தாண்டவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முருக தாண்டவங்கள்
மேற்கோள் சுட்டி
வரிசை 18: வரிசை 18:
==கருவிநூல்==
==கருவிநூல்==
[[பரதக்கலை (நூல்)]] - [[வி.சிவகாமி]]
[[பரதக்கலை (நூல்)]] - [[வி.சிவகாமி]]

==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
<references/>


[[பகுப்பு:பரதநாட்டியம்]]
[[பகுப்பு:பரதநாட்டியம்]]

10:30, 6 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

பரதநாட்டிய கரணங்களை ஆண் ஆடும் பொழுது, அது தாண்டவம் என்று அழைக்கப்பெறுகிறது. இந்து மத ஆண் கடவுள்களான சிவபெருமான், விநாயகன், முருகன், திருமால் ஆகியோர் தாண்டவங்களை ஆடுபவர்களாக புராணங்களிலும், இந்து சமய நூல்களிலும் சித்தரிக்கப்படுகின்றனர். இவர்களில் சிவபெருமான் இந்த தாண்டவங்கள் ஆடுவதில் வல்லவராகவும், நடன கலையின் நாயகன் என்று பொருள்படும் படி நடராசர் (நடனராசர்) எனவும் அழைக்கப்படுகின்றார்.


சிவதாண்டவங்கள்

சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் தண்டு முனிவருக்கும், பரத முனிவருக்கும் தாண்டவங்களை கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரையான தாண்டவங்களுள் நூற்றியெட்டு தாண்டவங்களை சிவபெருமான் ஆடியதாக கூறப்படுகிறது. சிவபெருமான் ஆடுகின்ற தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணிக்கை அடிப்படையில் பஞ்ச தாண்டவங்கள், சப்த தாண்டவங்கள் என்று பல பரிவுகளாக அறியப்படுகின்றன.


முருக தாண்டவங்கள்

சிவபெருமானின் இளைய குமாரனான முருகபெருமான் குடை தாண்டவம், துடி தாண்டவம் ஆகிய தாண்டவங்களை ஆடியுள்ளார். [1]

திருமாலின் தாண்டவங்கள்

வைணவக் கடவுளான திருமால் தனது கண்ணன் அவதாரத்தில் காளிங்க நர்த்தனம் என்ற தாண்டவம் ஆடியதாக வைணவ நூல்கள் கூறுகின்றன.

கருவிநூல்

பரதக்கலை (நூல்) - வி.சிவகாமி

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. சைவ சமய சிந்தாமணி நூல் பக்கம் 68
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டவம்&oldid=1451665" இலிருந்து மீள்விக்கப்பட்டது