திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி added Category:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள் using HotCat |
சி removed Category:தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்; added [[Category:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்க... |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]] |
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]] |
07:49, 8 செப்டெம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
பனையூர் சௌந்தரேசுவரர் கோயில் (திருப்பனையூர்) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை.
'பனையூர் பெயர் காரணம்'
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள காரணத்தினாலேயே இந்த ஊர் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. சென்னையிலிருந்து 25 கி மீ. தொலைவிலும் திருவான்மியூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அக்காலத்தில் மக்கள் பொதுவாக நால்வகை நிலங்களில் வாழ்ந்து வந்தாலும் மருதநிலமே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைந்தது. பனையூர் என்பதில் ஊர் என்பது மருதநிலம் என்பதைத்தான் குறிக்கும். மறப்பெயர், மாப்பெயர் என்று எல்லாவகைப் பெயர்களிலும் ஊர் என்பது சேர்ந்து கூறுவது தமிழகத்தில் வழக்கமாயிற்று. மருத மரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊர் மருதூர், நாவல் மரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊர் நாவலூர். அதேப்போல பனை மரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊர் பனையூர் என்று அழைக்கப்பட்டது.