சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 37: | வரிசை 37: | ||
A aerial view of Chithannavasal plain.JPG|மலையிலிருந்து நிலக்காட்சி |
A aerial view of Chithannavasal plain.JPG|மலையிலிருந்து நிலக்காட்சி |
||
</gallery> |
</gallery> |
||
[[புதிதாக கண்டறியப்பட்ட தொல் பழங்கால ஓவியங்கள்]] |
|||
முனைவர். அருள் முருகன் தொல்பழங்கால பாறை ஓவியங்களை புதுக்கோட்டை மாவட்டம் முழுதும் பயணம் செய்து ஆய்ந்து வருகிறார். இவர் தற்போது சித்தன்னவாசலில் இதுவரை கண்டறியப்படாத பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளார். மழையின் கிழக்கு பகுதியில் உள்ள சமணர் இருக்கைகள் மேற்புறம் இவை இருக்கின்றன. பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என நான்கு ஓவியங்களை இவர் கண்டறிந்துள்ளார். |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
03:57, 2 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்
சித்தன்னவாசல், இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்ற ஊர் ஆகும். சித்தன்னவாயில் என்ற ஊரின் பெயர் கால ஓட்டத்தில் மாறி சித்தன்னவாசல் என்று ஆனது.
சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.
இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன.
சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது.
மலைகளில் செதுக்கப்பட்ட முனிவர்கள் சிற்பங்கள் போன்ற சிற்பங்களும், கோலம் போன்ற வட்ட வடிவ அமைப்பும் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
சமணர்களின் குகைக் கோயில்கள்
இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் சமணர்களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.
சித்தன்னவாசல் காட்சிக்கூடம்
-
சித்தன்னவாசலில் உள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டு
-
சித்தன்னவாசல் நுழைவாயில்
-
சித்தன்னவாசல் வரவேற்பு அறிவிப்பு
-
சித்தன்னவாசல் படகுக்குழாம்
-
குடைவரைக்கோயில். மூடப்பட்டிருக்கும் பகுதிக்கு உள்ளே உள்ள மண்டபத்திலும், முன் மண்டபப் பகுதியிலும் அழகான ஓவியங்கள் உள்ளன.
-
குடைவரைக்கோயில்
-
இந்திய தொல்லியல் கழகத்தின் அறிவிப்பு
-
சித்தன்னவாசல் மலைக்காட்சி
-
சித்தன்னவாசல் மலைக்காட்சி
-
இந்திய தொல்லியல் கழகத்தின் அறிவிப்பு
-
இந்திய தொல்லியல் கழகத்தின் அறிவிப்பு
-
சித்தன்னவாசல் மலைக்காட்சி
-
7-ஆம் நூற்றாண்டு ஓவியம். தாமரை மொட்டுகளுடன் மீன், பிற விலங்குகளுடன் நீரிடையே ஓர் ஆண்
-
மலையிலிருந்து நிலக்காட்சி
-
சித்தன்னவாசல் மலைக்காட்சி
-
கல் இருக்கை
-
மலையிலிருந்து நிலக்காட்சி
புதிதாக கண்டறியப்பட்ட தொல் பழங்கால ஓவியங்கள்
முனைவர். அருள் முருகன் தொல்பழங்கால பாறை ஓவியங்களை புதுக்கோட்டை மாவட்டம் முழுதும் பயணம் செய்து ஆய்ந்து வருகிறார். இவர் தற்போது சித்தன்னவாசலில் இதுவரை கண்டறியப்படாத பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளார். மழையின் கிழக்கு பகுதியில் உள்ள சமணர் இருக்கைகள் மேற்புறம் இவை இருக்கின்றன. பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என நான்கு ஓவியங்களை இவர் கண்டறிந்துள்ளார்.