உசுமானியா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18: வரிசை 18:
'''உசுமானியா பல்கலைக்கழகம்''' (''Osmania University, جامعہ عثمانیہ''), ஒரு மாநில பொதுப் பல்கைலைக்கழகம், இது [[இந்தியா]]வின் [[தெலுங்கானா|தெலுங்கானா]]வின் [[ஐதராபாத்து]] நகரில் அமைந்திருக்கிறது. இது 1918-ல் மஹபூப் அலி கானின் தலைமை கட்டடக் கலைஞர் நவாப் சர்வார் ஜங்கால் கட்டப்பட்டது.<ref name="R.L.Geiger">{{cite book| title=Curriculum, accreditation, and coming of age of higher education| url=http://books.google.com/books?id=Mc4gszrwUBQC&pg=PA154&dq=formation+osmania+university&hl=en&ei=aFeaTqDYBYir-gavlrS9BQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEEQ6AEwBA#v=onepage&q=formation%20osmania%20university&f=false| pages=154–155| author=Roger L. Geiger| publisher=Transaction Publishers| isbn=978-1-4128-1031-9| year=2009| accessdate=16 October 2011}}</ref> ஐதராபாத்தின் கடைசி நிசாம் மிர் உசுமான் அலி கான் அவர்களால் துவங்கப்பட்டு அவர் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.<ref>{{cite news|url=http://www.osmania.ac.in/InfoAct/Item01.pdf |title=H.E.H. Nizam Mir Osman Ali Khan |publisher= |date= |accessdate=2012-08-21}}</ref> உருதுவைப் பயிற்று மொழியாகக் கொண்ட முதல் இந்தியப் பல்கலைக்கழகமும் இதுவாகும்.<ref name="R.L.Geiger"/> ஆற்றல்சால் பல்கலைகழகத் தகுதியைப் பெற்ற இப்பல்கலைகழகம் 2012 ல் மானுடவியல், அறிவியல் மற்றும் வணிகவியலில் நாட்டின் தலைசிறந்த பலகலைகழகங்களில் ஆறாம் இடத்தைப் பெற்றது.<ref name="Ranking of OU">{{cite news|url=http://www.osmania.ac.in/Pressnote-OU6thRanking.pdf |title=Osmania University ranked 6th among top ten universities |publisher= |date= |accessdate=2012-08-21}}</ref> இதன் முதன்மை வளாகம் இந்தியா டுடேவின் தரவரிசையில் மாநிலப் பல்கலைகழகங்களில் பத்தாம் இடம் பெற்றது.<ref>{{cite news|url=http://indiatoday.intoday.in/gallery/indias+top+50+universities/1/3229.html#photo50 |title=India's top 50 universities - &#124; Photos &#124; India Today &#124; |publisher=Indiatoday.intoday.in |date= |accessdate=2012-08-21}}</ref> 80 நாடுகளில் இருந்து 3,700 பன்னாட்டு மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்(2012 கணக்கின் படி)..<ref>{{cite news|url=http://ibnlive.in.com/news/osmania-tells-foreign-students-to-keep-off-drugs/286849-62-131.html|title=Hyderabad: Osmania University tells foreign students to keep off drugs |publisher=ibnlive.in.com|date=|accessdate=2012-09-01}}</ref>
'''உசுமானியா பல்கலைக்கழகம்''' (''Osmania University, جامعہ عثمانیہ''), ஒரு மாநில பொதுப் பல்கைலைக்கழகம், இது [[இந்தியா]]வின் [[தெலுங்கானா|தெலுங்கானா]]வின் [[ஐதராபாத்து]] நகரில் அமைந்திருக்கிறது. இது 1918-ல் மஹபூப் அலி கானின் தலைமை கட்டடக் கலைஞர் நவாப் சர்வார் ஜங்கால் கட்டப்பட்டது.<ref name="R.L.Geiger">{{cite book| title=Curriculum, accreditation, and coming of age of higher education| url=http://books.google.com/books?id=Mc4gszrwUBQC&pg=PA154&dq=formation+osmania+university&hl=en&ei=aFeaTqDYBYir-gavlrS9BQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEEQ6AEwBA#v=onepage&q=formation%20osmania%20university&f=false| pages=154–155| author=Roger L. Geiger| publisher=Transaction Publishers| isbn=978-1-4128-1031-9| year=2009| accessdate=16 October 2011}}</ref> ஐதராபாத்தின் கடைசி நிசாம் மிர் உசுமான் அலி கான் அவர்களால் துவங்கப்பட்டு அவர் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.<ref>{{cite news|url=http://www.osmania.ac.in/InfoAct/Item01.pdf |title=H.E.H. Nizam Mir Osman Ali Khan |publisher= |date= |accessdate=2012-08-21}}</ref> உருதுவைப் பயிற்று மொழியாகக் கொண்ட முதல் இந்தியப் பல்கலைக்கழகமும் இதுவாகும்.<ref name="R.L.Geiger"/> ஆற்றல்சால் பல்கலைகழகத் தகுதியைப் பெற்ற இப்பல்கலைகழகம் 2012 ல் மானுடவியல், அறிவியல் மற்றும் வணிகவியலில் நாட்டின் தலைசிறந்த பலகலைகழகங்களில் ஆறாம் இடத்தைப் பெற்றது.<ref name="Ranking of OU">{{cite news|url=http://www.osmania.ac.in/Pressnote-OU6thRanking.pdf |title=Osmania University ranked 6th among top ten universities |publisher= |date= |accessdate=2012-08-21}}</ref> இதன் முதன்மை வளாகம் இந்தியா டுடேவின் தரவரிசையில் மாநிலப் பல்கலைகழகங்களில் பத்தாம் இடம் பெற்றது.<ref>{{cite news|url=http://indiatoday.intoday.in/gallery/indias+top+50+universities/1/3229.html#photo50 |title=India's top 50 universities - &#124; Photos &#124; India Today &#124; |publisher=Indiatoday.intoday.in |date= |accessdate=2012-08-21}}</ref> 80 நாடுகளில் இருந்து 3,700 பன்னாட்டு மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்(2012 கணக்கின் படி)..<ref>{{cite news|url=http://ibnlive.in.com/news/osmania-tells-foreign-students-to-keep-off-drugs/286849-62-131.html|title=Hyderabad: Osmania University tells foreign students to keep off drugs |publisher=ibnlive.in.com|date=|accessdate=2012-09-01}}</ref>


