளவுக்குப் பெருமளவு இழப்புகள் ஏற்பட்டன. 1862 செப்டெம்பரில், தென் மாநிலங்களில் அடிமை முறையை ஒழிப்பதே போரின் நோக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து, கூட்டமைப்பின் படைகளில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.[4]

ராபர்ட் ஈ லீ

லீ, வெர்ஜீனியா மாநிலத்தில் இராணுவத் தொன்மரபு குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது பதினெட்டாவது வயதில் அமெரிக்காவின் புகழ்பெற்ற வெஸ்ட் பாயிண்ட் இராணுவக் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். நான்கு ஆண்டுகளில் படிப்பை பூர்த்திசெய்தவர், பின், அமெரிக்க இராணுவத்தில் பொறியியல் அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு அமெரிக்கா ஈடுபட்ட பல்வேறு போர்களில் லீயின் பங்ககளிப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். இதன் காரணமாக, அமெரிக்க இராணுவத்தில் பல்வேறு பதவி உயர்வுகளைப் படிப்படியாகப் பெற்றார். 1861 இல் உள்நாட்டுப் போர் மூண்டபோது லீ, ராணுவத் தலைவர் (கர்னல்) பதவியில் இருந்தார். லீக்கு அடிமைமுறை குறித்து அழுத்தமான கருத்துகள் ஏதும் கிடையாது. சமகால அமெரிக்கர்களிடையே, கறுப்பர்கள் வெள்ளையர்களைவிடக் கீழானவர்கள் என்பது பெரும்பான்மையான கருத்தாகக் காணப்பட்டது. அந்தக் கருத்திற்கு லீ உடன்பட்டார்.[4]

போரில் லீயின் பங்கு

ராபர்ட் ஈ லியினுடைய சொந்த மாநிலமான வெர்ஜீனியா, தென் மாநிலங்களில் ஒன்றாக அமைந்திருந்தாலும், வட மாநிலங்களின் எல்லையிலிருந்தது. அங்குப் பண்ணைத் தோட்டங்கள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டன. அந்த மாநிலத்தில் இருந்த கறுப்பின அடிமைகள், வீட்டுப் பணியாளர்களாகப் வேலைசெய்து வந்தனர். மேலும், பண்ணையடிமைகள் படும் இன்னல்களை லீ நேரடியாக அறிந்திருக்கவில்லை. இதனால், அடிமைமுறையை, அவர் ஒழிக்கப்படவேண்டிய அவசியமில்லை என்றே எண்ணினார். தவிர, முழு விடுதலையடைந்து கருப்பர்களால் தனியே வாழ்வது கடினம்; வெள்ளையர்களின் வழிகாட்டுதல் ஒன்றே மேம்படுத்தும் என லீ நினைத்தார். அதே சமயம், அடிமைமுறைக்காக நாட்டைப் பிளவுப்படுத்திப் புது நாடு உருவாக்குவதையும் அவர் விரும்பாதவராக இருந்தார். தென் மாநிலத்திலுள்ள அரசியல்வாதிகளைப் பற்றிய நல்லெண்ணமும் அவரிடம் கிடையாது. இந்தச் சூழ்நிலையில் ஆபிரகாம் லிங்கன், தங்கள் தரப்புக்கு வந்தால் வட அமெரிக்கப் படையில் பெரிய பதவி தருவதாக அவருக்குத் தகவல் அனுப்பினார். ஆனால், லீ பிறந்த வெர்ஜீனியா அதற்குள் அமெரிக்க ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்று தென் மாநில கூட்டமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டது. போர் மூண்டால் தனது மாநிலம் பெரும் சேதமடையும் என்று லீ நம்பினார். ஆனாலும், சொந்த மண்ணின் மீதான பற்று அவரைத் தென்மாநில கூட்டமைப்புப் படையில் கொண்டு சேர்த்தது. வட அமெரிக்க மாநிலங்களைப் போல தென் மாநிலப் பகுதிகள் தொழில் வளங்கள் நிறைந்தது கிடையாது. அதேமாதிரி, அவற்றின் படைபலமும் வடக்கின் படைபலத்தைவிடக் குறைவானதாகும்.[4]

