கலி. பூங்குன்றன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
|||
'''கலி. பூங்குன்றன்''' (பிறப்பு: 15 ஆகசுது, 1939) பகுத்தறிவாளர், எழுத்தாளர் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராக அறியப்படுகிறார். திராவிடர் கழகத் துணைத்தலைவராகவும் விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்து செயல்பட்டு வருபவர். தமிழ்க் கவிதைகளும் எழுதியுள்ளார். எனவே கவிஞர் என்று திராவிடர் கழக அன்பர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள். |
'''கலி. பூங்குன்றன்''' (பிறப்பு: 15 ஆகசுது, 1939) பகுத்தறிவாளர், எழுத்தாளர் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராக அறியப்படுகிறார். திராவிடர் கழகத் துணைத்தலைவராகவும் விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்து செயல்பட்டு வருபவர். தமிழ்க் கவிதைகளும் எழுதியுள்ளார். எனவே கவிஞர் என்று திராவிடர் கழக அன்பர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள். |
||
17:14, 22 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலி. பூங்குன்றன் (பிறப்பு: 15 ஆகசுது, 1939) பகுத்தறிவாளர், எழுத்தாளர் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராக அறியப்படுகிறார். திராவிடர் கழகத் துணைத்தலைவராகவும் விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்து செயல்பட்டு வருபவர். தமிழ்க் கவிதைகளும் எழுதியுள்ளார். எனவே கவிஞர் என்று திராவிடர் கழக அன்பர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள்.
பின்புலமும் பணிகளும்
மயிலாடுதுறையில் பிறந்த இவரின் இயற்பெயர் கலியமூர்த்தி. கால்நடைத் துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றி, கால்நடை விரிவாக்க அலுவலராகப் பொறுப்பில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று திராவிடர் கழகத்தில் முழுநேர இயக்கப் பணியில் ஈடுபட்டார். பெரியார் ஈ. வெ. இராமசாமி, மணியம்மையார் மற்றும் கி. வீரமணி ஆகியோர் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருபவர். விடுதலை (இதழ்)யில் பகுத்தறிவுக் கருத்துகளையும் தமிழின நலம் சார்ந்த எண்ணங்களையும் கட்டுரைகள் வழியாகப் பல ஆண்டுகள் எழுதி வருகிறார். நூல்களும் அவரால் எழுதப்பட்டுள்ளன. மின்சாரம், மயிலாடன் என்னும் புனை பெயர்களில் விடுதலையில் எழுதி வருகிறார். அவருடைய இரண்டு பெண் மக்களுக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார்.
எழுதிய நூல்கள்
- திராவிடர் கழகத்தின் அணுகுமுறை
- சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர் ஏன்?
- தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் (தொகுப்பு)
- பிள்ளை-யார்?
- இயக்க வரலாற்றில் இராமாயண எதிர்ப்பு
- பெரியார் ஒரு வாழ்க்கை நெறி
- தந்தை பெரியார் அறிவுரை 100
- மார்கிஸ்டுகளின் சிந்தனைக்கு
- செங்கற்பட்டில் சுயமரியாதைச் சூறாவளி
- மனித வாழ்க்கைக்கு தேவை நாத்திகமா? ஆத்திகமா?
- சமுதாய இயக்கமா ஆர் எஸ் எஸ் ?
- சாமியார்களின் திருவிளையாடல்
- அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
- ஒற்றைப்பத்தி பாகம்-1
- ஒற்றைப்பத்தி பாகம்-2
- ஒற்றைப்பத்தி பாகம்-3
- ஒற்றைப்பத்தி பாகம்-4
- பார்ப்பனப் புரட்டுக்குப் பதிலடி
சான்று
திராவிடர் கழகக் குறிப்புகள்