யாக்கூப் ஆஃப்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''யாக்கூப் கொட்ஃபிரீட் ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:34, 22 திசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

யாக்கூப் கொட்ஃபிரீட் ஆஃப்னர் (Jacob Gottfried Haafner) (13 மே 1754 - 4 செப்டெம்பர் 1809) ஒரு செருமன் - ஒல்லாந்த பயண எழுத்தாளர் ஆவார். இவர் தென்னாப்பிரிக்கா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தனது பயணங்கள் குறித்து ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் மேற்கத்தியக் குடியேற்றவாதம், மதம் பரப்பும் நிறுவனங்கள், அடிமை முறை அகியவற்றுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர். இவர் நெதர்லாந்துக்குத் திரும்பிய பின்னர் குடியேற்றவாதத்துக்கும், மதம் பரப்பும் நிறுவனங்களுக்கும் எதிரான முதல் நூலை எழுதினார். இவர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர். அத்துடன், இந்தி, வங்காளி போன்ற மொழிகளிலும், ஓரளவுக்கு சமசுக்கிருதத்திலும் இவருக்குப் பழக்கம் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாக்கூப்_ஆஃப்னர்&oldid=2157050" இலிருந்து மீள்விக்கப்பட்டது