இலக்கணம் (மொழியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 137: வரிசை 137:


'''3.இடைச்சொல்'''
'''3.இடைச்சொல்'''
இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது . பெயரோடு அல்லது வினையோடு சேர்ந்து நின்று, சில இடைச்சொற்கள் பொருள்களை உணர்த்தும். பொருள் உணர்த்தும் சில இடைச்சொற்களே அசைநிலையாகவும் இசை நிறைக்கவும் வருவது உண்டு. தெரிநிலை, தெளிவு, ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினா, விருப்பம், ஒழிந்தசொல், பிரிநிலை, கழிவு, ஆக்கம் ஆகிய இடைச்சொற்களுக்குரிய பொருள்களில் வரும் .<ref>5. நன்னூல் நூற்பா எண் . 421</ref>



'''4.உரிச்சொல்'''
'''4.உரிச்சொல்'''

13:49, 19 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்


இலக்கணம் மொழியின் அமைப்பையும் பயன்படுத்தும் விதத்தையும் வரையறை செய்யும் விதிகளைச் சுட்டுகிறது.

இலக்கணம் என்ற சொல்லின் சொற்பிறப்பியல்

இச்சொல்லின் மூலம் தமிழ் என்பர். இந்த சொல் பாளி மொழியின் லக்கணம் என்ற சொல்லினிருந்து தமிழுக்கு புகுந்ததாகவும் கூறுவர்.[சான்று தேவை] சமற்கிருதத்தில் இதை லக்ஷணம் அல்லது வியாகரணம் என்பர். ஆங்கிலத்தில் இதை கிராமர் என்று அழைப்பர்.

தமிழ் இலக்கணம்

முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் உண்டு. அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக "தமிழ் இலக்கணம்" என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,


எழுத்து இலக்கணம்

எழுத்து, சொல் , பொருள் என்னும் மூன்று இலக்கணத் திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது . எழுத்துக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் போல் நன்னூலும் நேமிநாதமும் எடுத்தியம்புகிறது . 'எழுத்து என படுபவ அ முதல் ன வரை உள்ள முப்பது எழுத்துக்கள் '[1] ஆகும் . எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளை கூறுவன எழுத்து இலக்கணம் ஆகும் . மொழிக்கு முதற்காரணமாய் காதாற் கேட்கப்படும் ஒலி அணுத்திரனில் காரியமாய் இருப்பது எழுத்தாகும். இவ் எழுத்துக்கள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவின் எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே வரிவடிவம் அமைகின்றது.

எழுத்து இலக்கண வகைகள்

எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,

1. முதல் எழுத்து

2. சார்பு எழுத்து

1. முதல் எழுத்து

முதல் எழுத்து என்பன உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் ஆகும் .உயிர் எழுத்துக்கள் 12 மற்றும் மெய் எழுத்தக்கள் 18 ம் சேர்ந்து 30 எழுத்துக்கள் தமிழில் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. மொழிக்கும் பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கும் இவை ஆதாரமாக அமைவதனால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.

உயிர் எழுத்துக்கள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்ற 12 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களாகும். க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்ற 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்களாகும். இங்கே குறிப்பிடப்பட்ட உயிர் எழுத்துக்கள் 12 னை மேலும் குறில், நெடில் என இரண்டுவகையாக பிரிப்பதுண்டு. குறுகிய ஓசையுடன் ஒலிக்கும் அ, இ, உ, எ, ஒ என்பன குறில் எனவும் நீண்ட ஓசையுடன் ஒலிக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள போன்றன நெடில் எனவும் அழைக்கப்படும்.

மெய் எழுத்துக்கள்

மெய் எழுத்துக்கள் அவை ஒலிக்கும் முறையினை கொண்டு வல்லினம் (க், ச், ட், த், ப், ற்), மெல்லினம் (ங், ஞ், ண், ந், ம், ன்), இடையினம் ( ய், ர், ல், வ், ழ், ள்) என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. அதாவது வலிய ஓசை, மென்மையான ஓசை, இடைப்பட்ட ஓசை கொண்டவை என்பது அதன் பொருளாகும்.