தன்னுடைய பல்வேறு வளாகங்களில் மற்றும் துணைக் கல்லூரிகளில் 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இது இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றாகும். குறிப்பாக அது தன்னுடைய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, சட்டம், கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மைத் துறைகளுக்காக அறியப்படுகிறது. உசுமானியா மருத்துவக் கல்லூரி முன்பு இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்தது.<ref>{{cite web|title=About OMC|url=http://osmaniamedicalcollege.org/about-omc/|publisher=Osmania Medical College|accessdate=3 October 2013}}</ref> அது இப்போது இந்தியாவின், ஆந்திர பிரதேசத்தின் என்டிஆர் உடல்நலப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளது.<ref>{{cite web|title=Affiliated University|url=http://osmaniamedicalcollege.org/affiliated-university/|publisher=Osmania Medical College|accessdate=3 October 2013}}</ref>
தன்னுடைய பல்வேறு வளாகங்கள் மற்றும் துணைக் கல்லூரிகளில் 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் , இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றாக இப் பல்கலைக் கழகம் விளங்குகிறது. குறிப்பாக அது தன்னுடைய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, சட்டம், கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மைத் துறைகளுக்காக அறியப்படுகிறது. உசுமானியா மருத்துவக் கல்லூரி முன்பு இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்தது.<ref>{{cite web|title=About OMC|url=http://osmaniamedicalcollege.org/about-omc/|publisher=Osmania Medical College|accessdate=3 October 2013}}</ref> அது இப்போது இந்தியாவின், ஆந்திர பிரதேசத்தின் என்டிஆர் உடல்நலப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளது.<ref>{{cite web|title=Affiliated University|url=http://osmaniamedicalcollege.org/affiliated-university/|publisher=Osmania Medical College|accessdate=3 October 2013}}</ref>


அதன் முன்னாள் மாணவர்கள் தங்களைத் தாங்களே தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் (குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் பிரிவைப் பார்க்கவும்)
அதன் முன்னாள் மாணவர்கள் தங்களைத் தாங்களே தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் (குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் பிரிவைப் பார்க்கவும்)


== வரலாறு ==
== வரலாறு ==
[[ஐதராபாத்து]] மாநில ஏழாவது நிசாமான நவாப் மிர் ஓஸ்மான் அலி கான் அவர்களால், இந்தியாவில் உயர் கல்விக்காக 1918 ஆம் ஆண்டில் நிறுவபட்ட இந்தப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவின் மூன்றாவது பழையதும் முந்தைய அரசகுல ஐதராபாத் மாநிலதில் உருவான முதல் பல்கலைக்கழகமும் ஆகும்.<ref>[http://www.oucde.ac.in/abcde00.htm வரலாறு] oucde.ac.in</ref>. கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளாக இது அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பேணிக் காத்துவந்துள்ளது. அந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்தமாக தேசத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.
[[ஐதராபாத்து]] மாநில ஏழாவது நிசாமான நவாப் மிர் ஓஸ்மான் அலி கான் அவர்களால், இந்தியாவில் உயர் கல்விக்காக 1918 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவின் மூன்றாவது பழையதும் முந்தைய அரசகுல ஐதராபாத் மாநிலத்தில் உருவான முதல் பல்கலைக்கழகமும் ஆகும்.<ref>[http://www.oucde.ac.in/abcde00.htm வரலாறு] oucde.ac.in</ref>. கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளாக இது அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பேணிக் காத்துவந்துள்ளது. அந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்தமாக தேசத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.


.
.
வரிசை 30: வரிசை 30:


== கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் சேர்க்கை ==
== கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் சேர்க்கை ==
உசுமானியா பல்கலைக்கழகம் ஒரு இலாபநோக்கமற்ற பல்கலைக்கழகம், இது அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பொறியியல், முதுகலைகள் மற்றும் பேரறிஞர் படிப்பு திட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது, அளிக்கப்படும் ஒவ்வொரு கல்வி திட்டத்துக்கும் நடத்தப்படும் தேசிய நுழைவுத் தேர்வு மூலம் இது மதிப்பிடப்படுகிறது. ஆராய்ச்சி செயல்நடவடிக்கைகள், யூஜிசி (பல்கலைக்கழக மானிய வாரியம்) அல்லது சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான பேரவை) போன்ற பல்வேறு முகமை நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது, இவை இந்திய அரசாங்கத்தின் சுய ஆட்சி நிறுவனங்களாகும். 1918 ஆம் ஆண்டில் நிசாமால் நிறுவப்பட்ட உசுமானியா பல்கலைக்கழகம், இந்தியாவின் ஏழாவது பழைய பல்கலைக்கழகமாகும்.
உசுமானியா பல்கலைக்கழகம் ஒரு இலாபநோக்கமற்ற பல்கலைக்கழகம், இது அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பொறியியல், முதுகலைகள் மற்றும் பேரறிஞர் படிப்பு திட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது, அளிக்கப்படும் ஒவ்வொரு கல்வி திட்டத்துக்கும் நடத்தப்படும் தேசிய நுழைவுத் தேர்வு மூலம் இது மதிப்பிடப்படுகிறது. ஆராய்ச்சி செயல்நடவடிக்கைகள், யூஜிசி (பல்கலைக்கழக மானிய வாரியம்) அல்லது சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான பேரவை) போன்ற பல்வேறு முகமை நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது, இவை இந்திய அரசாங்கத்தின் சுய ஆட்சி நிறுவனங்களாகும். 1918 ஆம் ஆண்டில் நிசாமால் நிறுவப்பட்ட உசுமானியா பல்கலைக்கழகம், இந்தியாவின் ஏழாவது பழைய பல்கலைக்கழகமாகும்.


