இராமகிருசுண இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மேற்கு வங்காளத்தின் வரலாறு
வரிசை 50: வரிசை 50:
[[பகுப்பு:இந்து சமய அமைப்புகள்]]
[[பகுப்பு:இந்து சமய அமைப்புகள்]]
[[பகுப்பு:இந்திய சமய அமைப்புகள்]]
[[பகுப்பு:இந்திய சமய அமைப்புகள்]]
[[பகுப்பு:மேற்கு வங்காளத்தின் வரலாறு]]

10:39, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

ராமகிருஷ்ணா மிஷன்
உருவாக்கம்1897
நோக்கம்கல்வி, அறக்கட்டளை, சமயக் கல்வி, ஆன்மீகம்
தலைமையகம்பேலூர் மடம்
சேவை பகுதி
உலகெங்கும்
வலைத்தளம்பேலூர் மடம்
இராமகிருஷ்ணா மிசன் கோவில், சென்னை

இராமகிருஷ்ணா மிஷன் மற்றும் இராமகிருஷ்ணா மடம் என்பவை இராமகிருஷ்ணா இயக்கம் அல்லது வேதாந்த இயக்கம் எனப்படும் உலகளாவிய ஆன்மீக இயக்கத்தின் இரட்டை அமைப்புகளாகும்.[1] இராமகிருஷ்ணா மிஷன் உதவிபுரிந்திடவும் மக்கள் பணியாற்றிடவும் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு மே 1,1897ஆம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகாநந்தரால் நிறுவப் பட்ட அமைப்பாகும்.நலவாழ்வு, பேரழிவு மீட்பு பணிகள், கிராம வளர்ச்சி, பழங்குடி மேம்பாடு, துவக்க மற்றும் உயர்நிலைக் கல்வி மற்றும் பண்பாடு பேணுதல் என பல துறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. தனது நூற்றுக்கணக்கான துறவிகளின் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டு இப்பணிகளை அவ்வமைப்பு நிறைவேற்றி வருகிறது. கர்ம யோகம் எனப்படும் செயல்வழி வழிபாட்டு கொள்கைகளைக் கொண்டு இச்செயல்களை செய்து வருகிறது.[2]

2013 ஆம் ஆண்டின் உத்தராகண்டம் பேரிடர் மீட்புப்பணியில் ராமகிருஷ்ண மிஷனின் பங்கு குறிப்பிடத்தக்கது.[3]

இந்த மிஷனின் தலைமையகம் இந்தியா கொல்கத்தாவிலுள்ள பேலூர் மடத்தில் அமைந்துள்ளது.[1]

யுனெஸ்கோ உடனான ஒப்புமை

1993 ஆம் ஆண்டு நிகழ்த்திய உரையில் யுனெஸ்கோ அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ஃபெடரிகோ மேயர், 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுனெஸ்கோவின் அடிப்படைச் சட்ட திட்டம் 1897 இல் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண மிஷனின் நோக்கம், செயல்பாடுகளோடு ஒத்திருப்பதைக் கண்டு வியந்து குறிப்பிட்டுள்ளார்.[4][5]

விருதுகள்

காந்தி அமைதிப் பரிசு

தேசிய விருது

இந்தியாவின் மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தேசிய விருது, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்விற்காக மிகச் சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக ராமகிருஷ்ண மிஷனின் கொல்கத்தா நரேந்திரப்பூர் ராமகிருஷ்ண மிஷனுக்கு வழங்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பார்வையற்ற மாணவர்கள் அகாடமி, பார்வையற்றவர்களின் கல்வி, வேலைப் பயிற்சிகள், சமூக, பொருளாதார மறுவாழ்விற்காகப் பாடுபட்டு வருகின்றது.2010 ஆம் வருடம் உலக மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவரிடமிருந்து இவ்விருது பெறப்பட்டது [6]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Belur Math".
  2. Agarwal, Satya P. (1998). The Social Role of the Gita: How and Why. Motilal Banarsidass Publ.. பக். 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120815247. 
  3. http://www.rkmkankhal.org/Report-on-Relief-Operations-at-Uttarakhand.pdf
  4. http://vivekanandam150.com/?p=6296
  5. http://www.ibe.unesco.org/publications/ThinkersPdf/vivekane.pdf
  6. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; பிப்ரவரி; 2011; பக்கம் 41

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமகிருசுண_இயக்கம்&oldid=2226941" இலிருந்து மீள்விக்கப்பட்டது