இனியவை நாற்பது செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 140: வரிசை 140:
வேளாண்மை - ஏருடையான் வேளாண்மை 3
வேளாண்மை - ஏருடையான் வேளாண்மை 3
வௌவல் - பிறன்கைப் பொருள் வௌவான் (வௌவாதவன்) வாழ்தல் 21
வௌவல் - பிறன்கைப் பொருள் வௌவான் (வௌவாதவன்) வாழ்தல் 21

[[பகுப்பு:தமிழ் அற நூல்கள்]]

20:13, 14 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

இனியவை நாற்பது செய்திகள் என்னும் இந்தப் பகுதியில் இனியவை நாற்பது என்னும் நூலில் உள்ள நாற்பது பாடல்கள் மற்றும் அதன் கடவுள் வாழ்த்து ஆகியவற்றில் உள்ள செய்திகள் அனைத்தும் தொகுத்துத் தரப்படுகின்றன. வாழ்வில் இனிமை தரும் செய்திகள் இவை. தேவாரம், திருமுறை பாடல்கள் தோன்றிய காலத்தில் இல்லாத ஆனைமுகனைப் போற்றும் பாடல்கள் இதன் கடவுள் வாழ்த்துப்பாடலில் உள்ளதால் கடவுள் வாழ்த்துச் செய்தி மட்டும் பிற்காலத்தது எனத் தெரியவருகிறது. ஒவ்வொரு செய்தியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள எண்ணானது நூலிலுள்ள பாடலின் வரிசையெண்ணைக் குறிக்கும்.

அச்சு – அஞ்சாதே என்று உறவினர் கூறக் கேட்டல் - கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் 37 அஞ்சாமை – அரசன் பகைவர் திறம் கண்டு அஞ்சாமல் இருத்தல் - வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து, மனன் அஞ்சான் ஆகல் 14 அடைக்கலம் – அடைகலப் பொருளைத் தனதாக்கிக்கொள்ளாமை - அன்று அறிவார் யார்?’ என்று அடைக்கலம் வௌவாத நன்றி 30 அடைக்கலம் – அடைந்தார் துயர் கூரா ஆற்றல் 31 அந்தணர் – அந்தணர்க்கு பசு, பொன் தருதல் - ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு 23 அந்தணர் – வேதம் ஓதுதல் - அந்தணர் ஓத்துடைமை 7 அரசர் – பகைவர் படையைத் தடுத்தல் - வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர் தானை தடுத்தல் 33 அரசன் – கெடுங்கோல் வீரம் காட்டாமை - கோல் கோடி மாராயம் செய்யாமை 5 அரசன் - செங்கோலன் ஆகுதல் எய்தும் திறத்தால் 5 அரசன் – தனிப்பட்ட பற்று இல்லாமல் பல உயிரினங்களையும் சமமாகப் பார்த்தல் - பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல் வெற்ற வேல் வேந்தர்க்கு இனிது. 35 அரசன் – மக்களீடம் பற்று இல்லாத வேந்தன் கீழ் வாழாமை - பற்று அமையா வேந்தன் கீழ் வாழாமை 32 அழுக்காறு - அவ்வித்து அழுக்காறு உரையாமை 36 அறம் - அறம் புரிந்து, அல்லவை நீக்கல் 21 அறம் - ஆற்றும் துணையால் அறம் செய்கை 6 அன்புடையார் - பங்கம் (கேடு) இல் செய்கையர் ஆகி, பரிந்து (இரக்கம் கொண்டு), யார்க்கும் அன்புடையர் ஆதல் 9

ஆ – பால் தரும் கன்றும் பசுவும் உடையவன் மனையில் விருந்துண்ணல் - எத் துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும் கற்றா உடையான் விருந்து. 38 ஆசை – மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து வாயில்களில் தோன்றும் ஆசையை அடக்கல் - ஐ வாய வேட்கை அவா அடக்கல் 25 ஆராய்ந்து உரைத்தல் - சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து அறிந்து உரைத்தல் 31 ஆற்றான் – தாங்கமுடியாதவனைத் தாங்கிக்கொள் என்று துன்புறுத்தாமல் இருத்தல் - ஆற்றானை, ‘ஆற்று!’ என்று அலையாமை 28 ஆனைமுகன் - முந்துறப் (முதலில்) பேணி முகம் நான்கு உடையானைச் சென்று அமர்ந்து ஏத்தல் | கடவுள் வாழ்த்து