== வளாகம் ==
== வளாகம் ==

06:46, 5 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

உசுமானியா பல்கலைக்கழகம்
Osmania Universityجامعہ عثمانیہ
வகைபொது
உருவாக்கம்1918
வேந்தர்எ.எசு.எல். நரசிம்மன், ஆந்திரப் பிரதேச ஆளுநர்
துணை வேந்தர்பேரா.எசு.சத்தியநாராயணா
அமைவிடம்
உசுமானியா பல்கலைக்கழகம், ஐதராபாத்து, தெலுங்கானா 500 007 India
Osmania University, Hyderabad AP -500 007 INDIA
, , ,
வளாகம்நகரப்புறம், 1600 ஏக்கர் (6 km²)
இணையதளம்www.osmania.ac.in
Osmania University is accredited with 5 stars level by NAAC

உசுமானியா பல்கலைக்கழகம் (Osmania University, جامعہ عثمانیہ), ஒரு மாநில பொதுப் பல்கைலைக்கழகம், இது இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்து நகரில் அமைந்திருக்கிறது. இது 1918-ல் மஹபூப் அலி கானின் தலைமை கட்டடக் கலைஞர் நவாப் சர்வார் ஜங்கால் கட்டப்பட்டது.[1] ஐதராபாத்தின் கடைசி நிசாம் மிர் உசுமான் அலி கான் அவர்களால் துவங்கப்பட்டு அவர் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.[2] உருதுவைப் பயிற்று மொழியாகக் கொண்ட முதல் இந்தியப் பல்கலைக்கழகமும் இதுவாகும்.[1] ஆற்றல்சால் பல்கலைகழகத் தகுதியைப் பெற்ற இப்பல்கலைகழகம் 2012 ல் மானுடவியல், அறிவியல் மற்றும் வணிகவியலில் நாட்டின் தலைசிறந்த பலகலைகழகங்களில் ஆறாம் இடத்தைப் பெற்றது.[3] இதன் முதன்மை வளாகம் இந்தியா டுடேவின் தரவரிசையில் மாநிலப் பல்கலைகழகங்களில் பத்தாம் இடம் பெற்றது.[4] 80 நாடுகளில் இருந்து 3,700 பன்னாட்டு மாணவர்கள் இங்கு பயில்கின்றனர்(2012 கணக்கின் படி)..[5]

தன்னுடைய பல்வேறு வளாகங்கள் மற்றும் துணைக் கல்லூரிகளில் 300,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் , இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றாக இப் பல்கலைக் கழகம் விளங்குகிறது. குறிப்பாக அது தன்னுடைய பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, சட்டம், கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மைத் துறைகளுக்காக அறியப்படுகிறது. உசுமானியா மருத்துவக் கல்லூரி முன்பு இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்தது.[6] அது இப்போது இந்தியாவின், ஆந்திர பிரதேசத்தின் என்டிஆர் உடல்நலப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளது.[7]

அதன் முன்னாள் மாணவர்கள் தங்களைத் தாங்களே தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் (குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் பிரிவைப் பார்க்கவும்)

வரலாறு

ஐதராபாத்து மாநில ஏழாவது நிசாமான நவாப் மிர் ஓஸ்மான் அலி கான் அவர்களால், இந்தியாவில் உயர் கல்விக்காக 1918 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், தென்னிந்தியாவின் மூன்றாவது பழையதும் முந்தைய அரசகுல ஐதராபாத் மாநிலத்தில் உருவான முதல் பல்கலைக்கழகமும் ஆகும்.[8]. கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளாக இது அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சியைப் பேணிக் காத்துவந்துள்ளது. அந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்தமாக தேசத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.

.

பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தராக இருப்பவர் பேரா.எசு.சத்தியநாராயணா

கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர் சேர்க்கை

உசுமானியா பல்கலைக்கழகம் ஒரு இலாபநோக்கமற்ற பல்கலைக்கழகம், இது அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை பொறியியல், முதுகலைகள் மற்றும் பேரறிஞர் படிப்பு திட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை கல்வித் தகுதியின் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது, அளிக்கப்படும் ஒவ்வொரு கல்வி திட்டத்துக்கும் நடத்தப்படும் தேசிய நுழைவுத் தேர்வு மூலம் இது மதிப்பிடப்படுகிறது. ஆராய்ச்சி செயல்நடவடிக்கைகள், யூஜிசி (பல்கலைக்கழக மானிய வாரியம்) அல்லது சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கான பேரவை) போன்ற பல்வேறு முகமை நிறுவனங்களால் நிதியளிக்கப்படுகிறது, இவை இந்திய அரசாங்கத்தின் சுய ஆட்சி நிறுவனங்களாகும். 1918 ஆம் ஆண்டில் நிசாமால் நிறுவப்பட்ட உசுமானியா பல்கலைக்கழகம், இந்தியாவின் ஏழாவது பழைய பல்கலைக்கழகமாகும்.

வளாகம்

உசுமானியா வளாகம் கிட்டத்தட்ட 1600 ஏக்கர்களைக் (6 கி.மீ.²) கொண்டுள்ளது. உசுமானியா பல்கலைக்கழகம் தான் நாட்டிலேயே மிகப் பெரிய உயர் கல்வி அமைப்பாக இருக்கிறது[மேற்கோள் தேவை]. இந்தப் பல்கலைக்கழகம் தேசத்தின் மூலைமுடுக்குகளிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கிறது. அதனுடைய வளாகத்தில், இணையற்ற துணைக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மையங்களில் தங்களுடைய மேற்படிப்புகளை மேற்கொண்டிருக்கும் கிட்டத்தட்ட 300,000 மாணவர்களின் மையமாக இருக்கிறது. அதன் ஆசிரியர் குழு மற்றும் ஊழியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5,000 ஆக இருக்கிறது.

மனிதவியல், கலை, அறிவியல், சமூக அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் வணிக மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கிழக்கத்திய மொழிகள் ஆகிய துறைகளில் உசுமானியா பாடத்திட்டங்களை வழங்குகிறது.

