சமூகவுடைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 223.224.14.57ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4: வரிசை 4:
சமூகவுடமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பல தரப்பட்ட சித்தாந்தங்கள் வெளிவந்தன. இச்சிந்தாந்தங்கள் அவை முன்னிறுத்திய அரசியல் கொள்கைகளின் காரணமாக வேறுபட்டு நின்றன.
சமூகவுடமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பல தரப்பட்ட சித்தாந்தங்கள் வெளிவந்தன. இச்சிந்தாந்தங்கள் அவை முன்னிறுத்திய அரசியல் கொள்கைகளின் காரணமாக வேறுபட்டு நின்றன.


=== மார்க்சிய சமூகவுடமை ===
=== மார்க்சிய சமூகவுடைமை ===
மார்க்சிய சமூகவுடைமை (Marxian Socialism) என்பது [[கார்ல் மார்க்ஸ்]] மற்றும் [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] இணைந்து எழுதிய [[பொதுவுடமை அறிக்கை|பொதுவுடமை அறிக்கையில்]] (The Communist Manifesto) வெளியான சிந்தனை ஆகும். மார்க்சிய சமூகவுடைமையின் தத்துவ அடித்தளங்கள் (Ideological premises):
மார்க்சிய சமூகவுடைமை (Marxian Socialism) என்பது [[கார்ல் மார்க்ஸ்]] மற்றும் [[பிரெட்ரிக் ஏங்கல்ஸ்]] இணைந்து எழுதிய [[பொதுவுடமை அறிக்கை|பொதுவுடமை அறிக்கையில்]] (The Communist Manifesto) வெளியான சிந்தனை ஆகும். மார்க்சிய சமூகவுடைமையின் தத்துவ அடித்தளங்கள் (Ideological premises):
* இணைமுரண் பொருள்முதலியம் (Dialectical Materialism)
* இணைமுரண் பொருள்முதலியம் (Dialectical Materialism)
வரிசை 10: வரிசை 10:
* பாட்டாளிகளின் ஏகாதிபத்தியம் (Proletariat Dictatorship)
* பாட்டாளிகளின் ஏகாதிபத்தியம் (Proletariat Dictatorship)


மார்க்சிய சமூகவுடமை முதலாளித்துவத்தை வீழ்த்த எண்ணியது. பாட்டாளிகளின் புரட்சி உருவாக வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேசங்கள் கடந்து உலகத்தின் அனைத்து உழைக்கும் வர்கத்தினரும் ஒன்றிணைய வேண்டுமென்ற சிந்தனையை முன்னிறுத்தியது.
மார்க்சிய சமூகவுடைமை முதலாளித்துவத்தை வீழ்த்த எண்ணியது. பாட்டாளிகளின் புரட்சி உருவாக வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேசங்கள் கடந்து உலகத்தின் அனைத்து உழைக்கும் வர்கத்தினரும் ஒன்றிணைய வேண்டுமென்ற சிந்தனையை முன்னிறுத்தியது.


மார்க்சிய சமூகவுடமை சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் முதன்மையானது [[உருசியா]]வில் 1917ல் நடைபெற்ற [[உருசியப் புரட்சி (1917)|போல்செவிக் புரட்சி]].
மார்க்சிய சமூகவுடைமை சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் முதன்மையானது [[உருசியா]]வில் 1917ல் நடைபெற்ற [[உருசியப் புரட்சி (1917)|போல்செவிக் புரட்சி]].


=== மக்களாட்சிசார் சமூகவுடமை===
=== மக்களாட்சிசார் சமூகவுடமை===

13:49, 2 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

சமவுடைமை அல்லது சமூகவுடைமை (Socialism, சோசலிசம், சோஷியலிசம் அல்லது சோசியலிசம்) என்பது ஒரு அரசியல்-பொருளியல் கோட்பாடு. பொருளாதார நிர்வாகத்தில் கூடிய அரச பங்களிப்பை வலியுறுத்துகின்றது. உற்பத்திக் காரணிகள் (Means of Production) மற்றும் இயற்கை வளங்கள் அரசு அல்லது சமூக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. முக்கிய துறைகள் அரசுடமையாக இருப்பதையும், சமத்துவத்தை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேலும், சோசலிச சிந்தனைகள் பொது நலம், கூட்டு செயற்பாடு ஆகிவற்றை முன்நிறுத்தி, இலாப நோக்கத்தை கொண்டு இயங்கும் முதலாளித்துவ கொள்கைகள், தனி நபர்களிடம் செல்வம் குவிதலை எதிர்த்து அமைகின்றன. தொழிற்புரட்சி மற்றும் முதலாளித்துவம் உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வாக சமவுடமை கோட்பாடு முன்வைக்கப்பட்டது.