இ, ஈ

இகழாமை - எளியர், இவர் என்று இகழ்ந்து உரையாராகி, ஒளி பட (அவருக்குப் புகழைத் தோற்றுவித்து) வாழ்தல் 29 இல்லது – (தன்னிடம் இல்லாத ஒன்றை அடைய விரும்பி வருந்திக்கொண்டிருப்பவருக்கு அது கிடைக்கும்படிச் செய்து தருதல் - இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் 24 இளமை - இளமையை மூப்பு என்று உணர்தல் 37 ஈதல் - எள்துணையானும் இரவாது தான் ஈதல் 16 ஈதல் - முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால், மற்று அது தக்குழி (தக்கவர்க்கு) ஈதல் 19

உ, ஊ

உட்கு – உயிர் நீப்பர் மானம் வரின் (திருக்குறள்) - உட்கு இல்வழி, வாழா ஊக்கம் 26 உண்ணார் - உயிர் சென்று தாம் படினும், உண்ணார் (தன்னை மதித்து நடக்காதவரிடம்) கைத்து உண்ணாப் பெருமைபோல் பீடு உடையது இல். 11 உண்மை - உடையான் வழக்கு 2 உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் 29 உறவினன் - பந்தம் (உறவு) உடையான் படையாண்மை 7 ஊர் – காட்டாற்றங்கரையில் ஊர் - கான் யாற்று அடை கரை ஊர் 4 ஊர் – மானம் 1, குலம் 2, கல்வி 3, வண்மை (உடல்-வளம்) 4, அறிவுடமை 5, தானம் 6, தவம் 7, உயர்ச்சி (உயர்வு), 8, தாளாண்மை (முயர்ச்சி) 9 தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் 10, பத்தும் பசிவந்திடப் பறந்து போம்! - பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு (பசியால் பத்தும் போனாலும் ஊரில் காட்டிக்கொள்ளாமல் வாழ்தல்) 40 ஊரார் – ஊரார் சினம் கொள்ளாமல் வாழ்தல் - ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் 33 ஊனம் - ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை மானிடவர்க்கு எல்லாம் 13 ஊனம் - ஊனம் கொண்டாடார், (தன் ஊனம் பற்றி நினைக்காமல்) உறுதி உடையவை கோள் முறையால் கோடல் 27

எ, ஏ, ஒ, ஓ

எல்லி – இரவு வேளாயில் நடந்து செல்லாதிருத்தல் - எல்லிப் பொழுது வழங்காமை 34 ஏவலாளர் – மறுக்காமல் செயல்படும் வேலைக்கார இளைஞன் - ஏவது மாறா இளங் கிளைமை 3 ஒற்கம் - உற்ற பொலிசை (தாழ்வு) கருதி, அறன் ஒரூஉம் (வெறுக்கும்) ஒற்கம் (வறுமை) இலாமை இனிது. 39 ஒற்று - ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியும் மாண்பு 35 ஓரம் - ஒருவர் பாங்கு ஆகாத ஊக்கம் 22

க வரிசை

கடன் – (கடன் வாங்காத வாழ்க்கை) கடம் உண்டு வாழாமை காண்டல் 10 கடன் - கடன் கொண்டும் செய்வன செய்தல் 31 கயவர் - கயவரைக் கை இகந்து (கை கழுவிவிட்டு) வாழ்தல் 29 கல்லார் – கல்லார் பொருள் தந்தாலும் விலகி வாழ்தல் - கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு 25 கல்வி – (வினாவுக்கேற்ற விடை சொல்லி) கழறும் அவை அஞ்சான் கல்வி 12 கல்வி - கற்றார் முன் கல்வி உரைத்தல் 16 கற்றல் - நாளும் நவை போகான் (துன்பம் கருதாமல்) கற்றல் 3 கற்றல் - பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய, கற்றலின் காழ் இனியது இல். 40 கற்றல் - பிச்சை புக்குஆயினும் கற்றல் 1 கற்றவர் - கற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் 32 காத்தல் - வாய்ப்பு உடையராகி, வலவைகள் (தனக்கு இருக்கும் வாய்ப்பால் வல்லடி வழக்குப் பேசுபவர்) அல்லாரைக் காப்பு அடையக் கோடல். (காப்பாற்றல்) 6 குதிரை - ஊரும் கலி மா உரன் (வலிமை) உடைமை 8 குளம் – காடு வளர்த்தலும், குளம் வெட்டலும் அறமு - காவோடு அறக்குளம் தொட்டல் 23 குறுக்கீடு – பிறர் செயலில் தலையிடாமை - அதர் சென்று வாழாமை 11 கூற்றம் - கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு 28 கைக்கொடுத்தல் - நல் சவையில் (அவையில்) கைக்கொடுத்தல் 1 கொடும்பாடு - மன்றில் கொடும்பாடு (பிறர் கொடுமை) உரையாத மாண்பு 30 கொல்லாமை - கொல்லாமை 5 கோள் – நல்ல நேரம், நல்ல திசை வாய்க்கப்பெறுதல் - தேரின், கோள் நட்புத் திசைக்கு. 3