2001 ஆம் ஆண்டில், உசுமானியா பல்கலைக்கழகம் ஐந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெறும் பெருமதிப்பினைப் பெற்றது, இது இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இயங்கும் பல்கலைக்கழக மானிய வாரியத்தின் தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு மன்றத்தால் (NAAC) வழங்கப்பட்டது[மேற்கோள் தேவை].

வளாகத்திலுள்ள கல்லூரிகள்

அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி

அறிவியல் கல்லூரி

1918 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி அடிப்படை மற்றும் பயனுறு அறிவியல் இரண்டிலும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பாரம்பரியத்தைக் கொண்டிருக்கிறது. கல்லூரியே 1918 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட போதிலும், நிசாமியா வானிலை ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட வானியல் பணிகள் 1908 ஆம் ஆண்டுக்கு முந்தையதாக இருக்கிறது. 1906 ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரையில் இந்த வானிலை ஆய்வுக்கூடம் பெரும் சர்வதேச திட்டமான 'கார்டெ-டு-சியல்' இன் ஒரு அங்கமாக இருந்தது, இது நட்சத்திரங்களின் ஒருங்கிணைப்புகளின் துல்லியமான அளவீடுகளிலிருந்து ஒரு பரந்துவிரிந்த ஆஸ்ட்ரோகிராபிக் நட்சத்திர கேடலாக்கைத் தயாரித்தது.

இன்று ஒவ்வொரு துறைக்கும் ஒரு தனி கட்டடத்தை ஏற்படுத்தி அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி 13 கற்பிக்கும் துறையில் முதுகலை (எம்.எஸ்சி) மற்றும் தத்துவப் பேரறிஞர் (பிஎச்.டி) பட்டங்களை வழங்குகிறது.

அறிவியல் பல்கலைக்கழக கல்லூரியில் பல்வேறு ஆசிரியர் குழுக்களால் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகிறது, இது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி பேரவை (CSIR) மற்றும் அறிவியல் & தொழில்நுட்பத் துறை (DST) போன்ற பல்வேறு அரசு முகமை நிறுவனங்களிடமிருந்து மானியங்களைப் பெறுகிறது. வழக்கமான 1000 மாணவர் எண்ணிக்கை அல்லாமல், ஆய்வியல் நிறைஞர் மற்றும் தத்துவப் பேரறிஞர் பட்டப்படிப்புகளுக்காக 1500 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அறிஞர்களும் இருக்கிறார்கள். கல்லூரியில் கிட்டத்தட்ட 200 கற்பிக்கும் ஊழியர்களும் 388 தொழில்நுட்ப மற்றும் இதர ஊழியர்களும் இருக்கிறார்கள். மருத்துவர் அஹமத் ஷாநவாஸ் மிகச் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராகவும் மருத்துவக் கல்லூரியின் டீனாகவும் இருந்தார். அசலாக அவர் சியால்கோட்டைச் சேர்ந்தவர், அது இப்போது பாகிஸ்தான் பகுதி பஞ்சாபில் இருக்கிறது. அவர் தன்னுடைய எம்ஆர்சிபி மற்றும் எஃப்ஆர்சிஎஸ்யை இங்கிலாந்தில் பெற்றார், ஐதராபாத் நிசாமின் அரசக் குடும்ப வைத்தியராக இருப்பதற்காக 1920 ஆம் ஆண்டில் அவர் ஐதராபாத் வந்தார், பின்னாளில் அவர் கல்லூரியின் ஆசிரியராகவும் பின்னர் டீனாகவும் ஆனார். மாணவர்களிடத்தில் அவர் விரும்பத்தக்க ஆசிரியராகவும் மிகவும் மதிக்கப்படக்கூடியவராகவும் இருந்தார். அவர் இறந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட, அவருடைய மாணவராக இருந்து தற்போது உலகெங்கிலும் இருக்கும் பல மருத்துவர்கள் தங்கள் கேபின்களில் அவருடைய புகைப்படத்தை சட்டம் செய்து மாட்டியிருக்கிறார்கள். சில சிக்கலான நிலைமைகளின்போது சிலர் அவருடைய புகைப்படத்தின் கீழ் நின்று இந்தச் சிக்கலுக்கான சரியான தீர்வைக் கண்டறிவதாக நம்புகிறார்கள்.

சட்டக் கல்லூரி

சட்டப் பிரிவு, அப்போதைய டீனான நீதிபதி பி. ஜகன் மோகன் ரெட்டி இந்தக் கல்வி நிறுவனத்தை ஏற்படுத்துவதில் செயலூக்க ஆர்வம் கொண்டிருந்தார். சட்டப் பல்கலைக்கழகக் கல்லூரி 1960 ஆம் ஆண்டில் அப்போதைய இந்தியத் தலைமை நீதிபதியாக இருந்த திரு.பீ.பி.சின்ஹா அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. பேரா.ஜி.சி.வி.சுப்பா ராவ் தான் அதனுடைய முதல் கல்லூரி முதல்வராக இருந்தார். அதே ஆண்டில் எல்எல்.எம். பாடத்திட்டங்கள் சட்ட பல்கலைக்கழக கல்லூரிக்கு மாற்றல் செய்யப்பட்டது. எல்எல்.எம்மின் நான்கு பிரிவுகள், அதாவது சட்டவியல், அரசியல் சாசனச் சட்டம் மற்றும் சர்வதேச சட்டம், தனிநபர் சட்டம் மற்றும் வணிகம்சார்ந்த சட்டம் ஆகியவை அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்டன. பின்னர் எல்எல்.எம்மின் சில பிரிவுகள் மாலை சட்டக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. 1977 ஆம் ஆண்டில் அனைத்து எல்எல்.எம். பாடத்திட்டங்களும் மாலை சட்டக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது. மீண்டும் 1994 ஆம் ஆண்டில், எல்எல்.எம்மின் பாடத்திட்டடங்களின் மூன்று பிரிவுகள், அதாவது அரசியல் சாசனச் சட்டம், வணிகம்சார்ந்த சட்டம் மற்றும் உழைப்பாளர் சட்டம் ஆகியவை உசுமானியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பல்கலைக்கழக கல்லூரியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்சமயம் அனுமதியளிக்கப்பட்டுள்ள எல்எல்.பி. மாணவர் எண்ணிக்கை 160 இருக்கைகளாகும். சட்டப் பிரிவு பிஎச்டி திட்டத்தை அறிமுகப்படுதியது, அதன் முதல் தொகுப்பு பிஎச்டி மாணவர்கள் 1978 ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்டனர். இந்த பிஎச்டி திட்டமானது வழமையான மற்றும் பகுதி நேர அடிப்படையில் வழங்கப்படுகிறது.

