சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 99: வரிசை 99:
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில்| திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்| திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் |58|58}}
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில்| திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்| திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் |58|58}}


[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]

10:13, 17 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

தேவாரம் பாடல் பெற்ற
திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திலதர்ப்பனபுரி[1],திலதைப்பதி
பெயர்:திலதைப்பதி முத்தீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:சிதலப்பதி (செதலபதி)
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:முக்தீஸ்வரர் (மந்தாரவனேஸ்வரர்)
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:பொற்கொடியம்மை (சொர்ணவல்லி)
தல விருட்சம்:மந்தாரை
தீர்த்தம்:சூரிய புஷ்கரிணி, சந்திர தீர்த்தம், அரிசிலாறு
ஆகமம்:சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:சிவராத்திரி, திருக்கார்த்திகை.
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திலதைப்பதி - சிதலப்பதி முத்தீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 58ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.

இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிதலப்பதி எனும் ஊரில் அமைந்துள்ளது.

தலவரலாறு

திருமாலின் அவதாரமான இராமன் மற்றும் லட்சுமணர் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயு ஆகியோருக்கு இத்தலத்தில் எள் வைத்து பிதுர் தர்ப்பணம் செய்தனர். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கம் முக்தீஸ்வரர் என்றும் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றும் கூறப்படுகிறது. (திலம் என்றால் எள் என்று பொருள்)

வழிபட்டோர்

சூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர் முதலானோர்

சிறப்பு

  • இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார்

ஆதிவிநாயகர் பற்றிய தலபுராணப்பாடல் :

<peom> அங்கும் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத் துங்கமா முகமும்தூய துதிக்கரம் தானுமின்றி பங்கயப் பழனவேலித் திலதையாம் பதியின் மேவும் புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி </poem>

அருகிலுள்ள திருத்தலம்

  • திருக்கோயிலுக்கு வெளியே அழகீசர் குடிகொண்ட அழகநாதர் திருக்கோயில் உள்ளது

இவற்றையும் பார்க்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2014/08/28/ஆதிவிநாயகப்-பெருமான்/article2402787.ece

வெளி இணைப்புகள்