ச வரிசை

சலவர் - சலவரைச் (வஞ்சகரைச்) சாரா விடுதல் 20 சித்தாள் - சிற்றாள் (கைவேலை செய்யும் எடுபிடி) உடையான் படைக்கல மாண்பு 38 சிவன் - கண் மூன்று உடையான் தாள் சேர்தல் | கடவுள் வாழ்த்து சினம் - செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு 36 சூதர் – சூதாளி ஏமாற்ற முடியாத அறிவுக் கூர்மை - குதர் சென்று கொள்ளாத கூர்மை 11 சூதர் - பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச் சூதரைச் சோர்தல் (விட்டு விலகல்) 23 சொல் - சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு 34

த வரிசை

தகுதி - மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம் தகுதியால் வாழ்தல் 20 தடுமாற்றம் - ஆர்வம் உடையவர் ஆற்றவும் நல்லவை, பேதுறார் (தடுமாற்றம் இல்லாதவராய்க்) கேட்டல் 8 தந்தை – அடங்காத் தந்தையைக் கைவிடுக - தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல், கொண்டு அடையான் ஆகல் 7 தவசிகள் - தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு 18 தானம் - தானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு 13 தானம் - தானம் கொடுப்பான் தகை ஆண்மை 27 தானியம் – தானிய வளம் - பற்பல தானியத்தது ஆகி, பலர் உடையும் மெய்த் துணையும் சேரல் 17 திரிதல் – கண்டபடி திரியாமல் வாழ்தல் - பெரு வகைத்து ஆயினும்; பெட்டவை செய்யார், திரிபு இன்றி வாழ்தல் 22 திரு - மயரிகள் (மயக்கம்) அல்லராய், மாண்புடையார்ச் சேரும் திருவும், தீர்வு இன்றேல் 12 திருமால் - தொல் மாண் துழாய் மாலையானைத் தொழல் | கடவுள் வாழ்த்து துச்சில் - துச்சில் இருந்து (வீட்டு மூலையில் இருந்துகொண்டு) துயர் கூரா மாண்பு 39 துறவு - மாணாதாம் (தகாதன செய்ய நேர்ந்தால்) ஆயின், நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல் 2

ந வரிசை

நசை – விரும்பி வந்தவர் ஆசையை நசுக்காமை - நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு 26 நட்பு - புல்லிக் கொளினும் பொருள் அல்லார்தம் (பொருட்டாக மதிக்கத் தக்கவர் அல்லாதார்) கேண்மை கொள்ளா விடுதல் 34 நட்பு – மேலோரைச் சேர் - தெற்றவும் மேலாயார்ச் சேர்வு 1 நண்பர் - நட்டார் உடையான் பகை ஆண்மை 38 நண்பர் - நட்டார்க்கு நல்ல செயல் 17 நண்பர் - நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் 19 நன்றி - நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் 30 நிலா - அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு 9 நிறையில்லார் – மனநிறைவே இல்லாதவர்களை விட்டுவிடுக - நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப் புல்லா விடுதல் 25 நோன்பு - வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு 24

