ஏதெனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Li wei ran பக்கம் ஏதீனா என்பதை ஏதெனா என்பதற்கு நகர்த்தினார்: தவறான உச்சரிப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

05:03, 23 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

அத்தீனா
ஏதெனா
ஏதெனா
இடம்ஒலிம்பசு மலை
பெற்றோர்கள்சீயசு மற்றும் மெட்டிசு[1]
சகோதரன்/சகோதரிசீயசின் பிள்ளைகள் அனைவரும்


ஏதெனா என்பவர் கிரேக்கக் தொன்மவியலில் கூறப்படும் ஒரு கன்னிப்பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு, போர் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்ப்பியர்களுள் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்சு நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. ஏதென்சு நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயம் இவருக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும். இவர் நகரத்தின்(போலிசு) பாதுகாவலராக இருப்பதால் பெரும்பாலான கிரேக்க மக்கள் இவரை ஏதெனா போலிசு என்ற பெயரில் வழிபடுகின்றனர்.

பிறப்பு நீதி கடவுள் மெட்டீசு மேல் காமம் கொண்ட சீயசு அவருடன் உறவாடினார். பிறகு மெட்டிசுக்கு பிறக்கும் குழந்தை சீயசை விட வலிமையானதாக இருக்கும் என்று தீர்க்கதரிசனம் கூறியது. இதனால் பயந்த சீயசு மெட்டீசை விழுங்கிவிட்டார். ஆனால் மெட்டீசு ஏற்கனவே கர்ப்பமாகி விட்டாள். பிறகு சீயசிற்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்தது. இதனால் ப்ரோமிதீயுசு, எப்பீசுடசு, ஏரிசு, எர்மீசு ஆகியோர் லப்ரிசு எனப்படும் இரண்டு தலை கொண்ட கோடாரியால் சீயசின் தலையை வெட்டினர். அப்போது உடம்பில் முழு கவசத்துடன் ஏதெனா பிறந்தார்.

எரிச்டோனியசு

எப்பெசுடசு மற்றும் அத்தீனா

ஒருநாள் ஆயுதம் செய்து தருமாறு கேட்பற்காக ஏதெனா எப்பெசுடசு கடவுளின் தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது அவரது அழகில் மயங்கிய எப்பெசுடசு அவருடன் உறவாட முயன்றான். தன் கன்னித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள அத்தீனா தப்பித்துச் சென்றார். ஆனால் எப்பெசுடசு அவரைப் பின்தொடர்ந்தான். அப்போது எப்பெசுடசுவிற்கு வந்த விந்துத் திரவம் அத்தீனாவின் தொடையில் பட்டுவிட்டது. இதனால் பயந்த அத்தீனா அந்தத் திரவத்தை ஒரு கம்பளித் துணியால் துடைத்து பூமியில் வீசினார். அது பூமி கடவுள் கையா மீது படட்டதால் அவர் கர்ப்பமானார். இதன் மூலம் எரிச்தோனியசு பிறந்தான்.

குழந்தையாக இருந்த எரிச்டோனியசை ஏதெனா சிசுடா எனப்படும் ஒரு சிறு பெட்டியில் அடைத்து ஏதென்சில் இருந்த எர்சி, பன்ட்ரோசசு மற்றும் அக்லோலசு மூன்று சகோதரிகளிடம் பார்த்துக்கொள்ளுமாறு கொடுத்தார். அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று கூறாத ஏதெனா அவர்களிடம் இந்தப் பெட்டியை திறக்கக் கூடாது என்று எச்சரித்தார். ஆனால் அந்த சகோதரிகளுள் இருவர் ஆர்வ மிகுதியால் அந்தப் பெட்டியைத் திறந்து விட்டனர். அப்போது ஒரு பாம்பு வெளிப்பட்டது. அது அவர்களைத் தூக்கி அக்ரோபோலிசு நகரத்திற்கு வீசியது.[2]பிறகு வளர்ந்த எரிச்டோனியசு ஏதென்சு நகரின் புகழ்பெற்ற அரசன் ஆனான்.

எர்மீசு

எர்மீசு கடவுள் மூன்று சகோதரிகளில் ஒருவரான எர்சியின் மேல் காமம் கொண்டு அவருடன் உறவாட நினைத்தார். ஒருநாள் மூன்று சகோதரிகளும் ஏதெனாவின் கோவிலிற்கு வந்து வழிபட்டனர். அவர்கள் ஏதெனாவிற்குக் காணிக்கையாக பணத்தைக் கொடுத்தனர். அப்போது எர்மீசு அக்லௌலசிடம் எர்சியுடன் உறவாட தனக்கு உதவும்படி வேண்டினார். அதற்குப் பதிலாக அக்லோலசு எர்மீசிடம் பணம் கேட்டார். எர்மீசு அந்த சகோதரிகள் கொடுத்த காணிக்கை பணத்தையே எடுத்து அவளிடம் கொடுத்து விட்டார். அக்லௌலசின் பேராசையை அறிந்த ஏதெனா அவருக்கு தண்டனை அளிக்க நினைத்தார். அதனால் பொறாமைக் கடவுள் இன்விடியாவை அழைத்து அக்லௌலசுக்கு எர்சி மேல் பொறாமை ஏற்படுமாறு செய்தார். இதனால் எர்சியுடன் உறவாட வந்த எர்மீசை அக்லோயா வழியிலேயே தடுத்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட எர்மீசு அக்லோலசை கல்லாக மாற்றிவிடுகிறார்.


வெளி இணைப்புகள்

வார்ப்புரு:பன்னிரு ஒலிம்ப்பியர்கள்

  1. According to Hesiod's Theogony, Metis was Athena's mother, but, according to Homer's Iliad, after Zeus swallowed Metis because she was pregnant with Athena (to prevent the birth), Athena sprang forth from the head of Zeus nonetheless and later it was declared that she "had no mother"
  2. Graves, Robert, The Greek Myths I, "The Nature and Deeds of Athena" 25.d.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏதெனா&oldid=2262581" இலிருந்து மீள்விக்கப்பட்டது