2. சார்பு எழுத்து

தமிழ் எழுத்துக்களில் சில தாமே இயங்கும் இயல்பு அற்றவை அவை முதல் எழுத்தக்களின் துணை கொண்டே இயங்குகின்றன. அவற்றை சார்பு எழுத்துக்கள் என்று கூறுவார் . இவ் எழுத்துக்களை 1) உயிர்மெய் 2) ஆய்தம் 3) உயிரளபெடை 4) ஒற்றளபெடை 5) குற்றியலுகரம் 6) குற்றிய லிகரம் 7) ஐ காரக் குறுக்கம் 8) ஒளகாரக் குறுக்கம் 9) மகரக் குறுக்கம் 10) ஆய்தக் குறுக்கம் என 10 வகையாக பிரித்து கூறுவர்.

1.உயிர்மெய் எழுத்துக்கள்

தமிழில் உயிர் எழுத்துக்கள் 12 உடன் மெய் எழுத்துக்கள் 18 சேர்வதினால் (12 *18 = 216) 216 உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. (உதாரணம் : க் + அ = க, க் + ஆ = கா க் + இ = கி க்+ஈ = கீ க் + உ = கு)

2. ஆய்தம் (தனி நிலை எழுத்து )

தனி நிலை எழுத்து என அழைக்கப்படும் ஆய்த எழுத்து ஒன்றும் ( ஃ ) தமிழில் உண்டு இது தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் தனக்கு பின்னே ஒரு வல்லின உயிர் மெய் எழுத்தையும் துணையாக கொண்டு வரும். ( உதாரணம் : அஃது, இஃது, எஃது )

3. உயிரளபெடை

உயிரளபெடை என்பது உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பது ஆகும் . ( உயிர் + அளபெடை . அளபெடை என்றால் , நீண்டு ஒலித்தல் என்று பொருள் ). உயிரெழுத்துகளில் , நெட்டெழுத்துகள் ஏழும் , தமக்குரிய இரண்டு மாத்திரைகளில் (குறில் = 1 மாத்திரை , நெடில் = 2 மாத்திரை) இருந்து நீண்டு ஒலிக்கும் நிகழ்வு , உயிரளபெடை ஆகும் . முதலெழுத்து , இடையெழுத்து , கடையெழுத்து என்று , மூவகை இடங்களில் , இவை நடைபெறும் . எடுத்துக்காட்டு : 1. ஓஒதல் வேண்டும் . இதில் ,’ ஓதல் ‘ என்று வந்திருக்கவேண்டும் . இவ்விடத்தில் ‘ஓ’ எனும் உயிர்நெடில் எழுத்து , தனக்குரிய இனவெழுத்தான ‘ஒ’ என்று தொடர்ந்து வந்து அளபெடுத்துள்ளது . மேலும் , வார்த்தையின் தொடக்கத்திலேயே அளபெடுத்துள்ளதால் , இது முதல் எழுத்துஅளபெடுக்கும் வகையறா ஆகும் . 2. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சான்றாய் இதில் , வார்த்தையின் நடுவில் ‘தூ (த் + ஊ)’ எனும் உயிர்மெய் நெடில் , தன் இனவெழுத்தான ‘உ’ வுடன் இணைந்து அளபெடுத்து வருகிறது . வார்த்தைகளின் நடுவில் அளபெடுத்து வரும்காரணத்தினால் , இவை இடையெழுத்து அளபெடுத்துவரும் வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாகும் . இதேபோல் , கடையெழுத்து அளபெடுத்து வருவதையும் எ. காவுடன் விளக்கலாம் .

உயிரளபெடையானது , மூன்று வகைப்படும் .

