அமுது (புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''அமுது''' என அழைக்கப்படும் '''அமுதசாகரன் அடைக்கலமுத்து''' (செப்டம்பர் 15, 1918 - அக்டோபர் 23, 2010) ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இளவாலை அமுது என்னும் புனைபெயரில் பல கவிதை நூல்களை எழுதியிருக்கின்றார். செவாலியர் விருது, [[திருத்தந்தை]]யிடம் இருந்து பாவேந்தர் என்னும் பட்டம் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது. கனடா தமிழர் தகவல் அமைப்பு சிறப்பு விருதும், தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவித்தது. 1984ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து [[லண்டன்|லண்டனில்]] வசித்து வந்தார்.<ref name="ns">{{cite web | url=http://thesamnet.co.uk/?p=22124 | title=அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று: என் செல்வராஜா (நூலகவியலாளர்) | publisher=தேசம்நெற் | date=6 செப்டம்பர் 2010 | accessdate=1 திசம்பர் 2014 | author=[[ந. செல்வராஜா|செல்வராஜா, ந.]]}}</ref>
'''அமுது''' என அழைக்கப்படும் '''அமுதசாகரன் அடைக்கலமுத்து''' (செப்டம்பர் 15, 1918 - அக்டோபர் 23, 2010) ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இளவாலை அமுது என்னும் புனைபெயரில் பல கவிதை நூல்களை எழுதியிருக்கின்றார். செவாலியே விருது, [[திருத்தந்தை]]யிடம் இருந்து பாவேந்தர் என்னும் பட்டம் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது. கனடா தமிழர் தகவல் அமைப்பு சிறப்பு விருதும், தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவித்தது. 1984ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து [[லண்டன்|லண்டனில்]] வசித்து வந்தார்.<ref name="ns">{{cite web | url=http://thesamnet.co.uk/?p=22124 | title=அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று: என் செல்வராஜா (நூலகவியலாளர்) | publisher=தேசம்நெற் | date=6 செப்டம்பர் 2010 | accessdate=1 திசம்பர் 2014 | author=[[ந. செல்வராஜா|செல்வராஜா, ந.]]}}</ref>


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 29: வரிசை 29:
*மதுரகவி (யாழ் பல்கலைக் கழக வேந்தர்)
*மதுரகவி (யாழ் பல்கலைக் கழக வேந்தர்)
*[[கலாநிதி (பட்டம்)|கலாநிதி]], ([[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]])
*[[கலாநிதி (பட்டம்)|கலாநிதி]], ([[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]])
*செவாலியே விருது
*செவாலியர்


== உசாத்துணைகள் ==
== உசாத்துணைகள் ==

13:16, 1 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

அமுது என அழைக்கப்படும் அமுதசாகரன் அடைக்கலமுத்து (செப்டம்பர் 15, 1918 - அக்டோபர் 23, 2010) ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இளவாலை அமுது என்னும் புனைபெயரில் பல கவிதை நூல்களை எழுதியிருக்கின்றார். செவாலியே விருது, திருத்தந்தையிடம் இருந்து பாவேந்தர் என்னும் பட்டம் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது. கனடா தமிழர் தகவல் அமைப்பு சிறப்பு விருதும், தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவித்தது. 1984ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வந்தார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து (அமுது), தம்பிமுத்து-சேதுப்பிள்ளை ஆகியோரின் புதல்வர் ஆவார். யாழ்ப்பாணம் புனித சார்ல்சு வித்தியாலயம், யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுப் பின்னர் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் படித்து பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.[2] இளவாலை என்ற ஊரில் திரேசம்மா என்பவரைத் திருமணம் முடித்தார். தகைமை பெற்ற ஆசிரியராக ஏறத்தாழ 45 ஆண்டுகள் நாட்டின் பல பாடசாலைகளில் பணியாற்றியிருக்கின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டமும் பெற்றுள்ளார்.

இவரது முதலாவது கவிதை 1938 இல் சத்தியவேத பாதுகாவலன் என்னும் பத்திரிகையில் வெளிவந்தது.[2] தொடர்ந்து இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி, புதினம், அஞ்சல், தொடுவானம், ஈழமுரசு போன்ற பல்வேறு இதழ்களில் இலங்கையின் பெரும்பாலான இதழ்களில் வெளியாகியுள்ளன.[2]

2006ஆம் ஆண்டு தமிழ்த்துறையில் இறுதித்தேர்விற்காக டயானா மரியதாசன் என்பவர் இளவாலை அமுது பற்றிய ஆறு இயல்களைக்கொண்ட ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.[1]

எழுதிய நூல்கள்

  • நெஞ்சே நினை
  • மாதா அஞ்சலி
  • இவ்வழி சென்ற இனிய மனிதன்
  • காக்கும் கரங்கள்
  • அன்பின் கங்கை அன்னை திரேசா
  • மடுமாதா காவியம்
  • புனித அன்னம்மாள் ஆலய வரலாறு
  • அமுதுவின் கவிதைகள், (இரண்டு பதிப்புகள்)
  • இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்
  • இளவாலை தமிழ்க் கங்கை அமுது ஜயாவின் அற்புதப் படைப்புக்கள் (தொகுப்பு)

பட்டங்கள்

சொல்லின் செல்வன் (ஞானப்பிரகாசர் தமிழ் மன்றம்)

  • புலவர்மணி (என்றி அரசர் கல்லூரி பிரித்தானியா)
  • முப்பணி வேந்தர் (பேராசிரியர் கலாநிதி இமானுவல் அடிகளார்)
  • பாவேந்தன் (புனித பாப்பரசர்)
  • தமிழ்க்கங்கை (செருமன் தமிழ்ப்பணி மன்றம்)
  • கவியரசர் (பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ்)
  • மதுரகவி (யாழ் பல்கலைக் கழக வேந்தர்)
  • கலாநிதி, (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
  • செவாலியே விருது

உசாத்துணைகள்

  1. 1.0 1.1 செல்வராஜா, ந. (6 செப்டம்பர் 2010). "அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று: என் செல்வராஜா (நூலகவியலாளர்)". தேசம்நெற். பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 2.2 புன்னியாமீன், பீ. எம். (27 பெப்ரவரி 2010). "மறைந்தும் மறையாத அமுதுப்புலவர் அடைக்கலமுத்து அமுதசாகரன் Read more at: http://tamil.oneindia.com/cj/puniyameen/2010/0227-eelam-tamil-writer-amuthu-pulavar-passes.html". ஒன்இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2014. {{cite web}}: Check date values in: |date= (help); External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுது_(புலவர்)&oldid=1760216" இலிருந்து மீள்விக்கப்பட்டது