கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
| நாடு = [[இந்தியா]] |
| நாடு = [[இந்தியா]] |
||
<!-- கோயில் தகவல்கள் --> |
<!-- கோயில் தகவல்கள் --> |
||
| மூலவர் = |
| மூலவர் = கோடீஸ்வரர் |
||
| உற்சவர் = |
| உற்சவர் = |
||
| தாயார் = |
| தாயார் = பந்தாடுநாயகி |
||
| உற்சவர்_தாயார் = |
| உற்சவர்_தாயார் = |
||
| விருட்சம் = |
| விருட்சம் = |
||
வரிசை 34: | வரிசை 34: | ||
| திருவிழாக்கள் = |
| திருவிழாக்கள் = |
||
<!-- பாடல் --> |
<!-- பாடல் --> |
||
| பாடல்_வகை = |
| பாடல்_வகை = [[தேவாரம்]] |
||
| பாடியவர்கள் = |
| பாடியவர்கள் = [[திருநாவுக்கரசர்]] |
||
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் --> |
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் --> |
||
| கட்டடக்கலை = |
| கட்டடக்கலை = |
16:30, 14 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்
தேவாரம் பாடல் பெற்ற கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
ஊர்: | கொட்டையூர் |
மாவட்டம்: | கும்பகோணம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோடீஸ்வரர் |
தாயார்: | பந்தாடுநாயகி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர் |
தல வரலாறு
சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில் திருவருள் பாலித்திருக்கும் சிவன் தலங்களில் கொட்டையூர் அருள்மிகு கோடீஸ்வரசுவாமி கோயில் 44ஆவது தலமாகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவில் கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையே கொட்டையூரில் உள்ளது. மார்க்கண்டேயர் பூசித்த தலம். காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஆத்ரேயமகரிஷி அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது அவருடைய திருவுருவம் இக்கோயிலில் உள்ளது. ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. மற்றொரு சமயம் சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. [1]
இறைவன், இறைவி
இறைவன் கோடீஸ்வரர். இத்தல இறைவன் திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை தன்னகத்தே கொண்டு சுயம்புமூர்த்தியாகவும், தன் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்பும் நிலையில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாகும்.[2]
இறைவி பந்தாடுநாயகி. பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) எனப் பெயர் பெற்றார்.
இங்குள்ள விநாயகர் கோடி விநாயகர்என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
பாடியோர்
சைவ சமயக்குரவர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் போற்றிப்பாடியுள்ளனர்.
பேறு பெற்றோர்
ஏரண்ட முனிவர், மார்க்கண்டேயர், பத்திரயோகி முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம். [3]