1. இசைநிறையளபெடை செய்யுளின் ஓசை குறையுமிடத்து , குறைந்த ஓசையை நிறைவு செய்யும் பொருட்டு அளபெடுத்தல் . உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் 2. இன்னிசையளபெடை ஓசை குறையவில்லை எனினும் , இனிமைக்காக அளபெடுத்தல். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச்சார்வாய் 3. சொல்லிசையளபெடை பெயர்ச்சொல்லை , வினைச்சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்தல்.

4. ஒற்றளபெடை ஒற்றெழுத்து , தமக்குரிய அரைமாத்திரையிலிருந்து , நீண்டு ஒலித்தல் .

5. குற்றியலுகரம்

ஒருமாத்திரையளவு ஒலிக்கவேண்டிய ‘உ’ கரம் , அரைமாத்திரயாக ஒலிப்பது , குற்றியலுகரம் எனப்படும் . க , ச , ட , த , ப , ற எனும் வல்லின எழுத்துகளுடன் , ‘உ’கரம் இணைந்து , கு , சு , டு , து, பு, று எனும் வார்த்தைகள் தோன்றும் . இந்த எழுத்துகள் , தனிநெடில் உடனோ ,பல எழுத்துகளை தொடர்ந்து , கடைசியில் வந்தாலோ , அவ்வார்த்தையில் வரும் ‘உ’கரம் , அரைமாத்திரயளவே ஒலிக்கும் . எ.கா – 1 .தனிநெடிலுடன் வரும் போது , காசு – இவ்வார்த்தைச்சொல்லி பார்த்தால் , காஸ்+உ என்றே நாம் உச்சரிப்போம் .’சு’க்கு பதில் , ‘உ’ என்றுதான் கடைசியில் வரும் . எ.கா – 2 . பல எழுத்துகள் சேர்ந்து வருதல் . பந்து - இதில் வரும் வார்த்தையை சொல்லிப்பாருங்கள் . ‘பந்த்’ + உ என்றே சொல்லுவோம் . ‘து’க்கு பதில் , கடைசியில் உச்சரிப்பின்போது ‘உ’ மாத்திரமே வரும் . இவ்வாறு வருதலே , குற்றியலுகரம் .

குற்றியலுகரம் ஆறு வகைப்படும் .

எ.கா நாடு - நெடில்தொடர் குற்றியலுகரம் எஃகு - ஆய்ததொடர் ‘’ வரகு - உயிர்த்தொடர் பத்து - வன்தொடர் பந்து - மென்தொடர் மார்பு - இடைத்தொடர்

6. குற்றியலிகரம்

ஒருமாத்திரையளவு ஒலிக்கவேண்டிய ‘இ’கரம் அரைமாத்திரையாக குறைந்து ஒலிக்கும் . எ. கா நாடு + யாது = நா(ட் + உ) + யாது = நாடியாது இவ்விடத்தில் வரும் ‘உ’கரம் , முதலில் வரும் ‘ய’வின் காரணமாக , ‘இ’கரமாக மாறியுள்ளது . அவ்வாறு மாறினாலும் , அதன் மாத்திரை , அரை மாத்திரையே ஆகும் .

7. ஐகாரக்குறுக்கம்

ஐ என்பதற்கு இரண்டு மாத்திரை . அது ஒன்றரை மாத்திரையாகவும் , ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலித்தலே ஐகாரக்குறுக்கம் ஆகும் . எ.கா - வளையல் .

8. ஔகார குறுக்கம் இது முதல் சொல்லாகத்தான் , ஒரு வார்த்தையில் வரும் . அப்படி வரும் போது , இரண்டு மாத்திரையிலிருந்து , ஒன்றரையாக குறைந்து ஒலிக்கும்

9. மகரக்குறுக்கம்

‘ம்’ ங்ற சொல் , அதன் அரைமாத்திரையிலிருந்து , கால் மாத்திரையாக குறைந்து ஒலித்தலே , மகரக்குறுக்கம் .

