சு. திருநாவுக்கரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வரிசையில் ஒருவரான முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசர்(முன்பு எஸ்.திருநாவுக்கரசு) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா தீயத்துார் கிராமத்தில் 1949-ஆம் ஆண்டு பிறந்தார் பெற்றோர் சுப்புராமத் தேவர்-காளியம்மாள். தீவிர காங்கிரஸ் காரரான சுப்புராமத் தேவர் அவரது சொந்தஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். திருநாவுக்கரசருக்கு செல்வரெத்தினம் என்ற தம்பி உள்ளார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு ஜெயந்தி, கற்பகம் என்ற இரு மனைவிகளும், அன்பரசன், ராமச்சந்திரன், விஷ்னு என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வரிசையில் ஒருவரான முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசர்(முன்பு எஸ்.திருநாவுக்கரசு) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா தீயத்துார் கிராமத்தில் 1949-ஆம் ஆண்டு பிறந்தார் பெற்றோர் சுப்புராமத் தேவர்-காளியம்மாள். தீவிர காங்கிரஸ் காரரான சுப்புராமத் தேவர் அவரது சொந்தஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். திருநாவுக்கரசருக்கு செல்வரெத்தினம் என்ற தம்பி உள்ளார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு ஜெயந்தி, கற்பகம் என்ற இரு மனைவிகளும், அன்பரசன், ராமச்சந்திரன், விஷ்னு என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
கல்லுாரிக் காலங்களிலேயே திராவிட முன்னேற்றக் கழக மாணவரணியில் இணைந்து பணியாற்றி திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர்மீது கொண்ட பற்றின் காரணமாக எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது, தனது தந்தையின் எதிர்ப்பையும் மீறி தீயத்துாரில் அதிமுக கிளையை தொடங்கினார்.
கல்லுாரிக் காலங்களிலேயே திராவிட முன்னேற்றக் கழக மாணவரணியில் இணைந்து பணியாற்றி திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர்மீது கொண்ட பற்றின் காரணமாக எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது, தனது தந்தையின் எதிர்ப்பையும் மீறி தீயத்துாரில் அதிமுக கிளையை தொடங்கினார்.
பின்னர் 1977-ல் அப்போதைய எம்.ஜி.ஆரின் நெருங்கிய சகாவான எஸ்.டி.சோமசுந்தரம் பரிந்துரையின்பேரில், அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக திருநாவுக்கரசு போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசரை, முதல்வர் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். 3 ஆண்டுகள் துணை சபாநாயகராக திறம்பட பணியாற்றிய திருநாவுக்கரசர், மீண்டும் 1980 மற்றும் 1985 ஆகிய தேர்தலில்களில் அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்று, தமிழக அமைச்சரவையில் சத்துணவு, வீட்டுவசதி, பெருந்தொழி்ல்கள் துறை அமைச்சராகவும், அ.தி.மு.கவில் மாநில இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களையும் வகித்தார்.
பின்னர் 1977-ல் அப்போதைய எம்.ஜி.ஆரின் நெருங்கிய சகாவான எஸ்.டி.சோமசுந்தரம் பரிந்துரையின்பேரில், அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக திருநாவுக்கரசு போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசரை, முதல்வர் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். 3 ஆண்டுகள் துணை சபாநாயகராக திறம்பட பணியாற்றிய திருநாவுக்கரசர், மீண்டும் 1980 மற்றும் 1985 ஆகிய தேர்தலில்களில் அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்று, தமிழக அமைச்சரவையில் சத்துணவு, வீட்டுவசதி, பெருந்தொழி்ல்கள் துறை அமைச்சராகவும், அ.தி.மு.கவில் மாநில இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களையும் வகித்தார்.
எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக கொண்டுவந்து, அவரை முதல்வர் ஆக்கவும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்றொரு அமைச்சராக இருந்த ராம.வீரப்பன் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியம்மாளை முதல்வர் ஆக்கினர். ஆனால் திருநாவுக்கரசர், ஜெயலலிதா போன்றவர்களின் எதிர்ப்பால் ஜானகியம்மாளின் ஆட்சி கவிழ்ந்தது.
எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக கொண்டுவந்து, அவரை முதல்வர் ஆக்கவும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்றொரு அமைச்சராக இருந்த ராம.வீரப்பன் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியம்மாளை முதல்வர் ஆக்கினர். ஆனால் திருநாவுக்கரசர், ஜெயலலிதா போன்றவர்களின் எதிர்ப்பால் ஜானகியம்மாளின் ஆட்சி கவிழ்ந்தது.
தொடர்ந்து 1989-ல் அ.தி.மு.க ஜெ-அணி சார்பில் அறந்தாங்கியில் சேவல் சின்னத்தில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஜெ-ஜானகி அணிகள் இணைந்தது. இருப்பினும் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருநாவுக்கரசர் புரட்சித் தலைவர் அண்ணா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, திமுகவுடன் கூட்டணி அமைத்து அறந்தாங்கியில் குடை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட அலையால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தோற்றபோதும் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். பின்னர் 1996-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்து அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு, ஜெயலலிதாவே தோற்றபோதும் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 1989-ல் அ.தி.மு.க ஜெ-அணி சார்பில் அறந்தாங்கியில் சேவல் சின்னத்தில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஜெ-ஜானகி அணிகள் இணைந்தது. இருப்பினும் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருநாவுக்கரசர் புரட்சித் தலைவர் அண்ணா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, திமுகவுடன் கூட்டணி அமைத்து அறந்தாங்கியில் குடை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட அலையால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தோற்றபோதும் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். பின்னர் 1996-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்து அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு, ஜெயலலிதாவே தோற்றபோதும் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுடன் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி, 1998-ஆம் ஆண்டு புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுடன் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி, 1998-ஆம் ஆண்டு புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தொடர்ந்து 1999-ல் பாஜக-திமுக கூட்டணியில் போட்டியிட்டு புதுக்கோட்டை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து 1999-ல் பாஜக-திமுக கூட்டணியில் போட்டியிட்டு புதுக்கோட்டை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் பின்னர் அறந்தாங்கியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிட்டு வென்றார். அதைத் தொடர்ந்து 2001-ல் எம்.ஜி.ஆர் அதிமுக சார்பில் ப.அரசன் போட்டியிட்டு வென்றார்.