பல்வேறு வடிவங்கள்

சமூகவுடமை கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பல தரப்பட்ட சித்தாந்தங்கள் வெளிவந்தன. இச்சிந்தாந்தங்கள் அவை முன்னிறுத்திய அரசியல் கொள்கைகளின் காரணமாக வேறுபட்டு நின்றன.

மார்க்சிய சமூகவுடைமை

மார்க்சிய சமூகவுடைமை (Marxian Socialism) என்பது கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் இணைந்து எழுதிய பொதுவுடமை அறிக்கையில் (The Communist Manifesto) வெளியான சிந்தனை ஆகும். மார்க்சிய சமூகவுடைமையின் தத்துவ அடித்தளங்கள் (Ideological premises):

  • இணைமுரண் பொருள்முதலியம் (Dialectical Materialism)
  • வரலாறு என்பது வர்க்கப் போராட்டமே (History as a Class struggle)
  • பாட்டாளிகளின் ஏகாதிபத்தியம் (Proletariat Dictatorship)

மார்க்சிய சமூகவுடைமை முதலாளித்துவத்தை வீழ்த்த எண்ணியது. பாட்டாளிகளின் புரட்சி உருவாக வேண்டும் என்று பரிந்துரைத்தது. தேசங்கள் கடந்து உலகத்தின் அனைத்து உழைக்கும் வர்கத்தினரும் ஒன்றிணைய வேண்டுமென்ற சிந்தனையை முன்னிறுத்தியது.

மார்க்சிய சமூகவுடைமை சிந்தனைகளின் தாக்கத்தால் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் முதன்மையானது உருசியாவில் 1917ல் நடைபெற்ற போல்செவிக் புரட்சி.

மக்களாட்சிசார் சமூகவுடமை

சமவுடமை என்ற இலக்கை மக்களாட்சி மற்றும் சுதந்திர அமைப்புகளின் வாயிலாக அடைய வேண்டும் என்று முன்னிறுத்திய கோட்பாடே மக்களாட்சிசார் சமவுடமை (Democratic Socialism).

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இக்கோட்பாடு மார்க்சியம் பரிந்துரைத்த, சமவுடைமையை அடைய வழிவகுக்கும், முறைகளான வர்க்கப் போராட்டம் மற்றும் தீவிரத் தன்மை வாய்ந்த புரட்சிகளை பரிந்துரைக்க மறுத்தது. அதிகாரத்துவ ஏகாதிபத்ய அமைப்புகளை எதிர்த்தது. வாக்குகளும் நாடாளுமன்றங்களும் தான் சமூக சீர்திருத்தத்தின் கருவிகளாக இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்தது.

சந்தை சமூகவுடமை

உற்பத்தி காரணிகள் அரசு அல்லது சமூகக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், எனினும் அவை தடையில்லா அங்காடிச் சக்திகளுக்கு (Market Forces) உட்பட்டே இயங்க வேண்டும் என்ற பொருளியல் அமைப்பு தான் சந்தைசார் சமூகவுடமை (Market Socialism) ஆகும். அரசுடமை நிறுவனங்கள் ஈட்டும் இலாபம், ஒருசிலரின் கைகளில் குவியாமல், மக்களுக்கு சமமாக பகிரும் வழிகளாக:

  • இலாபத்தின் பங்கை நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் பகிர்ந்தளித்தல்,
  • இலாபத்தை பொது நிதியாக (public finance) மக்கள் நலனுக்கு பயன்படுத்துதல்,
  • இலாபத்தை சமூக பங்காக (social dividend) மக்களுக்கே நேரடியாக பகிர்ந்தளித்தல்

போன்ற முறைகளை பரிந்துரைக்கின்றது.

திட்டமிடப்பட்ட பொருளாதார அமைப்பு

உறபத்தி காரணிகளை பொதுவுடமைகளாக வைத்துக்கொண்டு பொருளியல் திட்டமிடுதலின் வழியாக உற்பத்தி மற்றும் பகிர்வை கட்டுப்படுத்தும் அமைப்பு.

அனைத்து சமவுடமை நாடுகளிலும் பயன்படுத்தப்படும் முறை. குறிப்பாக இது சோவியத் ஒன்றியம் உருவாக்கிய அமைப்பு. 1930களில் ஏற்பட்ட பெருமந்தமும் சோவியத்து உருசியாவின் எழுச்சியும் திட்டமிடுதலின் இன்றியமையாமையை உலகிற்கு உணர்த்தியது. அதன் பின்னர், 'பொருளாதாரத்தில் தலையிடா' கொள்கையை முன் வைக்கின்ற, முதலாளித்துவ நாடுகளும் கூட சிறிய அளவிலான திட்டமிடுதலைப் பயன்படுத்தத் தொடங்கின. திட்டமிடுதல் என்பது சோவியத்து உருசியா உலகிற்கு அளித்த பரிசாக புகழப்படுகிறது.

