காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
தொடக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:51, 31 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
வகை | மகளிருக்கான அரசினர் தன்னாட்சிக் கலைக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1974 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | வி. இராதா |
மாணவர்கள் | 4300 |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://www.qmgcw.in |
காயுதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னையில் செயல்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1974ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தன்னாட்சித் தகுதியுடன் சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. முனைவர் வி. இராதா தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[3]
வரலாறு
1974 ஆவது ஆண்டில் 30 ஏக்கர் பரப்பளவில், ஐந்து பட்டப் படிப்புகளில் சில நூறு மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது 12 இளநிலை, 6 முதுநிலைப் படிப்புகளில் 4300கும் அதிகமான மாணவிகளுடன் செயல்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் எண்ணிக்கை அதிகமானதை அடுத்து 2006-07 கல்வியாண்டில் இருசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்லூரியில் பயிலும் மாணவிகளில் பெரும்பாலானவர்கள் முதலாம் தலைமுறை பட்டதாரிகள் ஆவர்.
வழங்கும் படிப்புகள்
இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
அமைவிடம்
காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ளது.