அந்தக் கல்லூரி பல்வேறு துறைகளில் பல அறிவுமேதைகளை உருவாக்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பழைய மாணவர்களில் உச்ச நீதி மன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதி மன்றங்களின் நீதிபதிகள், முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள், பொதுத்துறை அலுவலர்கள், ஆளுநர்கள், சபாநாயகர்கள், அரசுத் தூதர்கள் மற்றும் முன்னணி வழக்கறிஞர்கள் ஆகியோர் அடங்குவர். அவர்களில் உள்ளடங்குபவர்கள் நீதிபதி பி.ஜகன்மோகன் ரெட்டி, நீதிபதி ஷா முகமத் குவாட்ரி, நீதிபதி பீ.பி.ஜீவன் ரெட்டி, நீதிபதி சர்தார் அலி கான், நீதிபதி வை.பாஸ்கர் ராவ், நீதிபதி பீ.சுபாஷன் ரெட்டி, நீதிபதி பீ.சுதர்ஷன் ரெட்டி, நீதிபதி ஜி.பிக்ஷாபதி, நீதிபதி எல்.நரசிம்ம ரெட்டி, ஆர்.வாசுதேவ பிள்ளை, பி.சி.ராவ், பீ.சி.ஜெயின், எஸ்.பீ.சவான், வீரேந்திர பாட்டீல், சிவ் ராஜ் பாட்டீல், சிவாஜி ராவ் பாட்டில் நிலாங்கிகார், வி.எஸ்.ரமா தேவி, ஸ்ரீபாதா ராவ், சி.வித்யாசாகர் ராவ் மற்றும் தரம் சிங். இந்தப் பட்டியல் ஒரு எடுத்தக்காட்டுக்கானது மட்டுமே. ஒட்டுமொத்தமாக நாட்டில் இருக்கும் சிறந்த பத்து சட்டக் கல்லூரிகளில் ஒன்றாக இது தொடர்ச்சியாக இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அதாவது இந்தியா டுடே பத்திரிக்கையில் 2000 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில்.

இந்தச் சட்டப் பல்கலைக்கழகக் கல்லூரி எல்எல்.பி, எல்எல்.எம் மற்றும் பிஎச்.டியை வழங்குகிறது.

வர்த்தகம் மற்றும் வணிக மேலாண்மைக் கல்லூரி

வர்த்தகத் துறை

1945 ஆம் ஆண்டில் பி.காம் பட்டப்படிப்பைத் தொடங்கியதும் இந்தத் துறை உசுமானியா பல்கலைக்கழகத்தின் ஒரு தனிப் பிரிவாக ஆனது. பல்வேறு பாடத்திட்டங்கள் மூலம் கல்வியை வழங்குதல், பல்கலைக்கழக மானிய வாரியம், மாநில அரசு, தொழிற்துறைக் கூடங்கள் முதலானவை நிதியளித்ததல் மூலம் செயல்திட்டங்களை மேற்கொள்ளுதல் மற்றும் சமகாலத்துடன் தொடர்புடைய விஷயங்களில் கடுமையான ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் முதலான வடிவங்களில் சமூகத்திற்கு வெவ்வேறு வழிமுறைகளில் சேவை புரிவதன் மூலம் இந்தத் துறை தன்னுடைய சுயவிவரத்தை மேம்படுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இந்தத் துறையின் சேவைகள் வழக்கமான கல்வி முறையால் ஆந்திர பிரதேசத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதில்லை, அவை தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி கற்றல் வடிவங்கள் மூலம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் வழங்கப்படுகிறது.

கல்வியாளர்கள், தொழில்துறை, சமூகம் முதலானவற்றின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இந்தத் துறை பல்வேறு பாடத்திட்டங்களை வழங்குகிறது மேலும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை நடத்தியும் இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சுற்றுச்சூழலின் சமகாலத்து சிக்கல்களுக்கான தீர்வுகளையும் வழங்குகிறது.

வணிக மேலாண்மைத் துறை

உசுமானியா பல்கலைக்கழகத்தில் பரந்துவிரிந்திருக்கும் மரங்கள் நிறைந்த வளாகத்தில் அமைந்திருக்கும் வணிக மேலாண்மைத் துறை, வணிக மேலாண்மையில் இரண்டாண்டு முதுகலைத் திட்டத்தை நடத்தி வருகிறது.

இன்றைய கூட்டாண்மை உலகின் 'மந்திர'மான 'மாற்ற'த்தை ஏற்றுக்கொள்வதும் மேலும் துறை தன்னுடைய செயல்பாட்டில் மற்றும் பாடத்திட்டத்தை முடிவுசெய்வதில் தனித்து இயங்க முடிவதன் காரணமாக, இன்றைய கூட்டாண்மை உலகின் எந்நேரமும் மாற்றம்கொள்ளும் தேவைகளுக்கு ஏற்ப பொருந்தி இருப்பதற்கு அது தன்னையே புதுப்பித்தல்களுக்கு உட்படுத்துகிறது.

