அகிலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 30: | வரிசை 30: | ||
==== வரலாற்றுப் புதினங்கள்==== |
==== வரலாற்றுப் புதினங்கள்==== |
||
# ''[[வேங்கையின் மைந்தன் (புதினம்)|வேங்கையின் மைந்தன்]]'' (இராசேந்திர சோழனின் கதை) |
# ''[[வேங்கையின் மைந்தன் (புதினம்)|வேங்கையின் மைந்தன்]]'' (இராசேந்திர சோழனின் கதை) |
||
# ''கயல்விழி'' (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) (சுந்தரபாண்டியன் கதை) |
# ''[[கயல்விழி_(புதினம்)|கயல்விழி]]'' (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) (சுந்தரபாண்டியன் கதை) |
||
# ''[[வெற்றித் திருநகர் (புதினம்)|வெற்றித் திருநகர்]]'' (விசுவநாத நாயக்கன் கதை) |
# ''[[வெற்றித் திருநகர் (புதினம்)|வெற்றித் திருநகர்]]'' (விசுவநாத நாயக்கன் கதை) |
||
13:14, 9 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
அகிலன் என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (ஜூன் 27, 1922 - ஜனவரி 31, 1988) புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக சிறப்புப் பெற்ற தமிழ் எழுத்தாளர். சித்திரப்பாவை நூலுக்காக, 1975ஆம் ஆண்டின் ஞான பீட விருது பெற்றார். இவ்விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் இவரேயாவார். வேங்கையின் மைந்தன் என்ற நாவலுக்காக, 1963 ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
அகிலனுடைய பெரும்பாலான படைப்புகள் பல இந்திய மொழிகளிலும் சீனம், மலாய், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழி போன்ற அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
‘பாவை விளக்கு’ திரைப்படமாக எடுக்கப்பட்டது. இவரது ‘கயல் விழி’ என்னும் புதினம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது.
அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில் 1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக வெளியாகி இருக்கின்றன.
படைப்புகள்
புதினங்கள்
நிகழ்காலப் புதினங்கள்
- அவளுக்கு
- இன்ப நினைவு
- எங்கே போகிறோம் ?
- கொம்புத்தேன்
- கொள்ளைக்காரன்
- சித்திரப்பாவை
- சிநேகிதி
- துணைவி
- நெஞ்சின் அலைகள்
- பால்மரக்காட்டினிலே
- பாவை விளக்கு (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
- புதுவெள்ளம்
- பெண்
- பொன்மலர்
- வாழ்வெங்கே (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.)
- வானமா பூமியா
வரலாற்றுப் புதினங்கள்
- வேங்கையின் மைந்தன் (இராசேந்திர சோழனின் கதை)
- கயல்விழி (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) (சுந்தரபாண்டியன் கதை)
- வெற்றித் திருநகர் (விசுவநாத நாயக்கன் கதை)
கலை
- கதைக் கலை
- புதிய விழிப்பு
சுயசரிதை
- எழுத்தும் வாழ்க்கையும்
மொழிபெயர்ப்பு நூல்கள்
- தாகம் - ஆஸ்கார் வைல்ட்
சிறுகதை தொகுதிகள்
- சத்ய ஆவேசம்
- ஊர்வலம்
- எரிமலை
- பசியும் ருசியும்
- வேலியும் பயிரும்
- குழந்தை சிரித்தது
- சக்திவேல்
- நிலவினிலே
- ஆண் பெண்
- மின்னுவதெல்லாம்
- வழி பிறந்தது
- சகோதரர் அன்றோ
- ஒரு வெள்ளை சோறு
- விடுதலை
- நெல்லூர் அரசி
- செங்கரும்பு
- அகிலன் சிறுகதை - அனைத்துக் கதைகளும் அடங்கிய தொகுப்பு
சிறுவர் நூல்கள்
- தங்க நகரம்
- கண்ணான கண்ணன்
- நல்ல பையன்
பயண நூல்கள்
- நான்கண்ட ரஷ்யா
- சோவியத் நாட்டில்
- மலேசியா சிங்கப்பூரில் அகிலன்
கட்டுரை தொகுப்புகள்
- நாடு நாம் தலைவர்கள் (கட்டுரைகள், 2000)
- வெற்றியின் ரகசியங்கள்
நாடகம்
- வாழ்வில் இன்பம்
திரைக்கதை வசனம்
- காசுமரம்
ஒலித்தகடு
- நாடும் நமது பணியும் - அகிலன் உரை
விருதுகள்
- 1963 - சாகித்ய அகாதமி விருது (வேங்கையின் மைந்தன்)
- 1975 - ஞான பீட விருது (சித்திரப்பாவை)
- 1975 - ராஜா சர் அண்ணாமலை விருது (எங்கே போகிறோம்?)