நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29: வரிசை 29:
சிசிலி நாட்டு மன்னன் வில்லியம் இத்தாலியில் இருந்தான். அவனை ஏற்றுகொள்ள பாப்பு மறுத்து விட்டார், எனினும் 1156-ல் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர்.அதன்படி நேப்பின்ஸ், சலேர்னோ, அங்கோனா நகரங்களின் மீது அரசனுக்கு உரிமையளித்தார் பாப்பு. இதை கேள்விப்பட்ட அரசன் பிரடெரிக் சினம் கொண்டான். ஏனெனில், முறையான உரிமைப்படி இந்த மூன்று நகரங்களும் இவனுக்குச் சொந்தமானவை.
சிசிலி நாட்டு மன்னன் வில்லியம் இத்தாலியில் இருந்தான். அவனை ஏற்றுகொள்ள பாப்பு மறுத்து விட்டார், எனினும் 1156-ல் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர்.அதன்படி நேப்பின்ஸ், சலேர்னோ, அங்கோனா நகரங்களின் மீது அரசனுக்கு உரிமையளித்தார் பாப்பு. இதை கேள்விப்பட்ட அரசன் பிரடெரிக் சினம் கொண்டான். ஏனெனில், முறையான உரிமைப்படி இந்த மூன்று நகரங்களும் இவனுக்குச் சொந்தமானவை.
பாப்பு அதிரியான் 1159 செப்டம்பர் முதல் நாளில் இறைபதம் சேர்ந்தார்
பாப்பு அதிரியான் 1159 செப்டம்பர் முதல் நாளில் இறைபதம் சேர்ந்தார்

==மேற்கோள்கள்==
<references/>


{{s-start}}
{{s-start}}

10:02, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

திருத்தந்தை
நான்காம் ஹேட்ரியன்
ஆட்சி துவக்கம்4 டிசம்பர் 1154
ஆட்சி முடிவு1 செப்டம்பர் 1159
முன்னிருந்தவர்நான்காம் அனஸ்தாசியுஸ்
பின்வந்தவர்மூன்றாம் அலெக்சாண்டர்
பிற தகவல்கள்
இயற்பெயர்நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர்
பிறப்புசுமார் 1100
அபோட்ஸ் லாங்லி, ஹெர்ட்ஃபொர்ட்ஷர், இங்கிலாந்து இராச்சியம்
இறப்பு(1159-09-01)1 செப்டம்பர் 1159
அனாக்னி, திருத்தந்தை நாடுகள், புனித உரோமைப் பேரரசு
ஹேட்ரியன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

நான்காம் ஹேட்ரியன் (இலத்தீன்: Adrianus IV; பி. சுமார். 1100 – இ. 1 செப்டம்பர் 1159) என்பவர் 4 டிசம்பர் 1154 முதல் 1159இல் தனது இறப்புவரை கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக இருந்தவராவார். இவரின் இயற்பெயர் நிக்கோலாஸ் பிரேக்ஸ்பியர் ஆகும். இதுவரை திருத்தந்தை பணிப்பொருப்பினை வகித்த ஒரே ஆங்கிலேயர் இவர் ஆவார்.[1][2]