சிறந்த ஆசிரியர் குழு மற்றும் வசதிவாய்ப்புகளுடன் இந்தத் துறை ஆண்டுதோறும் 80 மாணவர்களுக்குப் பயற்சியளிக்கிறது. ஆசிரியர் குழு, நடைமுறை அறிவாற்றலை வெளிப்படுத்த இயலச்செய்யும் மிகுந்த அனுபவங்களைக் கொண்டிருக்கும் அறிவாற்றல்களால் தூண்டப்பட்ட கல்வியாளர்களைக் கொண்டிருக்கிறது. அவர்கள் வர்த்தகங்களில் நடைமுறை செயல்பாடுகள் மற்றும் விளங்கா புதிர்களுடன் தொடர்பில் இருந்து விடாமுயற்சியாக மாணவர்களை வெற்றியாளர்களாகவும் முன்னேற்றமடைந்த வருங்காலத் தலைவர்களாகவும் மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

உசுமானியா பல்கலைக்கழக வணிக மேலாண்மைத் துறை 1964 ஆம் ஆண்டு முதலே எம்பிஏ பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்தத் திட்டமானது இந்தியாவில் இருக்கும் சிறந்த எம்பிஏ திட்டங்களில் ஒன்றாகத் தொடர்ந்து வரிசைப்படுத்தப்பட்டு வருகிறது.[மேற்கோள் தேவை]. விண்ணப்பிக்கும் 2,00,000 மாணவர்களில் போட்டித் தேர்வு மூலம் வெறும் 80 மாணவர்கள் மட்டுமே இந்த எம்பிஏ திட்டத்தில் சேரமுடிகிறது. எம்பிஏ தவிர அதுமேலாண்மையில் பிஎச்.டியையும் வழங்குகிறது. மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு எம்எம்எஸ்சை வழங்குவதற்கு இராணுவ பாதுகாப்பு மேலாண்மைக் கல்லூரியுடனும், எம்எச்எம்மை வழங்குவதற்கு டெக்கன் ஸ்கூல் ஆப் ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட் மற்றும் அப்போலோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹாஸ்பிடல் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களுடனும் ஒரு கூட்டிணைப்பைக் கொண்டிருக்கிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் இன்ஸ்டிடியூட் ஆஃப் போலிஸ் அட்மினிஸ்ட்ரேஷனுடன் இணைந்து எம்பிஎம் பாடத்திட்டத்தை வழங்குகிறது.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரி தான் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் மிகவும் பழமையானதும் மிகப் பெரியதுமெனப் பெயர் பெற்றுள்ளது. உசுமானியா பல்கலைக்கழகம் ஏற்பட்டு பதினோரு ஆண்டுகள் கழித்து 1929 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, அப்போதைய ஆங்கிலேய இந்தியா முழுமைக்கும் ஏற்படுத்தப்பட்ட ஆறாவது பொறியியல் கல்லூரியாக இருந்தது. 1947 ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரி தன்னுடைய தற்போதைய நிரந்தர கட்டிடத்துக்கு வந்தது. இன்று உசுமானியா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளிலியே இதுதான் மிகப் பெரியது. கல்லூரியின் 50வது ஆண்டு நிறைவுவிழா 1979 ஆம் ஆண்டிலும், 60வது ஆண்டுவிழா 1989 ஆம் ஆண்டிலும், 75வது ஆண்டுவிழா 2004 ஆம் ஆண்டிலும் கொண்டாடப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் கல்லூரி தன்னாட்சியாக மாற்றப்பட்டது.

அந்தக் கல்லூரி நான்கு ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை வழங்கி, அது உயிர்மருத்தவப் பொறியியல், சிவில் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்சார மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் மற்றும் இயக்கமுறை பொறியியல் ஆகியவற்றில் இளங்கலை பொறியியல் (பி.ஈ.) பட்டத்தை வழங்குகிறது. கணினி பயன்பாடுகளில் முதுகலை, ஆராய்ச்சி மூலம் அறிவியல் முதுகலை மற்றும் பொறியியலின் பல்வேறு பிரிவுகளில் பிஎச்.டியைப் பெறும் பாடத்திட்டங்களையும் இந்தக் கல்லூரி வழங்குகிறது. இளங்கலை மற்றும் முதுகலை நிலை இரண்டிலும் பகுதி-நேர பாடத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இன்றைய தேதியில் ஆண்டுக்கு 320 இளங்கலைப் பட்டதாரி மாணவர்கள் (முழு-நேரம்) மற்றும் 140 (பகுதி-நேரம்) மாணவர்களும் 290 முதகலை பட்டதாரி மாணவர்களும் (முழு-நேரம் மற்றும் பகுதி-நேரம்) சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இங்கு 109 கற்பிக்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள் அவர்களில் 24 பேராசிரியர்களும் அடங்குவர்.

தொழில்நுட்பக் கல்லூரி

தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டிலேயே இரசாயன பொறியியல் மற்றும் இரசாயன தொழில்நுட்பக் கல்வியை வழங்கும் கல்லூரிகளில் மிகப் பழமையானதும் முதன்மையானவைகளில் ஒன்றுமாகும். உசுமானியா பல்கலைக்கழக தொழில்நுட்பப் பிரிவின் கீழ் இது ஒரு இன்றியமையாத கல்லூரியாகும். உசுமானியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் பயனுறு வேதியியலின் முதுகலைப் பட்டதாரி பிரிவாக இந்தத் தொழில்நுட்பக் கல்லூரி 1943 ஆம் ஆண்டில் ஆரவாரமற்ற ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தது. பின்னர் 1945 ஆம் ஆண்டில் அது பயனுறு வேதியியல் துறையாக மேம்படுத்தப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் வேதிப் பொறியியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு அந்தத் துறையே வேதிய தொழில்நுட்பத் துறையாக மறுபெயரிடப்பட்டது. 1954 ஆம் ஆண்டில் நான்கு ஆண்டு பட்டப்படிப்பு பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை வேதிய தொழில்நுட்பம் மற்றும் வேதிப் பொறியியல் இளங்கலை பட்டங்களுக்கு இட்டுச் சென்றது. 1969 ஆம் ஆண்டு செப்டம்பரில், பல்கலைக்கழகம் வேதிய தொழில்நுட்பத் துறையை தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரியாக மேம்படுத்தி வேதிப் பொறியியல்/வேதிய தொழில்நுட்பத்தின் கல்விக்கான திடமான மையக்கருவாக உருவெடுத்தது, மேலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்குத் தொழில்நுட்பத்தின் செயற்றிறனை பரவச்செய்வதற்கான ஒரு சந்திப்பு முனையாக சேவை புரியவும் தொடங்கியது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி நிலையில் வேதிப் பொறியியல் மற்றும் வேதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளிப்பதற்கும் கற்பிப்பதற்காகவும் இந்தக் கல்லூரி பிரபலமாக அறியப்பட்டுள்ளது. சில ஆண்டுகளிலேயே கல்லூரி மிக விரைவாக விரிவடைந்து வளர்ச்சிபெற்றுள்ளது மேலும் இந்தக் கல்லூரியின் பழைய மாணவர்கள் உலகெங்கிலும் தங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் மாறிவரும் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உணவு தயாரிக்கும் முறை, பதனமிடும் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பத்தில் பிடெக் பட்டப்படிப்பு பாடத்திட்டங்களை 1994-95 ஆம் ஆண்டுகளின்போது இந்தக் கல்லூரி தொடங்கியது. இந்தப் பாடத்திட்டங்களின் முக்கியத்துவம் தானே விளங்கக்கூடியது, ஏனெனில் உணவுதானியங்கள், பழம் மற்றும் காய்கள், பஞ்சு, பட்டு மற்றும் இதர நூலிழைகளின் வள ஆதாரங்கள் மிகுதியாக இருக்கின்றன. மேலும், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள வேறு எந்த பல்கலைக்கழகமோ கல்லூரியோ, கிடைக்கப்பெறும் வள ஆதாரங்களைப் பயன்படுத்துவதற்கான இந்தத் தொழில்நுட்பத்தில் முழு வளர்ச்சியுற்ற நான்கு ஆண்டு பிடெக் பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குவதில்லை.

