நாகாலாந்து மக்கள் முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 12: வரிசை 12:


{{இந்திய அரசியல் கட்சிகள்}}
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
{{India-party-stub}}


[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]


{{India-party-stub}}

21:39, 24 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

நாமமு கொடி

நாகாலாந்து மக்கள் முன்னணி (Nagaland People's Front) இந்திய மாநிலமான நாகாலாந்தின் ஓர் அரசியல்கட்சியாகும். 2003-2008 காலத்தில் இக்கட்சி மாநில பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற வட்டாரக் கட்சிகளுடன் "நாகாலாந்து சனநாயகக் கூட்டணி" என்ற கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்தது. நடுவண் அரசால் சனவரி 3, 2008இல் கலைக்கப்பட்டபின்னர் நடந்த தேர்தல்களில் மீண்டும் வெற்றிபெற்று மார்ச்சு,2008 இல் மீண்டும் ஆட்சியமைத்தது. கட்சித் தலைவராக மருத்துவர் சுரோசெலி (Shürhozelie) உள்ளார்.[1] இக்கட்சியின் நைபியு ரியோ மாநில முதல்வராக இருந்து வருகிறார்.மார்ச்சு 22,2004 அன்று தன்னுடன் நாகாலாந்து சனநாயக கட்சியை இணைத்துக் கொண்டது.

மாநில அளவில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் நடுவண் அரசில் தேசிய சனநாயக கூட்டணியுடனோ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடனோ இணைந்திருக்கவில்லை.[2] மக்களவையில் ஓர் உறுப்பினர் உள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


வார்ப்புரு:India-party-stub