வாழ்கைச் சுறுக்கம்

இங்கிலாந்தில் 1100-ம் ஆண்டில் பிறந்த இவர், இளம் வயதில் கல்வி கற்பதற்காக ஆர்லஸ் சென்றார். படித்து முடித்ததும் அவிக்னோன் அருகிலிருக்கும் புனித ரூபஸ் துறவிகள் சபையில் சேர்ந்தார். ஒரு துறவியாக உரோமைக்கு சென்றபோது பாப்பு முன்றாம் யூஜின் இவரை கர்தினால் ஆயராக 1146-ல் நியமித்தார். 1154 டிசம்பர் 4-ல் இவர் பாப்புவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் திருநிலைப்படுத்தப்பட்ட போது, நான்காம் அதிரியான் என்ற பெயர் சூடிக்கொண்டார். இவருடைய பணிகாலம் மலர்ப்படுக்கையாக இருக்கவில்லை. சிசிலி நாட்டு அரசன் வில்லியம், வெளிப்படையாகவே எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தான். காம்பெக்னாவிலுள்ள் குறுநில அதிபர்கள் அவர்களுக்குள் சண்டையிட்டதோடு நின்று விடாமல், பாப்புடனும் மல்லுக்குநின்றனர். திருத்தூர்களின் கல்லறைகளை த்ரிசிக்க, வந்த திருப்பயணிகளையும் கொள்ளையடித்தனர். பிரெசியாவின் ஆர்னால்டு தலைமையில் உரோமைக்குடிமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர். 1155 ஜனவரியில் கர்தினால் ஜெரார்டஸ் தனது இல்லம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் தாக்கப்பட்டார் படுகாயமடைந்தார். உடனடியாக உரோமையில் தடை உத்தரவுபோட்டுவிட்டு, விட்டர்போ சென்றுவிட்டார் பாப்பு. இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நெருங்கிக் கொண்டிருந்தால், உரோமை மக்களும் பிரபுக்களும் விட்ற்ற்போவுக்குச் சென்று பாப்புவிடம் வாக்குறுதி அளித்தனர்- நகரின் அமைதியை பாதுகாப்பதாகவும், கலவரங்களை உருவாக்காமலிருப்பதாகவும், பாப்பு உரோமை நகருக்குத் திரும்பினார். பிரச்சனைகளுக்குக் காரணமாயிருந்த ஆர்னாடு தப்பித்துச் சென்றான். ஆனால் வழியில் அவனை பிடித்து மடக்கி சிறையிலடைத்தார்கள் உரோமையினர். உரோமைக்கு இழுத்துச்செல்லப்பட்டு, பொது இடதில் கொலை செய்யப்பட்டான் ஆர்னால்டு. இந்த வேளையில் பார்ப்ரோசா, லம்பார்டி வழியாக முன்னேறிக் கொண்டிருந்தான் உரோமை நகருக்கு வந்து திருத்தந்தையினால் மகுடம் சூட்டப்பட வேண்டும் என்பது அவனது விருப்பம். 1155 ஜுன் 9ம்- நாள் சுத்ரி என்ற இடதில் பாப்புவைச் சந்திதான். ஆனால், அவனுக்கு முடிசூட்ட முடியாது என்று பாப்பு மறுத்துவிட்டார். இரண்டு நாள்களுக்குப் பிறகு நேப்பி என்ற இடதில் பாப்புவைச் சந்தித்து, அவர் முன் முழந்தாளிட்டு பாப்புவின் அதிகாரத்திற்க்கு கட்டுப்பட்டு நடப்பதாக உறுதியளித்தான்… இரண்டு நாளுக்குப்பிறகு புனித பேதுரு பசிலிக்காவில், மன்னனாக முடி சூட்டினார் பாப்பு. மன்னன் பிரடெரிக் முடி சூட்டுவிழா நடந்து கொண்டிருந்த போது, உரோமைப் படைவீரர்கள் ஜெர்மனிய படை விரர்களுடன் போராடிக் கொண்டிருந்தனர். இரவு வேளையில் போர் நின்றபோது உரோமானியார் தோற்கடிக்கப்பட்டிருந்தனர். 200 உரோமானியப் போர் வீரர்கள் கைது செய்யப்பட்ட்னர். ஆயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்கள் போர்க்களத்தில் பலியாகிருந்தனர். பிரடெரிக் உரோமையில் நீண்டநாள் தங்க முடியாததால் நகரைவிட்டு வெளியேறினான்- பாப்புவுக்கும் உரோமைக் குடிமக்களுக்கும் பகையை மூட்டி விட்டு..! சிசிலி நாட்டு மன்னன் வில்லியம் இத்தாலியில் இருந்தான். அவனை ஏற்றுகொள்ள பாப்பு மறுத்து விட்டார், எனினும் 1156-ல் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர்.அதன்படி நேப்பின்ஸ், சலேர்னோ, அங்கோனா நகரங்களின் மீது அரசனுக்கு உரிமையளித்தார் பாப்பு. இதை கேள்விப்பட்ட அரசன் பிரடெரிக் சினம் கொண்டான். ஏனெனில், முறையான உரிமைப்படி இந்த மூன்று நகரங்களும் இவனுக்குச் சொந்தமானவை. பாப்பு அதிரியான் 1159 செப்டம்பர் முதல் நாளில் இறைபதம் சேர்ந்தார்

மேற்கோள்கள்

  1. Mackie, John Duncan (1907). Pope Adrian IV: The Lothian Essay, 1907. Blackwell. பக். 2. http://books.google.com/books?id=aLY-AAAAIAAJ&pg=PA2&vq=englishman&dq=%22Pope+Adrian+IV%22+englishman&source=gbs_search_s. 
  2. The English Pope by George F. Tull
முன்னர்
நான்காம் அனஸ்தாசியுஸ்
திருத்தந்தை
1144–45
பின்னர்
மூன்றாம் அலெக்சாண்டர்