சமவுடமை முன்வைக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு வாதங்கள்

முதலாளித்துவம் மற்றும் கட்டுப்பாடற்ற வணிகக் கோட்பாடுகளால் ஏற்படும் தீங்குகளாக சமவுடமைவாதிகள் கூறுபவை:

  • முதலாளித்துவம் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கின்றது.
  • இலாபம் மற்றும் செல்வம் சிலரின் கைகளில் மட்டுமே குவிகின்றது.
  • உழைப்புச்சுரண்டல்
  • தலையிடா கொள்கை பின்பற்றும் அரசுகளால் சமூகத் தேவைகள் புறக்கணிக்கப் படுகின்றன.
  • கட்டுப்பாடற்ற வணிகக் கொள்கை பின்பற்றப் படுவதனால் வீழ்ச்சி மற்றும் பெருமந்தங்கள் உருவாகின்றன.

சமூகவுடமை நிகழ்வுகள்

சமூகவுடமை கோட்பாடுகளின் தாக்கத்தால் உழைக்கும் வர்க்க மக்களின் ஒன்று கூடல், மக்கள் புரட்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ள.

முதலாவது பன்னாட்டு அமைப்பு

சமவுடமை கோட்பாட்டின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது பன்னாட்டு உழைப்பாளர் சங்கம் (International Workingmen Association). இது முதலாவது பன்னாட்டு அமைப்பு (First International) என்று அழைக்கப்படுகிறது. இருவேறு அணிகளின் கருத்தியல் வேறுபாடுகளின் காரணமாக கருத்து மோதல் ஏற்பட்டது. எனினும், குறுகிய காலத்திலேயே, ஐரோப்பாவின் பல்வேறு தொழிலாளர் இயக்கங்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உதவியது.

இரண்டாம் பன்னாட்டு அமைப்பு

1789 பிரஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டான 1889ல் இரண்டாம் பன்னாட்டு அமைப்பு (Second International) நடைபெற்றது. மார்க்சிய சிந்தனைகளுக்கு ஆதரவு பெருகுவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்தது. இதில் பல்வேறு சமவுடமை கட்சிகளை ஒருகிணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது.

உருசிய போல்சிவிக் புரட்சி

1917ல் உருசியாவில் நடைபெற்ற 'பிப்ரவரி புரட்சி'யின் காரணமாக இரண்டாம் நிக்கலாஸ் அரியணையிலிருந்து வேளியேற்றப் பட்டதற்கு மிக முக்கியமாக விளங்கியது சமூகவுடமை இயக்கங்களே. சார் மன்னரின் வீழ்ச்சிக்குப் பின் கெரன்சிகியின் தலைமையில் தற்கால அரசு அமைக்கப்பட்டது. பின்னர், கெரன்சிகியின் அரசை வீழ்த்தி விளாதிமிர் லெனின் தலைமையில் போல்சிவிக்குகள் சமவுடமை கோட்பாடுகளின் அடிப்படையில் அரசமைத்தனர். கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோருக்குப் பின்னர் மிக முக்கியமான சமவுடமை கொள்கையாளராக அறியப்பட்டவர் லெனின்.

சமவுடமை நாடுகள்

உலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு தருணங்களில் தங்களை சமவுடமை நாடுகளாக அடையாளப் படுத்திக் கொண்டுள்ளன. சோவியத்து உருசியாவின் வெற்றியினால் ஈர்க்கப்பட்டு தங்களை சமவுடமை அரசுகளாக அடையாளப் படுத்திக்கொண்டன. இந்நாடுகளை இரு வகைகளாக பார்க்கலாம்

  1. மார்க்சிய-லெனினிய சமவுடமை நாடுகள்.
  2. பிற சமவுடமை நாடுகள்.

மார்க்சிய-லெனினிய சமவுடமை நாடுகள்

இவை ஒற்றை கட்சி மட்டுமே ஆட்சி செய்யக்கூடிய அமைப்பைக் கொண்ட சமவுடமை நாடுகள். பிற உலக நாடுகளால் இவை கம்யூனிச நாடுகள் என்று அழைக்கப் பட்டாலும், இவை தங்களை கம்யூனிச நிலையை நோக்கி பயணிக்கும் சமவுடமை அரசுகளாவே அடையாளப் படுத்துகின்றன.

பிற சமவுடமை நாடுகள்

இந்நாடுகள் மக்களாட்சி முறையிலான பல-கட்சி அமைப்பை கொண்டிருந்தாலும் தத்தம் அரசியலமைப்புகளில் தங்களை சமவுடமை அரசுகளாக அடையாளப் படுத்தி கொள்ளும் நாடுகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகவுடைமை&oldid=1861022" இலிருந்து மீள்விக்கப்பட்டது