உடற்பயிற்சிக் கல்லூரி

உசுமானியா பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சிக் கல்விப் பல்கலைக்கழக கல்லூரி 1993 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அது பிஜி உடற்பயிற்சிக் கல்விக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது. அந்தக் கல்லூரி உடற்பயிற்சிக் கல்வியில் நெறிமுறைகளைக் கற்பித்து "உடற்பயிற்சிக் கல்வியில் முதுகலைப் பட்டம்" (எம்.பி.எட்.,) பெறுவதற்கு இட்டுச் செல்லும் நோக்கில் தொடங்கப்பட்டது.

அந்தக் கல்லூரி எம்.பி.எட்., வேனிற் கால மற்றும் எம்.பி.எட் வழக்கமான பாடத்திட்டம் ஆகியவற்றை வழங்கிறது. 2001 ஆம் ஆண்டின் போது அப்போதைய துணை வேந்தராக இருந்த, பேரா. டீ. சி. ரெட்டி, வளாகத்திலுள்ள ஏஎஸ்ஆர்சி அருகில் அமைந்திருந்த நிசாமியா வானிலை நோக்கு கட்டடத்தை உடற்பயிற்சிக் கல்வி பல்கலைக்கழக கல்லூரிக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் அதை ஒதுக்கினார். கல்லூரி தற்போதைய வசிப்பிட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படத்தொடங்கியது.

இதனால் 2002 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு எம்.பி.எட் பட்டப்படிப்பு நிறுத்தப்பட்டது. பெங்களூர் என்சிடிஈ ஆல் அங்கீகாரம் பெற்றவுடன் 2004-2005 ஆம் கல்வி ஆண்டு முதல் எம்.பி.எட் இரண்டாண்டு கல்வித்திட்டம் தொடங்கப்பட்டது, இதில் செமஸ்டர் அமைப்புடன் ஆண்டுக்கு 32 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

