பைசையகுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4: வரிசை 4:
==தோற்றம்==
==தோற்றம்==


பைஷஜ்யகுரு [[பைஷஜ்யகுரு சூத்திரம்]] எனும் மஹாயான சூத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றார். அந்த சூத்திரத்தில் தனது 12 உறுதுமொழிகளை நிறைவேற்றிடும் [[போதிசத்த்வர்|போதிசத்த்வராக]] அவர் இருக்கின்றார். அந்த 12 உறுதுமொழிகளுள் 2 உறுதி மொழிகள் குணப்படுத்தும் தன்மை சம்பந்தப்ப்டுத்தி உள்ளன. இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் [[மஞ்சுஸ்ரீ]] போதிசத்த்வருக்கு மருத்துவ புத்தரின் பெருமைகளை கூறுகின்றனர்.
பைஷஜ்யகுரு [[பைஷஜ்யகுரு சூத்திரம்]] எனும் மஹாயான சூத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றார். அந்த சூத்திரத்தில் தனது 12 உறுதிமொழிகளை நிறைவேற்றிடும் [[போதிசத்துவர்|போதிசத்துவராக]] அவர் இருக்கின்றார். அந்த 12 உறுதிமொழிகளுள் 2 உறுதி மொழிகள் குணப்படுத்தும் தன்மை சம்பந்தப்படுத்தி உள்ளன. இந்தச் சூத்திரத்தில் கௌதம புத்தர் [[மஞ்சுஸ்ரீ]] போதிசத்துவருக்கு மருத்துவ புத்தரின் பெருமைகளைக் கூறுகின்றனர்.


<blockquote>
<blockquote>
"'''வருங்காலத்தில் நான் போதி என்கிற புத்தத்தன்மை அடைகையில், கவனிக்க யாரும் இன்றி நோயால் அவதிப்படும் உயிர்கள் என் பெயரை கேட்கும் போது, அவர்கள் தங்கள் நோயில் இருந்து விடுபடுவர். மேலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இன்பமாக அனைத்து வித செல்வங்களை பெற்று இறுதியில் புத்தத்தன்மை அடைவர்'''" - ''பைஷஜ்யகுரு''
"'''வருங்காலத்தில் நான் போதி என்கிற புத்தத்தன்மை அடைகையில், கவனிக்க யாரும் இன்றி நோயால் அவதிப்படும் உயிர்கள் என் பெயரைக் கேட்கும் போது, அவர்கள் தங்கள் நோயில் இருந்து விடுபடுவர். மேலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இன்பமாக அனைத்து வித செல்வங்களையும் பெற்று இறுதியில் புத்தத்தன்மை அடைவர்'''" - ''பைஷஜ்யகுரு''
</blockquote>
</blockquote>


அவர் [[புத்தத்தன்மை]] அடைந்தவுடன், வைடூர்யநிர்பாஸா(Vaidūryanirbhāsa) எனும் கிழக்கு திசையில் உள்ள உலக்த்துக்கு புத்தர் ஆனார். அங்கு [[சூர்யப்ரபா]] மற்றும் [[சந்திரபபிரபா]] என்ற இரண்டு போதிசத்த்வர்கள் அவருக்கு சேவை புரிகின்றனர்
அவர் [[புத்தத்தன்மை]] அடைந்தவுடன், வைடூர்யநிர்பாஸா (Vaidūryanirbhāsa) எனும் கிழக்கு திசையில் உள்ள உலக்த்துக்குப் புத்தர் ஆனார். அங்கு [[சூர்யப்ரபா]] மற்றும் [[சந்திரபபிரபா]] என்ற இரண்டு போதிசத்துவர்கள் அவருக்குச் சேவை புரிகின்றனர்


==ஜப்பானிய பௌத்ததில் பங்கு==
==ஜப்பானிய பௌத்ததில் பங்கு==

08:41, 17 நவம்பர் 2007 இல் நிலவும் திருத்தம்

நிற்கும் பைஷஜ்யகுரு புத்தர்

பைஷஜ்யகுரு (藥師佛/薬師 சீனம் Yàoshīfó, ஜப்பானியம் Yakushi, சமஸ்கிருதம் भैषज्यगुरु, IPA Bhaiṣajyaguru ) முழுமையான பெயர் 'பைஷஜ்யகுருவைடூர்யப்ரபா(Bhaiṣajyaguruvaidūryaprabha) (Jp. 薬師瑠璃光如来 Yakushirurikō nyorai) மருத்துவத்திற்கான புத்தர் ஆவார். இவரது பெயருக்கு 'வைடூர்ய ஒளியின் அதிபதி' என்று பொருள். மஹாயான பௌத்தத்தில் இவரை சாக்கிமுனி புத்தரின் குணப்படுத்தும் தன்மையின் உருவகமாகக் கருதுகின்றனர். பௌத்தத்தில் புத்தரை மனத்தின் துன்பங்களை நீக்கும் மருத்துவராகக் கருதுகின்றனர்.எனவே இவரை 'மருத்துவ புத்தர்' என்றும் அழைப்பர்.

