லால் கிருஷ்ண அத்வானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 95: வரிசை 95:
[[பகுப்பு:இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:இந்துத்துவம்]]

03:19, 10 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

லால் கிருஷ்ண அத்வானி
எதிர் கட்சித் தலைவர்
பதவியில்
ஜூன் 1 2004 – இன்று
முன்னையவர்சோனியா காந்தி
பின்னவர்பதவியிலுள்ளார்
இந்திய துணை பிரதமர், உள்துறை அமைச்சர்
பதவியில்
ஜூன் 29 2002 – மே 20 2004
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்சௌதரி தேவி லால் (1991 முதல் துணை)
எல். கே. ஆட்வாணி (உள்துறை)
பின்னவர்பதவி அழிக்கப்பட்டது
சிவ்ராஜ் பாட்டில் (உள்துறை)
உள்துறை அமைச்சர்
பதவியில்
அக்டோபர் 13 1999 – ஜூன் 28 2002
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்எல். கே. ஆட்வாணி
பின்னவர்எல். கே. ஆட்வாணி
உள்துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 19 1998 – ஏப்ரல் 26 1999
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்இந்திரஜித் குப்தா
பின்னவர்எல். கே. ஆட்வாணி
உள்துறை அமைச்சர்
பதவியில்
மே 16 1996 – ஜூன் 1 1996
பிரதமர்அடல் பிஹாரி வாஜ்பாய்
முன்னையவர்ஷங்கர்ராவ் சவன்
பின்னவர்இந்திரஜித் குப்தா
இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 24 1977 – ஜூலை 15 1979
பிரதமர்மொரார்ஜி தேசாய்
முன்னையவர்வித்யா சரண் சுக்லா
பின்னவர்வித்யா சரண் சுக்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 8, 1927 (1927-11-08) (அகவை 96)
கராச்சி, பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கம்லா ஆட்வாணி
பிள்ளைகள்பிரதிபா ஆட்வாணி, ஜெயந்த் ஆட்வாணி
முன்னாள் கல்லூரிமும்பை பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர்
இணையத்தளம்எல். கே. ஆட்வாணி

லால் கிருஷ்ண அத்வானி (சிந்தி மொழி: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.

அறிமுகம்

அத்வானி தீவிரமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர். தனக்கு விருப்பமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்ற அடையாளத்தால் அதிகம் நேசிக்கப்பட்டவரில்லை.

இளமைக் காலம்

இன்றைய கராச்சி நகர், அன்றைக்கு சிந்து மாகாணம்., இந்த நிலப்பரப்பு தான் அத்வானி பிறந்த இடம். ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் விளையாட்டோடு இருந்தவரை, அரசியல் களத்திற்கு அழைத்து வந்த பெருமை ஆர்.எஸ்.எஸ்-ன் ஷாகாக்களையே சாரும். ராஜ்பால்ஜியின் வழிகாட்டுதலில் அவருக்குப் போதிக்கப்பட்ட முதல் மந்திரம் நான் இந்து.!

அரசியல் பக்கம்

ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாரதிய ஜனசங்கம், ஜனதா மோர்ச்சா, ஜனதா கட்சி என்று மாறி மாறி ஓடிய அவரின் அரசியல் பாதை மிக நீண்டது. உபாத்யாயாவிற்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்திலிருந்தே மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி. பி. சிங், சந்திரசேகர் என்று இவர் மீதும் பா.ஜ.க மீதும் ஏறி சவாரி செய்தவர்களே அதிகம்.

வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது. அத்வானியின் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது, அரசியல் பக்கங்கள் தான்.

நெருக்கடி நிலை, மிசா காலத்தில் இருந்து மீண்டு, கட்சியைக் கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். திறமைசாலி, உறுதியானவர் என்று கட்சியில் அனைத்துத் தரப்பினரிடமும் பெயரெடுத்தவர்.

இராமர் ஆலயம்

பஜனை செய்வதற்காகவோ, கீர்த்தனை பாடுவதற்காகவோ அயோத்திக்குச் செல்லவில்லை. அந்த இடத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வதும் நோக்கம் இல்லை. கரசேவை. கரசேவை. அது மட்டும் தான் ஒரே இலக்கு. 1992-ல் அத்வானி கூறியது இது தான்.

சவால்கள்

ஹவாலா மோசடி வழக்கில் சிக்கியது, அவரது வாழ்வில் ஏற்பட்ட முதல் சறுக்கல். அதை சமாளிக்க அவர் பதவியை ராஜினாமா செய்தது, குற்றமற்றவர் என நிரூபித்தது.

டிச,1999 -ல் நடந்த காந்தஹார் விமான கடத்தல் அரசின் அஸ்திவாரத்தையே உலுக்கியது. தீவிரவாதிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி மௌலானா மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை விடுவித்து, 831 பயணிகளை மீட்டார்.

நாடாளுமன்றத்தின் மீது 2001இல் நடத்தப்பட்ட தாக்குதல், அதற்காக தீவீரவாதிகளை ஒடுக்கும் நோக்குடன் இவர் கொண்டு வந்த பொடா சட்டம் தேசிய அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற தாக்குதல் திட்டத்தின் சூத்திரதாரி அப்சல் குரு, இன்னும் தூக்கிலிடப்படவில்லை.

ஜின்னா ஒரு தியாகி - அத்வானி

ஜின்னா ஒரு துரோகி, அவரை பாராட்டி பேசியவரும் துரோகியே! என கட்சிக்குள்ளும், வி.ஹெச்.பி போன்றோரிடமும் கலகக்குரல் ஒலிக்கத்துவங்கியது. இது பற்றிஅத்வானி கூறியது: ஹவாலா சோதனையின்போது கட்சி எனக்கு துணையாக இருந்தது, ஜின்னா விவகாரத்தில் எனக்கு கட்சியாக துணையாக இல்லை. பெரும்பாலான பாஜக தலைவர்கள் என்னை ஆதரிக்க முன்வரவில்லை. எனது கருத்துக்களை அவர்கள் விரும்பவில்லை. நான் நல்ல எண்ணத்தில் ஜின்னா குறித்துக் கூறிய கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இணைப்புகள்

1. அத்வானி, ஒரு காவிய நாயகன் - தமிழில் வலைப்பூ

2. அத்வானி - கிழக்கின் புத்தகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லால்_கிருஷ்ண_அத்வானி&oldid=1894051" இலிருந்து மீள்விக்கப்பட்டது