உசுமானியா பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

  • மிர்சா அகமத் பேய்க் காஸி, முதன்மைப் பொறியியலாளர், சிந்த் பாகிஸ்தான்
  • சையத் அகமத் குவாட்ரி, உலக உணவு திட்ட அதிகாரி, ஐக்கிய நாடுகள் அமைப்பு, மற்றும் யமென், எகிப்து, ஜோர்டான் & ஈராக்கிற்கான ஐக்கிய நாடுகள் ஆலோசகர்.
  • பேரா.பி.ராம ராஜூ, தெலுங்கு மொழித் துறை, தேசிய ஆராய்ச்சி பேராசிரியர்
  • பி.வி. நரசிம்ம ராவ், கல்வியாளர், அரசியல் மேதை மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர்.
  • யாக வேணுகோபால் ரெட்டி, பிஎச்டி, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
  • பேரா.கே.வெங்கட இராமைய்யா, நிறுவன துணை வேந்தர், காக்டியா பல்கலைக்கழகம், உறுப்பினர், யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்
  • ஜி. ராம் ரெட்டி, இந்தியாவில் திறந்தவெளி கல்வியின் தந்தை
  • சிவராஜ் பாட்டீல், முன்னாள் - மத்திய உள்துறை அமைச்சர் (2004-2008) மற்றும் இந்தியப் பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர்
  • பேரா. முகமத் அப்துர் ரஹமான் கான், கல்வியாளர், அறிவியலறிஞர், உசுமானியா பல்கலைக்கழக கல்லூரி மற்றும் நிஸாம் கல்லூரியின் முதல்வர்
  • பாரிஸ்டெர் அசாதுடின் ஓவாய்சி, அரசியல்வாதி மற்றும் தற்போதைய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்.
  • ஷந்தானு நாராயண், பிஈ, அடோப் சிஸ்டம்ஸ் தலைவர்
  • எம் என் ராவ், பிஈ, முதன்மைச் செயல் அதிகாரி, செர்விஸ்ஸால் (டாட்டா & சன்ஸின் உதவிநிறுவனம்)
  • சஞ்சீவ் சித்து, பி.டெக்., ஐ2 டெக்னாலோஜிஸ் தலைவர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி
  • டா. ஜாவித் அலாம், எம்.ஏ, பிஎச்டி, தலைமை அதிகாரி, ICSSR
  • சதீஷ் ரெட்டி, பி.டெக்., நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை இயக்க அதிகாரி, டாக்டர். ரெட்டிஸ் லேபோரேடரிஸ்
  • அஸ்லாம் பார்ஷோரி, எம்.ஏ., வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆளுமையாளர்
  • நாகேஷ் குகுனூர், பி.டெக்., திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர்
  • ஜெய்பால் ரெட்டி, எம்ஏ, பாராளுமன்ற உறுப்பினர்
  • ஹர்ஷா போக்லே, பி.டெக்., நன்கு அறியப்பட்ட மட்டைப்பந்தாட்ட வர்ணனையாளர்
  • மது யாஷ்கி, எல்எல்எம், பாராளுமன்ற உறுப்பினர், நியூயார்க் வழக்கறிஞர்
  • ஹரூன் சித்திக்குய், இந்திய-கனேடிய பத்திரிக்கையாளர்
  • கான்சா இலைய்யா, பிஎச்டி - சுய-பாணி தலித் அறிஞர்.
  • மாஹெ ஜபீன் - சமூக செயல்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் ராஜீவ் காந்தி மாணவசேவா விருது வென்றவர்.
  • முகமத் ஹமிதுல்லா - இசுலாமிய அறிவியல்கள் பற்றிய ஒரு பெரும் கல்வியாளர்.
  • ராஜட் ரெட்டி - பாராளுமன்ற உறுப்பினர்.
  • முகமத் அஸாருதின் - முன்னாள் இந்திய மட்டைப்பந்தாட்ட அணித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்.
  • கரன் பிலிமோரியா, பாரோன் பிலிமோரியா - கோப்ரா பீர் நிறுவனர், ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் உறுப்பினர், தேம்ஸ் வேல்லி பல்கலைக்கழக வேந்தர்
  • முகமத் ரஸியுத்தின் சித்திக்கியூ, கணிதவியலாளர், வான்அறிவியலாளர், கோட்பாட்டியலாளர் மற்றும் நோபல் பரிசு நியமனதாரர்.
  • பேரா. டி.என்.ரெட்டி, துணை வேந்தர், JNTU ஐதராபாத்
  • அஃப்சல் முகமத் முன்னாள் துணை வேந்தர் BRAOU, ஐதராபாத்
  • எஸ்.ஏ. இப்ராஹிம், ரேடியன் குரூப் இன்க்., தலைமைச் செயல் அதிகாரி
  • அலி முகமத் குஸ்ரோ, பொருளாதார நிபுணர், இந்திய ரிசர்வ் வங்கி இயக்குனர் மற்றும் ஜெர்மன் குடியரசுக்கான முன்னாள் இந்திய அரசுத் தூதர்.
  • மக்தூம் மொஹிதின், உருது கவிஞர் மற்றும் கம்யூனிச ஈடுபாட்டாளர்
  • வெங்கடேஷ் குல்கர்னி, அமெரிக்க நாவலாசிரியர் மற்றும் கல்வியாளர்
  • டாக்டர். வாசுதேவ் ரங்கதாஸ், பி.ஈ. நெட் ஆரேஞ் இன்க்., தலைமைச் செயலதிகாரி
  • சந்தோஷ் குமார், பிரபல பாகிஸ்தான் திரைப்பட நடிகர்.
  • டாக்டர் எம். அன்வர் இக்பால், நோய்குறியாய்வு மற்றும் பரிசோதனைக்கூட மருந்துகளின் இணை பேராசிரியர்: ரோசெஸ்டர் பல்கலைக்கழகம்
  • இஃப்பாட் மோஹானி, பிரபல உருது நாவலாசிரியர் மற்றும் சிறு கதை எழுத்தாளர்
  • கிருஷ்ணா பட்டம், டாக்யூடெல் தலைவர்
  • ஸ்ரீதர் போகெல்லி, ஆப்ஸ் அசோசியேட்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர்
  • கிரன் டீகலா, லைபிஸ்நெட்.காம் நிறுவனர் மற்றும் தலைமைச் செயலதிகாரி[9][10]
  • சையத் கோஸ் காமோஷி, அனைத்து இந்திய மஜிலிஸ் தமீர் ஈ மில்லத் மற்றும் முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைவர்.
  • சையத் அலி, அமெரிக்க செனேட்டின் அமி க்ளோபுசார் செனடார் அலுவலகத்தின் இன்றியமையாத வழக்கறிஞர்
  • ஜார்ஜ் ரெட்டி, மாணவர் தலைவர்

உசுமானியா பல்கலைக்கழக வரம்புக்குள் இருக்கும் கல்லூரிகளின் பட்டியல்

http://www.osmania.ac.in/Colleges2006.htm

உசுமானியா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளின் பட்டியல்

http://www.osmania.ac.in/ALLCOLLEGES2008.htm

குறிப்புதவிகள்

  1. 1.0 1.1 Roger L. Geiger (2009). Curriculum, accreditation, and coming of age of higher education. Transaction Publishers. பக். 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4128-1031-9. http://books.google.com/books?id=Mc4gszrwUBQC&pg=PA154&dq=formation+osmania+university&hl=en&ei=aFeaTqDYBYir-gavlrS9BQ&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEEQ6AEwBA#v=onepage&q=formation%20osmania%20university&f=false. பார்த்த நாள்: 16 October 2011. 
  2. "H.E.H. Nizam Mir Osman Ali Khan". http://www.osmania.ac.in/InfoAct/Item01.pdf. பார்த்த நாள்: 2012-08-21. 
  3. "Osmania University ranked 6th among top ten universities". http://www.osmania.ac.in/Pressnote-OU6thRanking.pdf. பார்த்த நாள்: 2012-08-21. 
  4. "India's top 50 universities - | Photos | India Today |". Indiatoday.intoday.in. http://indiatoday.intoday.in/gallery/indias+top+50+universities/1/3229.html#photo50. பார்த்த நாள்: 2012-08-21. 
  5. "Hyderabad: Osmania University tells foreign students to keep off drugs". ibnlive.in.com. http://ibnlive.in.com/news/osmania-tells-foreign-students-to-keep-off-drugs/286849-62-131.html. பார்த்த நாள்: 2012-09-01. 
  6. "About OMC". Osmania Medical College. பார்க்கப்பட்ட நாள் 3 October 2013.
  7. "Affiliated University". Osmania Medical College. பார்க்கப்பட்ட நாள் 3 October 2013.
  8. வரலாறு oucde.ac.in
  9. http://prmac.com/release-id-2875.htm
  10. http://www.livebiznet.com

வெளிப்புற இணைப்புகள்