தோற்றம்

பைஷஜ்யகுரு பைஷஜ்யகுரு சூத்திரம் எனும் மஹாயான சூத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றார். அந்த சூத்திரத்தில் தனது 12 உறுதிமொழிகளை நிறைவேற்றிடும் போதிசத்துவராக அவர் இருக்கின்றார். அந்த 12 உறுதிமொழிகளுள் 2 உறுதி மொழிகள் குணப்படுத்தும் தன்மை சம்பந்தப்படுத்தி உள்ளன. இந்தச் சூத்திரத்தில் கௌதம புத்தர் மஞ்சுஸ்ரீ போதிசத்துவருக்கு மருத்துவ புத்தரின் பெருமைகளைக் கூறுகின்றனர்.

"வருங்காலத்தில் நான் போதி என்கிற புத்தத்தன்மை அடைகையில், கவனிக்க யாரும் இன்றி நோயால் அவதிப்படும் உயிர்கள் என் பெயரைக் கேட்கும் போது, அவர்கள் தங்கள் நோயில் இருந்து விடுபடுவர். மேலும் மிகுந்த ஆரோக்கியத்துடன் இன்பமாக அனைத்து வித செல்வங்களையும் பெற்று இறுதியில் புத்தத்தன்மை அடைவர்" - பைஷஜ்யகுரு

அவர் புத்தத்தன்மை அடைந்தவுடன், வைடூர்யநிர்பாஸா (Vaidūryanirbhāsa) எனும் கிழக்கு திசையில் உள்ள உலக்த்துக்குப் புத்தர் ஆனார். அங்கு சூர்யப்ரபா மற்றும் சந்திரபபிரபா என்ற இரண்டு போதிசத்துவர்கள் அவருக்குச் சேவை புரிகின்றனர்

ஜப்பானிய பௌத்ததில் பங்கு

ஜப்பானிய மொழியில் பைஷஜ்யகுருவை 'யகூஷி' என்று அழைக்கின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரபலாமக இருந்த அக்ஷோப்ய புத்தரின் வழிபாடு, இந்த புத்தரின் வரவால் பொலிவிழந்து போனது. மேலும் யகூஷியின் குணப்படுத்தும் செயல் க்ஷீதிகர்ப போதிசத்த்வராலும் செய்யப்படுவதால், ஜப்பானில் பெரும்பாலும் குணப்படுத்தும் வழிபாட்டிற்கு 'ஜிஸோ' என்றழைக்கப்படும் க்ஷீதிகர்பரையே வணங்குகின்றனர். இருந்தாலும் மரணத்தின் போது பைஷஜ்யகுரு வணங்கப்ப்டுகிறார்.

திபெத்திய பௌத்தம்

திபெத்தியில் பெரும்பாண்மையான மக்கள், நோய்களை குணப்படுத்தம், ஆரோக்கியத்தை வளர்க்கவும் மருத்துவ புத்தரை வணங்குகின்றனர். புற நோய்களை மட்டும் அல்லாது அக நோய்களாம் கோபம், பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபடவும் இவரின் வழிபாடு உதவுகின்றது.

சீன பௌத்தம்

மருத்துவ புத்தரை வணங்கும் பழக்கும் சீனத்தில் பிரபலமாக உள்ளது. மருத்துவ புத்தர், கௌதம புத்தர், மற்றும் அமிதாப புத்தர் ஆகிய மூவரும் ஒன்று இனைந்து திரிமூர்த்திகளாக திகழ்கின்றனர். சீன பௌத்தர்கள் இவரின் மந்திரத்தை நோய்களை குணப்படுத்த உச்சாடனம் செய்கின்றனர்.

மந்திரங்கள்

மஹாயான பௌத்தத்தில் மருததுவ புத்தர் தொடர்பான பல மந்திரங்கள் உள்ளன.

அவற்றில் முக்கியமாக, பைஷஜ்யகுரு சூத்திரத்தில் கீழ்கண்ட தாரணி அமைந்துள்ளது

:நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்ய-சமுத்கதே ஸ்வாஹா namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye bhaiṣajya-samudgate svāhā

மேற்கூறிய மந்திரத்தின் இன்னோரு பதிப்பு:

ஓம் நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா

oṃ namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye mahābhaiṣajye bhaiṣajye rāja samudgate svāhā

மேற்கூறிய மந்திரத்தின் இறுதி பகுதி மட்டும் மருத்துவ புத்த இருதய மந்திரம் என்று அழைக்கப்படுகிறது

ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா


திபெத்திய பௌத்ததில் மருத்துவ புத்தரின் மந்திர பயன்பாடு

தீய கருமங்களை நீக்கவும், நோய்களை குணப்படுத்தவும் மருத்துவ புத்தரின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது. ஒரு கோப்பை தன்னீரின் மீது 108 முறை மருத்துவ புத்தரின் மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது, அந்த தண்ணீர் மருத்துவ புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. அந்த நீரை பருகினால் நோய்கள் குணமாகவதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர்

மேலும் திபெத்திய புத்தத்தில் புலால் உண்பதால் ஏற்படும் தீய கருமத்திலிர்ந்து விடுபட மருத்துவ புத்த இருதய மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. புலாலின் மீது இந்த மந்திரத்தை உச்சாடனம் செயாதால், கொல்லப்பட்ட மிருகம் மறுபிறவியில் மோக்ஷம் அடையும் என திபெத்தியர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைசையகுரு&oldid=186160" இலிருந்து மீள்விக்கப்பட்டது