கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4: வரிசை 4:


==இறைவன், இறைவி==
==இறைவன், இறைவி==
இறைவன் கோடீஸ்வரர். இத்தல இறைவன் திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை தன்னகத்தே கொண்டு சுயம்புமூர்த்தியாகவும், தன் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்பும் நிலையில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாகும்.
இறைவன் கோடீஸ்வரர், இறைவி பந்தாடுநாயகி. இங்குள்ள விநாயகர் கோடி விநாயகர்என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இறைவி பந்தாடுநாயகி. பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) எனப் பெயர் பெற்றார்.

இங்குள்ள விநாயகர் கோடி விநாயகர்என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

==பாடியோர்==
சைவ சமயக்குரவர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் போற்றிப்பாடியுள்ளனர்.


==பேறு பெற்றோர்==
==பேறு பெற்றோர்==

06:22, 26 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

தல வரலாறு

சோழவள நாட்டில் காவிரியின் வடகரையில் திருவருள் பாலித்திருக்கும் சிவன் தலங்களில் கொட்டையூர் அருள்மிகு கோடீஸ்வரசுவாமி கோயில் 44ஆவது தலமாகும். இக்கோயில் கும்பகோணத்திற்கு மேற்கே 4 கிமீ தொலைவில் கும்பகோணத்திற்கும் சுவாமிமலைக்கும் இடையே கொட்டையூரில் உள்ளது. மார்க்கண்டேயர் பூசித்த தலம். காவிரி வலஞ்சுழித்து, பிலத்துவாரத்தில் சென்றபோது, ஆத்ரேயமகரிஷி அத்துவாரத்தில் இறங்கி காவிரியை மேலே கொண்டுவந்த சிறப்புடையது. திருவலஞ்சுழியில் காவிரியில் இறங்கிய அவர் இங்கு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது அவருடைய திருவுருவம் இக்கோயிலில் உள்ளது. ஒரு சமயம் இந்த ஊர் ஆமணக்கங்காடாக இருந்தது. இறைவன் ஆமணக்கன் கொட்டைச் செடியின்கீழ் இருந்ததால் இவ்வூர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. மற்றொரு சமயம் சோழ மன்னன் ஒருவனுக்கு கோடி லிங்கமாக தரிசனம் கொடுத்ததால் இக்கோயிலுக்கு கோடிச்சுரம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. [1] இத்தலம் நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலமாகும்.

இறைவன், இறைவி

இறைவன் கோடீஸ்வரர். இத்தல இறைவன் திருமேனியில் பலாக்காய் முள் போன்று கோடி லிங்கங்களை தன்னகத்தே கொண்டு சுயம்புமூர்த்தியாகவும், தன் சிரசிலிருந்து கங்கை நீர் இன்றளவும் அரும்பும் நிலையில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாகும்.

இறைவி பந்தாடுநாயகி. பத்ரயோகி முனிவர் தரிசனம் செய்ய வரும்போது இறைவி பந்தாடும் கோலத்தில் காட்சியளித்தமையால் பந்தர்டு நாயகி (கந்துகக்கிரீடாம்பிகை) எனப் பெயர் பெற்றார்.

இங்குள்ள விநாயகர் கோடி விநாயகர்என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பாடியோர்

சைவ சமயக்குரவர் திருநாவுக்கரசர் தேவாரத்திலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் போற்றிப்பாடியுள்ளனர்.

பேறு பெற்றோர்

ஏரண்ட முனிவர், மார்க்கண்டேயர், பத்திரயோகி முனிவர் ஆகியோர் வழிபட்ட தலம். [2]

மேற்கோள்கள்

  1. மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்
  2. சிவ.ஆ.பக்தவச்சலம், தேவாரத்திருத்தலங்கள் வழிகாட்டி, 43 சன்னதி வீதி, நல்லூர்ப்பேட்டை, குடியேற்றம் 636 602,