அவகாசியிலிக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14: வரிசை 14:


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[அவகாசியிலிக் கொள்கை]]
* [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)]]
* [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)]]



17:36, 17 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

இடல்லவுசிப் பிரபு

வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse) என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த டல்ஹளசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.[1]

வாரிசு இழப்புக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியானவராகவோ அல்லது நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னராட்சி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இணைக்கப்படும்.

ஒன்றிணைப்பு

பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் வாரிசு இழப்புக் கொள்கையின்படி, சத்தாரா (1848), செய்ப்பூர் (1849), சம்பல்பூர் (1849), நாக்பூர் (1854), சான்சி (1854), தஞ்சாவூர் மன்னராட்சி (1855), அவத் (1856), உதயப்பூர் ஆகிய மன்னராட்சிப் பகுதிகளை சொந்தமாக்கிக் கொண்டது.[2]

சான்சி

சான்சியின் மகாராசா கங்காதர இராவு நேரடி வாரிசின்றி நவம்பர் 21, 1853இல் இறந்தமையால் ஆங்கிலேயர் வாரிசு இழப்புக் கொள்கையின்படி சான்சியைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வர முயற்சித்தனர்.[3] மார்ச்சு, 1854இல் இராணி இலட்சுமிபாய்க்கு 60000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து சான்சிக் கோட்டையை விட்டு வெளியேறுமாறு கூறினர்.[4] ஆயினும் இராணி இலட்சுமிபாய் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார். பின்னர், ஈ உரோசு தலைமையிலான பிரித்தானியப் படை வீரர்கள் படையெடுப்பின் மூலம் சான்சியைக் கைப்பற்றினர். ஆகையால், 1857ஆம் ஆண்டுப் ஏற்பட்ட பெரும்புரட்சியின் போது சான்சியில் ஏற்பட்ட கிளர்ச்சிக்கு இராணி இலட்சுமிபாய் தலைமை தாங்கி நடத்திட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[5]

அவத்

ஆங்கிலேயர்கள், அவத் நவாப் ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவர் எனக் கூறி அவாதைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். ஆனாலும் இவ்வொன்றிணைப்பு எதிர்க்கப்பட்டதுடன் 1857 இந்தியக் கிளர்ச்சிக்கான காரணமாகவும் அமைந்தது.[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவகாசியிலிக்_கொள்கை&oldid=2306596" இலிருந்து மீள்விக்கப்பட்டது