ரூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 37°52′14.33″N 32°30′16.74″E / 37.8706472°N 32.5046500°E / 37.8706472; 32.5046500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Muslim scholar
{{Infobox Muslim scholar
|notability =
|notability = {{transl|fa|Mawlānā Jalāl ad-Dīn Muḥammad Balkhī}}<br />{{lang|fa|مولانا جلال‌الدین محمد بلخی}}
|era = Medieval
|era = Medieval
|name = ஜலாலுத்தீன் முகம்மது ரூமி<br>Jalal ad-Dīn Muhammad Rumi
|name = மௌலானா ஜலாலுத்தீன் முகம்மது ரூமி<br>Jalal ad-Dīn Muhammad Rumi
|image = Molana.jpg
|image = Molana.jpg
|title = மௌலானா
|title = மௌலானா

22:36, 27 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

மௌலானா ஜலாலுத்தீன் முகம்மது ரூமி
Jalal ad-Dīn Muhammad Rumi
படிமம்:Molana.jpg
பட்டம்மௌலானா
பிறப்பு1207
வாக்சு (இன்றைய தஜிகிஸ்தான்)[1] அல்லது பல்கு (இன்றைய ஆப்கானித்தான்)
இறப்புடிசம்பர் 17 1273 (அகவை 65–66)
கோன்யா, ரூம் சுல்தானகம் (இன்றைய துருக்கி)
சமாதி37°52′14.33″N 32°30′16.74″E / 37.8706472°N 32.5046500°E / 37.8706472; 32.5046500
இனம்பாரசீகர்
காலம்Medieval
சமய நம்பிக்கைஅனாஃபி, சூபித்துவம்
முதன்மை ஆர்வம்சூஃபி பாடல்கள்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கரு
பாரசீக இலக்கியம்
செல்வாக்கு செலுத்தியோர்
  • பகாவுதீன் சக்காரியா, அத்தார், சனாய், கரக்கானி, பயசீத் பிஸ்தாமி
செல்வாக்குக்கு உட்பட்டோர்

பாரசீகத்தின் மாபெரும் மெய்ஞானக் கவிஞரும், சூபி ஞானியுமான மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் (கி,பி. 1207 செப்டம்பர் 30) ஹிஜ்ரி ஆண்டு 604 இல் பாரசீகத்தின் கொரசான் மாகாணத்திலுள்ள 'பல்கு' நகரத்தில் பிறந்தார்கள். அவர்களுடைய இயற்பெயர் முஹம்மது என்பதாகும். அவரின் தந்தையார் பஹாவுத்தீன் முஹம்மது வலத் தமது ஊரில் செல்வாக்கு மிக்க ஞானியாகத் திகழ்ந்தார்கள். மௌலானா ரூமி அவர்கள் அரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பரம்பரை இஸ்லாமிய அரசின் முதலாவது கலீபாவான ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களிடமிருந்து தொடங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மௌலானா அவர்களுக்கு 12 வயதாக இருந்தபோது, மங்கோலிய கொள்ளைக்காரர்கள் அடிக்கடி கொரஸான் மாகாணத்தினுள் நுழைந்து நாசம் விளைவித்து வந்தனர். இதனால் பயந்த பல்கு நகரத்தின் குடிமக்கள் துருக்கியிலுள்ள 'ரூம்' என்ற நகரத்தில் குடியேறினார்கள். தமது தந்தையிடமே கல்வி கற்றுத் தெளிந்த அவர்கள், தந்தையாரின் மறைவுக்குப் பின்னர் பெரியார் ஸையிது புர்ஹானுத்தீன் முஹக்கீக் அவர்களிடம் பல்வேறு கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அப்பெரியாரிடமிருந்தே ஆத்மஞானத் தீட்சையும் கிடைக்கப் பெற்றார்கள். பெரியார் புர்ஹானுத்தீன் அவர்கள் இறையடி சேர்ந்ததும், 33 ஆம் வயதில் மௌலானா அவர்கள் தமது சீடர்களுக்குத் தீட்சை வழங்கிவந்தார்கள்.

இவ்விதமாக நான்கு ஆண்டுகள் உருண்டோடின. இச்சந்தர்ப்பத்திலேதான் மௌலானா அவர்களின் வாழ்க்கையை முழுமையாக சூபி வாழ்க்கைக்கு மாற்றிவிட்ட, மர்மங்கள் நிறைந்த ஷம்ஸுத் தப்ரேஸ் என்ற மாமனிதரைச் சந்தித்தார்கள். அந்த மாமனிதரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த மௌலானா அவர்கள், இரண்டு ஆண்டுகள் தங்களுடைய வீட்டின் ஒரு அறையில் ஷம்ஸுத் தப்ரேஸோடு தனித்திருந்து ஆத்மஞானப் படித்தரங்களை எய்தப்பெற்றார்கள். இந்த இரண்டு ஆண்டுக்காலத்தில் தம்முடைய குருநாதர் நம்மிடமிருந்து விலகிவிட்டார், இதற்குக் காரணமாக அமைந்தவர் ஷம்ஸுத் தப்ரேஸ்தான் என்று எண்ணி சீடர்கள் அவரை மிக இழிவாகப் பேசத் தொடங்கினர். இது தெரிந்த ஷம்ஸுத் தப்ரேஸ் யாரிடமும் சொல்லாமல் திடீரென அங்கிருந்து மறைந்துவிட்டார்.

மேற்கோள்கள்

  1. William Harmless, Mystics, (Oxford University Press, 2008), 167.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூமி&oldid=1729362" இலிருந்து மீள்விக்கப்பட்டது