போரின் போக்குகள்

கிழக்குப் பகுதியில் கூட்டமைப்பின் தளபதி ராபர்ட் ஈ. லீ (Robert E. Lee), ஐக்கிய அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பல தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். எனினும் 1863 ஜூலை மாதத்தில் கெட்டிஸ்பர்க் என்னுமிடத்தில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு திருப்பு முனையாக அமைந்தது. விக்ஸ்பர்க் கையும் (Vicksburg), ஹட்சன் துறையையும் (Port Hudson) யுலிசீஸ் கிராண்ட் (Ulysses S. Grant) கைப்பற்றியதுடன் மிசிசிப்பி ஆற்றின் முழுமையான கட்டுப்பாடு ஐக்கிய அமெரிக்காவிடம் வந்தது. 1864 இல் கிராண்ட் நடத்திய தாக்குதல்களால், லீ, வர்ஜீனியாவின் ரிச்மண்ட்டிலிருந்த கூட்டமைப்பின் தலைநகரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் தளபதி வில்லியம் ஷெர்மன் (William Sherman) ஜோர்ஜியாவின் அட்லான்டாவைக் கைப்பற்றிக்கொண்டு, ஜோர்ஜியாவின் நூறு மைல் அகலப் பரப்பில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய, புகழ் பெற்ற கடல் நோக்கிய படையெடுப்பைத் தொடங்கினார். 1865 ஏப்ரலில் ஆப்பொமாட்டக்ஸ் மாளிகையில் தளபதி கிராண்டின் முன்னிலையில் லீ சரணடைந்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் எதிர்ப்புக்கள் வலுவிழந்தன.


போரின் விளைவுகள்

பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன. எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியில் சரணடைந்துவிட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே அதிக தொகையினரைக் காவுகொண்ட இப் போரில் 620,000 படையினரும் எண்ணிக்கை அறியப்படாத குடிமக்களும் இறந்தனர்.வரலாற்று ஜான் ஹட்லெஸ்டோன் என்பவரின் கூற்று படி இறந்தவர்களில் அனைத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆண்களில் பத்து சதவீதம் 20-45 வயதுடையவர்கள் என்றும் தெற்கு மாகாண வெள்ளையின ஆண்களில் 30 சதவீதம் 18-40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் முடிவில் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்படதுடன், ஐக்கிய அமெரிக்க அரசின் கட்டுப்பாடும் வலுப்பெற்றது. எனினும், போரினால் ஏற்பட்ட, தீர்க்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார மற்றும் இன முரண்பாடுகள் தொடர்ந்தும் சமகால அமெரிக்கச் சிந்தனையைத் தீர்மானித்தன. மேலும், அமெரிக்க உள்நாட்டு போரே முதல் தொழில்துறை சார்ந்த போர் ஆகும்.இப்போரின் போது தான் ரயில்பாதைகள், தந்தி,நீராவி படகுகள், மற்றும் பெருமளவிலான தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், கப்பல் கட்டுமிடங்கள், வங்கிகள், போக்குவரத்து மற்றும் உணவு உற்பத்தி போன்ற பல தொழில்கள் விரிவு படுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது.


மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதி எல்லைகள், 1864–5.
   ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்
   ஐக்கிய அமெரிக்க ஆட்சிப்பகுதிகள்
   கேன்சஸ், கேன்சஸ் நெருக்கடிக்குப் பின்னர் சுதந்திர மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் சேர்ந்தது.
   அடிமை முறையை ஏற்றுக்கொண்ட ஐக்கிய அமெரிக்க எல்லை மாநிலங்கள்
   கூட்டமைப்பினால் கோரப்பட்டுச் சில சமயங்களில் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகள்

மேற்கோள்கள்

  1. "The war of the rebellion: a compilation of the official records of the Union and Confederate armies.; Series 4 – Volume 2", United States. War Dept 1900.
  2. "The Belligerent Rights of the Rebels at an End. All Nations Warned Against Harboring Their Privateers. If They Do Their Ships Will be Excluded from Our Ports. Restoration of Law in the State of Virginia. The Machinery of Government to be Put in Motion There". The New York Times. Associated Press. May 10, 1865. பார்க்கப்பட்ட நாள் December 23, 2013.
  3. "Date of Secession Related to 1860 Black Population", America's Civil War
  4. 4.0 4.1 4.2 4.3 "தவறான தரப்பில் சரியான மனிதர் ராபர்ட் ஈ. லீ". பார்க்கப்பட்ட நாள் சூலை 6, 2017.