10 .ஆய்த குறுக்கம் ‘ஃ’ ஆய்த எழுத்து , தம்க்குரிய அரை மாத்திரையிலிந்து , கால் மாத்திரையாக ஒலித்தல் . எ.கா கல் + தீது = கஃறீது

சொல்இலக்கணம்

பொருள் தரக்கூடிய சொற்கள் தான் சொல் என குறிப்பிடப்படுகிறது . பொருள் தராத சொற்களை சொல் என்று அழைக்கமுடியாது . எல்லா சொல்லும் பொருள்குறித் தனவே என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது .[2] சொற்களின் வகைகள் சொற்கள் நான்கு வகைப்படும் அவை .

1.பெயர்ச்சொல்

பெயரை குறித்து வருவது பெயர்ச்சொல் ஆகும் . ஒரு பொருளை குறித்தும் வரும் . திணை, பால், எண், இடம் காட்டுவது; வேற்றுமை உருபுகளை இறுதியில் ஏற்று வருவது; வினையால் அணையும் பெயர் ஒன்றைத் தவிர ஏனைப் பெயர்கள் காலம் காட்டா. இவையே தொல்காப்பியர் பெயர்ச் சொல்லுக்குக் கூறும் இலக்கணங்கள். [3] பொருளைக் குறிப்பது எனவும், திணை, பால், எண், இடம் உணர்த்துவது எனவும், வேற்றுமை உருபை ஏற்பது எனவும் குறிப்பிடுகின்றனர் .

2.வினைச்சொல்

ஒவ்வொரு மொழியிலும் ஒரு தொடருக்கு இன்றியமையாத உறுப்பாகத் திகழ்வது வினைச் சொல்லே.தொழிலையும், தொழில் செய்தவனையும், தொழில் நிகழ்ந்த காலத்தையும் ஒருசேர உணர்த்தும் சொல்லாகத் திகழ்கின்றது. வினைச்சொல் பல்வேறு இலக்கணக் கூறுகளை விளக்குவதால் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. வினைச்சொல் வேற்றுமை உருபுகளை ஏற்காது காலம் காட்டும். [4] வெளிப்படையாகக் காட்டும் சொற்களே அல்லாமல், காலத்தைக் குறிப்பாகக் காட்டும் சொற்களும் வழங்கின. வினைச்சொல் வகைகள்

வினைச்சொல்லானது வினை, குறிப்பு என இரு வகைப்படும். இவ்விரு சொற்களும் காலம் காட்டும் .


3.இடைச்சொல் இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது . பெயரோடு அல்லது வினையோடு சேர்ந்து நின்று, சில இடைச்சொற்கள் பொருள்களை உணர்த்தும். பொருள் உணர்த்தும் சில இடைச்சொற்களே அசைநிலையாகவும் இசை நிறைக்கவும் வருவது உண்டு. தெரிநிலை, தெளிவு, ஐயம், முற்று, எண், சிறப்பு, எதிர்மறை, எச்சம், வினா, விருப்பம், ஒழிந்தசொல், பிரிநிலை, கழிவு, ஆக்கம் ஆகிய இடைச்சொற்களுக்குரிய பொருள்களில் வரும் .[5]


4.உரிச்சொல்


  1. பொருள்
  2. யாப்பு
  3. அணி

மேலும் காண்க

  1. 1. தொல்காப்பியம் முதல் நூற்பா
  2. 2.தொல்காப்பியம்.நூற்பா எண் .155
  3. 3.தொல்.சொல்.நூற்பா எண் . 157,162,71
  4. 4.தொல். சொல்.நூற்பா எண் 200)
  5. 5. நன்னூல் நூற்பா எண் . 421
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணம்_(மொழியியல்)&oldid=2307732" இலிருந்து மீள்விக்கப்பட்டது