கா. செ. நடராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34: வரிசை 34:


சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ்  இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் திரு.இ.திருநவுக்கரசு. பண்டிதர் திரு.இ.இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார்.
சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ்  இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் திரு.இ.திருநவுக்கரசு. பண்டிதர் திரு.இ.இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார்.

கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா.கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார். 1952 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அதை ஏற்றுக்கொண்டு மலையகம் சென்று டிக்கோயாவிலுள்ள இன்வரித் தமிழ் கலவன் பாடசாலையில் தனது ஆசிரியப்பணியை ஆரம்பித்தார். கற்பித்தல் நேரம் தவிர்ந்த மிகுதி நேரத்தைத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் விடிவிற்காய் உழைப்திலும் செலவிட்டார்.

இவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாத யாத்திரையோடு இவரின் அரசியற் பணி ஆரம்பமாகின்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலம். இணுவிற் கந்தசுவாமி கோயில் முன்றலில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகாநாடு ஒன்று நடைபெற்றது (1956) அந்த மகாநாட்டில் தமிழர்களுடைய சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைத்து காங்கேசன் துறையிலிருந்து திருமலை வரை பாதயாத்திரை ஒன்றை நடாத்தவேண்டும் என்று உறுதி பூணப்பட்டது. அதன்படி கோப்பாய் எம்பி திரு வன்னியசிங்கம், செனற்றர் இ.எம்.பி.நாகநாதன் தலைமையில் காங்கேசன் துறையிலிருந்தும், கந்தசாமி ஆசிரியர் தலைமையில் இணுவிலில் இருந்தும் புறப்பட்ட இளைஞர் அணியுள் ஒருவராக நடராசாவும் இணைந்து கொண்டார். இதன் எதிரொலியாக மலையகத்தின் பல இடங்களிலும் சொற்பொழிவுகளை ஆற்றினார். இவர் மக்களிடையே ஆற்றிய சொற்பொழிவுகளில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களே தமிழா விழித்தெழு என்னும் நூலாக உருவாக்கம் பெற்றது. 


==எழுதிய நூல்கள்==
==எழுதிய நூல்கள்==

10:11, 13 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பண்டிதர் கா. செ. நடராசா
படிமம்:Nadarajah.jpg
பிறப்பு(1930-03-21)21 மார்ச்சு 1930
இணுவில், யாழ்ப்பாணம்
இறப்புசூன் 27, 2006(2006-06-27) (அகவை 76)
தமிழ்நாடு
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்இணுவையூர் செ. நடராசன்
பணிஆசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்கா. செல்லையா, சீனுக்குட்டி
வாழ்க்கைத்
துணை
பரமேசுவரி (தி. 1961)

பண்டிதர் கா. செ. நடராசா இலங்கைத் தமிழ் எழுத்தாளரும், ஆசிரியரும், கவிஞரும் ஆவார். இணுவையூர் செ. நடராசன் என்ற பெயரில் எழுதியவர்.[1]

வாழ்க்கை வரலாறு

இவர் இணுவையம்பதியில் வாழ்ந்த செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக 21.03.1930 இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியைத் தனது பெரிய தந்தையராகிய சேதுலிங்கச்சட்டம்பியாரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் கற்றார். பின்னர் இணுவிற் சைவமகாஜனாக் கல்லூரியிற் தனது கல்வியைத் தொடர்ந்தார். பாடசலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களிற் தந்தையாருக்குத் துணையாக விவசாயத்திற்கும், சுருட்டுத் தொழிலுக்கும் செல்வார் சுருட்டுக்கொட்டிலிலே இராமாயணம், மகாபாரதம், ஆகியவை பற்றிய அறிவைப் பூரணமாகப்பெற்றுக்கொண்டார். தனது மாமனாராகிய வடிவேற் சுவாமிகளிடம் வேதாந்தம், உபநிடதம், கைவல்யம், தமிழ்க்காவியங்கள், நளவெண்பா, திருக்குறள் ஆகியவற்றைக் கற்றார்.

சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ்  இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் திரு.இ.திருநவுக்கரசு. பண்டிதர் திரு.இ.இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார்.

கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா.கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார். 1952 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அதை ஏற்றுக்கொண்டு மலையகம் சென்று டிக்கோயாவிலுள்ள இன்வரித் தமிழ் கலவன் பாடசாலையில் தனது ஆசிரியப்பணியை ஆரம்பித்தார். கற்பித்தல் நேரம் தவிர்ந்த மிகுதி நேரத்தைத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் விடிவிற்காய் உழைப்திலும் செலவிட்டார்.

இவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாத யாத்திரையோடு இவரின் அரசியற் பணி ஆரம்பமாகின்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலம். இணுவிற் கந்தசுவாமி கோயில் முன்றலில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகாநாடு ஒன்று நடைபெற்றது (1956) அந்த மகாநாட்டில் தமிழர்களுடைய சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைத்து காங்கேசன் துறையிலிருந்து திருமலை வரை பாதயாத்திரை ஒன்றை நடாத்தவேண்டும் என்று உறுதி பூணப்பட்டது. அதன்படி கோப்பாய் எம்பி திரு வன்னியசிங்கம், செனற்றர் இ.எம்.பி.நாகநாதன் தலைமையில் காங்கேசன் துறையிலிருந்தும், கந்தசாமி ஆசிரியர் தலைமையில் இணுவிலில் இருந்தும் புறப்பட்ட இளைஞர் அணியுள் ஒருவராக நடராசாவும் இணைந்து கொண்டார். இதன் எதிரொலியாக மலையகத்தின் பல இடங்களிலும் சொற்பொழிவுகளை ஆற்றினார். இவர் மக்களிடையே ஆற்றிய சொற்பொழிவுகளில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களே தமிழா விழித்தெழு என்னும் நூலாக உருவாக்கம் பெற்றது. 

எழுதிய நூல்கள்

  • தமிழா விழித்தெழு - 1958: டாக்டர். மு.வரதரஜனின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
  • இளங்கோவின் கனவு - 1961: சுவாமி தனிநாயகம் அடிகளாரின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.
  • இணுவிற் கந்தசுவாமி கோயில் விடுதலை இயக்க வரலாறு
  • தலவாக்கொல்லை திருமுருகன் ஊஞ்சல்
  • இணுவை அப்பர் - 1977
  • வள்ளுவரும் பிரபஞ்சமும் - 1990
  • இந்து கலைக்களஞ்சியக் கட்டுரைகள் - பாகம் இரண்டு, பாகம் மூன்று - 1991 இந்து கலாசார அமைச்சு வெளியீடு.
  • தெட்சணகைலாயபுராணம் பாகம் ஒன்று, பாகம் இரண்டு ஆகியவற்றிற்கு உரை - 1992 இந்து கலாசார அமைச்சு வெளியீடு.

மேற்கோள்கள்

  1. "இணுவை அப்பர்". pp. பக். 77. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._செ._நடராசா&oldid=1933370" இலிருந்து மீள்விக்கப்பட்டது