ப வரிசை

பகைவர் – ஒட்டாதவரையும் ஒட்டவைத்துக்கொள்ளல் - எத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் 17 பகைவர் – பிரிந்திருப்பவர் பயன்தரும் சொறகளைக் கூறுதல் - பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு 6 பட்டாங்கு – பட்டறிந்த பாங்குக்குப் பணிந்து நடத்தல் - பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் 19 பத்திமை – தெளிந்தவர்களைத் தீங்கு செய்யும்படித் தூண்டாதிருத்தல் - தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப் பத்திமை 32 பற்று – இருப்பதை மறைக்காமல் தரும் பற்று - எத் திறத்தானும் இயைவ கரவாத பற்று 26 பிச்சை – பிச்சை எடுப்பவன் தன்னைப் பீத்திக்கொள்ளாமை - பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை 39 பிள்ளை - குழவி தளர் நடை காண்டல் 14 பிள்ளை - குழவி பிணி இன்றி வாழ்தல் 12 பிள்ளை - மழலை கேட்டல் அமிழ்தின் 14 பீடு – (பிறன்மனை நோக்காத பேராணெமை – திருக்குறள்) - பிறன் மனைப் பின் நோக்காப் பீடு 15 புலவர் - புலவர்தம் வாய்மொழி போற்றல் 20 புலால் - ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை 4 பெண் - நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் 10 பெற்றோர் – காலையில் - எஞ்சா விழுச் சீர் இரு முதுமக்களைக் கண்டு எழுதல் காலை 18 பொய் - ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத தேர்ச்சியில் தேர்வு 28 பொல்லாங்கு – (தீங்கு) யார் மாட்டும் பொல்லாங்கு உரையாமை நன்கு 5 பொறை - ஒல்லும் துணையும் (முடிந்தவரையில் பொறுத்துக்கொள்ளல்) ஒன்று உய்ப்பான் பொறை 24

ம வரிசை

மகளிர் புன்னகைச் சொல் - முத்து ஏர் முறுவலார் சொல் 1 மடி - தானே மடிந்து இராத் தாளாண்மை 33 மயரிகள் – ஏதோ மயக்கத்தில் மாண்பு அல்லாதன செய்யும் மயரிகளின் திறம் தெரிந்துகொண்டு வாழ்தல் - மறந்தேயும் மாணா மயரிகள் சேராத் திறம் தெரிந்து வாழ்தல் 21 மழை - ஆற்ற வறன் உழக்கும் பைங் கூழ்க்கு (பயிர்களுக்கு) வான் சோர்வு 15 மனைவாழ்க்கை – (சேர்ந்திருந்தால்) ஒப்ப முடிந்தால், மனை வாழ்க்கை 2 மாண்பு - மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல் 10 மாணம் - மிக்காரைச் சேர்தல் மிக மாணம் (வலிமை) 16 மானம் - மானம் அழிந்தபின், வாழாமை 13 மானம் - மானம் உடையார் மதிப்பு. (மதிக்கப்படுதல்) 4 மானம் - மானம் பட வரின், வாழாமை 27 முதியோர் - மன்றில் முதுமக்கள் வாழும் பதி (ஊர்) 18 முறை – முன் (முன் நிகழ்ந்தவை) தான் தெரிந்து முறை செய்தல் 35

ய வரிசை

யானை – அரண்மனை வாயிலில் யானை முழக்கம் - மற மன்னர் தம் கடையுள், மா மலைபோல் யானை மத முழக்கம் கேட்டல் 15 யானை – போரில் யானையின் சினம் காணல் - தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக் கார் வரைபோல் யானைக் கதம் காண்டல் 8 யானை - யானையுடைப் படை காண்டல் 4

வ வரிசை

வருவாய் - வருவாய் அறிந்து வழங்கல் (செலவு செய்தல்) 22 வவ்வார்விடுதல் – கண்டதையெல்லாம் காமுற்றுக் கவ்விக்கொள்வாரைக் கைவிடுதல் - கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று, வவ்வார் விடுதல் 36 விடம் - தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை (மகளிரை) விடம் என்று உணர்தல் 37 விதை - வித்துக் குற்று உண்ணா விழுப்பம் 40 விரும்புபவர் – தன்னை விரும்புபவர் வாழ்தல் - தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் 9 வேளாண்மை - ஏருடையான் வேளாண்மை 3 வௌவல் - பிறன்கைப் பொருள் வௌவான் (வௌவாதவன்) வாழ்தல் 21