பின்னர் பின்னர் அறந்தாங்கியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிட்டு வென்றார். அதைத் தொடர்ந்து 2001-ல் எம்.ஜி.ஆர் அதிமுக சார்பில் ப.அரசன் போட்டியிட்டு வென்றார்.
பின்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவர் மத்திய கப்பல்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததால், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுப்பட்டார். பாஜகவின் தேசியச் செயலர் பதவி வழங்கப்பட்டது.
பின்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவர் மத்திய கப்பல்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததால், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுப்பட்டார். பாஜகவின் தேசியச் செயலர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2009 பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திருநாவுக்கரசர் தோல்வியுற்றார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். தற்போது நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் 2009 பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திருநாவுக்கரசர் தோல்வியுற்றார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். தற்போது நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.

06:25, 23 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் வரிசையில் ஒருவரான முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் சு.திருநாவுக்கரசர்(முன்பு எஸ்.திருநாவுக்கரசு) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா தீயத்துார் கிராமத்தில் 1949-ஆம் ஆண்டு பிறந்தார் பெற்றோர் சுப்புராமத் தேவர்-காளியம்மாள். தீவிர காங்கிரஸ் காரரான சுப்புராமத் தேவர் அவரது சொந்தஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். திருநாவுக்கரசருக்கு செல்வரெத்தினம் என்ற தம்பி உள்ளார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு ஜெயந்தி, கற்பகம் என்ற இரு மனைவிகளும், அன்பரசன், ராமச்சந்திரன், விஷ்னு என்ற மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். கல்லுாரிக் காலங்களிலேயே திராவிட முன்னேற்றக் கழக மாணவரணியில் இணைந்து பணியாற்றி திருநாவுக்கரசர், எம்.ஜி.ஆர்மீது கொண்ட பற்றின் காரணமாக எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது, தனது தந்தையின் எதிர்ப்பையும் மீறி தீயத்துாரில் அதிமுக கிளையை தொடங்கினார். பின்னர் 1977-ல் அப்போதைய எம்.ஜி.ஆரின் நெருங்கிய சகாவான எஸ்.டி.சோமசுந்தரம் பரிந்துரையின்பேரில், அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக திருநாவுக்கரசு போட்டியிட்டார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற திருநாவுக்கரசரை, முதல்வர் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆக்கினார். 3 ஆண்டுகள் துணை சபாநாயகராக திறம்பட பணியாற்றிய திருநாவுக்கரசர், மீண்டும் 1980 மற்றும் 1985 ஆகிய தேர்தலில்களில் அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்று, தமிழக அமைச்சரவையில் சத்துணவு, வீட்டுவசதி, பெருந்தொழி்ல்கள் துறை அமைச்சராகவும், அ.தி.மு.கவில் மாநில இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புக்களையும் வகித்தார். எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் இணைந்து அதிமுக கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளராக கொண்டுவந்து, அவரை முதல்வர் ஆக்கவும் முயற்சி மேற்கொண்டார். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தின் மற்றொரு அமைச்சராக இருந்த ராம.வீரப்பன் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியம்மாளை முதல்வர் ஆக்கினர். ஆனால் திருநாவுக்கரசர், ஜெயலலிதா போன்றவர்களின் எதிர்ப்பால் ஜானகியம்மாளின் ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து 1989-ல் அ.தி.மு.க ஜெ-அணி சார்பில் அறந்தாங்கியில் சேவல் சின்னத்தில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஜெ-ஜானகி அணிகள் இணைந்தது. இருப்பினும் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருநாவுக்கரசர் புரட்சித் தலைவர் அண்ணா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, திமுகவுடன் கூட்டணி அமைத்து அறந்தாங்கியில் குடை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட அலையால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தோற்றபோதும் அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். பின்னர் 1996-ல் மீண்டும் அதிமுகவில் இணைந்து அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்டு, ஜெயலலிதாவே தோற்றபோதும் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுடன் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு, எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி, 1998-ஆம் ஆண்டு புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து 1999-ல் பாஜக-திமுக கூட்டணியில் போட்டியிட்டு புதுக்கோட்டை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பின்னர் அறந்தாங்கியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிட்டு வென்றார். அதைத் தொடர்ந்து 2001-ல் எம்.ஜி.ஆர் அதிமுக சார்பில் ப.அரசன் போட்டியிட்டு வென்றார். பின்னர் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர் அதிமுகவை பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து அவர் மத்திய கப்பல்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக பதவி வகித்தார். அவரது பதவிக்காலம் முடிந்ததால், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுப்பட்டார். பாஜகவின் தேசியச் செயலர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் 2009 பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட திருநாவுக்கரசர் தோல்வியுற்றார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டார். தற்போது நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._திருநாவுக்கரசர்&oldid=1636492" இலிருந்து மீள்விக்கப்பட்டது