மறுபிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி தானியங்கிஇணைப்பு category இந்துத் தத்துவங்கள்
வரிசை 35: வரிசை 35:
[[பகுப்பு:இந்து சமய நம்பிக்கைகள்]]
[[பகுப்பு:இந்து சமய நம்பிக்கைகள்]]
[[பகுப்பு:பௌத்த தத்துவங்கள்]]
[[பகுப்பு:பௌத்த தத்துவங்கள்]]
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]

10:24, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

இந்து சமயத்தில் மறுபிறப்பு பற்றிய ஒரு ஓவியம்

மறுபிறப்பு (reincarnation) என்பது உயிர் அல்லது ஆன்மா பற்றிய சமயக் கொள்கை அல்லது தத்துவமாகும். உயிர் அல்லது ஆன்மா உடலைத் துறந்த பின் அது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மனிதனாகவோ, விலங்காகவோ அல்லது மற்ற உயிரினமாகவோ மறுபிறப்பு எடுக்கின்றது என்பது இதன் அடிப்படையாகும். இந்து, புத்தம் போன்ற இந்திய சமயங்கள் அனைத்திலும் இது முக்கிய கொள்கையாகும்.[1] இது டியூரிசம், ஆன்மீகம், தியாசபி மற்றும் ஏக்காங்கர் முதலான சமயங்களிலும் சைபீரியா, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலான இடங்களில் வாழும் பழங்குடியின மக்களிடையே உள்ள நம்பிக்கையாகவும் உள்ளது. [2]

இந்து சமயத்தில் மறுபிறப்பு

இந்து சமயத்தின்படி அவரவரின் கர்மபலன்களுக்கு ஏற்ப பிறப்பின் தன்மை அமைகிறது. இந்த பிறவிச்சுழற்சியில் (சம்சாரம்) இருந்து விடுபெற வீடுபேறு அடைய வேண்டும். இந்தக் கதையாடலில் ஒரு உயிர் ஏன் முதன் முதலில் பிறந்தது என்று கூறப்படவில்லை.

சிவபுராணப் பாடல்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

யஜுர் வேதம்

வார்ப்புரு:இந்து மெய்யியல் கருத்துருக்கள் இந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி.

ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது ஆத்மா முன்பிறவிகளின் மொத்த கர்மாவின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்

- என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6

மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான பிறவிச்சுழலின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.

ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.

அறிவியல் நோக்கு

மறுபிறப்புக்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.

மேற்கோள்கள்

  1. The Buddhist concept of rebirth is also often referred to as reincarnation.see Charles Taliaferro, Paul Draper, Philip L. Quinn, A Companion to Philosophy of Religion. John Wiley and Sons, 2010, page 640, Google Books and is a belief that was held by such historic figures as Pythagoras, Plato and Socrates. .
  2. Gananath Obeyesekere, Imagining Karma: Ethical Transformation in Amerindian, Buddhist, and Greek Rebirth. University of California Press, 2002, page 15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறுபிறப்பு&oldid=2226449" இலிருந்து மீள்விக்கப்பட்டது