தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி added Category:நாயக்க அரசர்கள் using HotCat |
17 செப்டம்பர் 2016 அன்று கோயிலுக்கு சென்றபோது விவரங்கள் பெறல் |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
==வரலாறு== |
==வரலாறு== |
||
முதல் நாயக்க மன்னராகிய [[சேவப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] காலத்தில் தஞ்சைக்கு வந்த [[கோவிந்த தீட்சிதர்]] முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரைப்]] போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். <ref name="kudavayil"/> |
முதல் நாயக்க மன்னராகிய [[சேவப்ப நாயக்கர்|செவ்வப்ப நாயக்கர்]] காலத்தில் தஞ்சைக்கு வந்த [[கோவிந்த தீட்சிதர்]] முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரைப்]] போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். <ref name="kudavayil"/> இக்கோயில் முன் மண்டபம், மூலவர் கருவறை, இறைவி கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக அம்மன் சன்னதி உள்ளது. உள்ளே நுழையும்போது ஒரு நந்தி காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன. |
||
==தேவஸ்தான கோயில்== |
|||
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். <ref> தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, பூலோககிருஷ்ணன் கோயில், ப.230-235, வ.எண்.155 </ref> |
|||
==இறைவன்== |
==இறைவன்== |
||
கோயிலின் கருவறையிலுள்ள சுவாமி வாளையும், கேடயத்தையும் ஏந்தியுள்ளார். இத்திருமேனி கர்நாடகப் பாணியில் அமைந்ததாகும். [[கும்பகோணம்]] வீரபத்திரர் கோயிலிலுள்ள திருமேனியும் இதனை ஒத்தே காணப்படுகிறது. <ref name="kudavayil"/> |
கோயிலின் கருவறையிலுள்ள சுவாமி வாளையும், கேடயத்தையும் ஏந்தியுள்ளார். இத்திருமேனி கர்நாடகப் பாணியில் அமைந்ததாகும். [[கும்பகோணம்]] வீரபத்திரர் கோயிலிலுள்ள திருமேனியும் இதனை ஒத்தே காணப்படுகிறது. <ref name="kudavayil"/> இக்கோயிலின் மூலவராக அகோர வீரபத்திரர் நின்ற நிலையில் உள்ளார். இறைவி நிஷ்டாம்பிகை ஆவார். |
||
==கும்பகோணம் வீரபத்திரர் கோயில்== |
==கும்பகோணம் வீரபத்திரர் கோயில்== |
07:14, 17 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
வீரபத்திரர் கோயில், தஞ்சாவூரில் அமைந்துள்ளது.
அமைவிடம்
நாயக்கர் காலக் கோயில்களுள் வீரபத்திரர் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். தஞ்சைக் கோட்டையின் கிழக்கு வாயிலுக்கு எதிரில், அகழிக்கு வெளியே அதனையொட்டி அமைந்துள்ள இரண்டு கோயில்களில் தென் புறம் இக்கோயில் உள்ளது. [1]
வரலாறு
முதல் நாயக்க மன்னராகிய செவ்வப்ப நாயக்கர் காலத்தில் தஞ்சைக்கு வந்த கோவிந்த தீட்சிதர் முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் ஒட்டக்கூத்தரைப் போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். [1] இக்கோயில் முன் மண்டபம், மூலவர் கருவறை, இறைவி கருவறை, விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. மூலவர் சன்னதிக்கு வலப்புறமாக அம்மன் சன்னதி உள்ளது. உள்ளே நுழையும்போது ஒரு நந்தி காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்கு எதிரே நந்தியும், பலிபீடமும் உள்ளன.
தேவஸ்தான கோயில்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [2]
இறைவன்
கோயிலின் கருவறையிலுள்ள சுவாமி வாளையும், கேடயத்தையும் ஏந்தியுள்ளார். இத்திருமேனி கர்நாடகப் பாணியில் அமைந்ததாகும். கும்பகோணம் வீரபத்திரர் கோயிலிலுள்ள திருமேனியும் இதனை ஒத்தே காணப்படுகிறது. [1] இக்கோயிலின் மூலவராக அகோர வீரபத்திரர் நின்ற நிலையில் உள்ளார். இறைவி நிஷ்டாம்பிகை ஆவார்.
கும்பகோணம் வீரபத்திரர் கோயில்
கோவிந்த தீட்சிதர் கும்பகோணம் மகாமகக் குளத்தின் வட கரையில் வீர சைவ மடத்திற்கு என்னும் மடத்தில் அனந்த கல்யாண மண்டபம் கட்டுவித்ததோடு அங்கு வீரபத்திரர் கோயிலை எடுப்பித்தார். [1]
தாராசுரம் வீரபத்திரர் கோயில்
கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தில் ஐராவதீசுவரர் கோயிலுக்குப் பின்புறம் பட்டீச்சரம் சாலைக்கு மேற்புறம் வீரபத்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை காணப்படுகின்றது. [3]
அடிக்குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர் 613 007, 1997
- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997, பூலோககிருஷ்ணன் கோயில், ப.230-235, வ.எண்.155
- ↑ குடவாயில் பாலசுப்ரமணியன், தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, 2013