தேவாரத் திருத்தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி added Category:கோயில்கள் using HotCat |
சி removed Category:சைவ சமயம் using HotCat |
||
வரிசை 448: | வரிசை 448: | ||
* [http://www.thevaaram.org/ta/index.php பன்னிரு திருமுறை] |
* [http://www.thevaaram.org/ta/index.php பன்னிரு திருமுறை] |
||
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]] |
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]] |
||
[[பகுப்பு:சைவ சமயம்]] |
|||
[[பகுப்பு:கோயில்கள்]] |
[[பகுப்பு:கோயில்கள்]] |
08:30, 7 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
தேவாரத் திருமுறைகளைப் பாடிய சமயக் குரவர்களான சம்பந்தர், அப்பர் அல்லது சுந்தரரினால் தேவாரம் பாடப்பட்ட கோயில்கள் தேவாரத் திருத்தலங்கள் ஆகும். தேவாரப் பாடல்கள் 7 திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவை கி.பி. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் பாடப்பட்ட சைவ-சமயப் பாடல்கள். திருஞான சம்பந்தரின் பதிகங்கள் 1, 2, 3 திருமுறைகளாகவும், திருநாவுக்கரசரின் பதிகங்கள் 4, 5, 6 திருமுறைகளாகவும், சுந்தரமூர்த்தியின் பதிகங்கள் ஏழாம் திருமுறையாகவும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றால் பாடப்பட்ட ஊர்களைத் திருத்தலங்கள் என்பர்.
தலை என்னும் சொல் வடதலை என்னும்போது இடைச்சொல்லாய் அமைந்து ஓர் இடத்தைக் குறிக்கிறது. இந்தத் தலை என்னும் சொல் பெயர்ச்சொல்லாகி ஆகுபெயராய் ஊரை உணர்த்தலாயிற்று. தலை என்பது தலம் ஆயிற்று. ஸ்தலம் என்னும் வடசொல்லின் திரிபு என்பது அவரவர் மனப்பாங்கு.
- தேவாரத்தில் பாடப்பட்டுள்ள தலங்கள் மொத்தம் 276.
- இவற்றுள் அப்பர் என்னும் திருநாவுக்கரசரால் பாடப்பட்டவை 125;
- திருஞானசம்பந்தரால் பாடப்பட்டவை 219 (+பிற்சேர்க்கை 1)
- சுந்தரமூர்த்தியால் பாடப்பட்டவை 84.
- 7 திருமுறைகளிலுமுள்ள ஊர்களின் பெயர்களில் உள்ள திரு என்னும் அடைமொழி விலக்கி வைக்கப்பட்டுத் தொகுக்கப்பட்ட பின் ஊர்ப்பெயர்கள் அகர-வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
(குறிப்பிட்ட ஓர் ஊரை ஒருவரோ, இருவரோ, மூவருமோ பாடியுள்ளனர்) ஊரைப்பற்றிப் பாடும்போது அவ்வூரில் குடிகொண்டுள்ள சிவன்மீது பதிகம் பாடுவர். அந்தப் பதிகங்கள் ஒன்றாகவோ, பலவாகவோ இருக்கின்றன. (பதிகம் என்பது 10 பாடல்கள் அடங்கிய தொகுப்பு)
- சிறப்புப் பெயர்கள்
- திருக்கடைக்காப்பு = சம்பந்தர் அடங்கல் பாடல்கள்
- திருக்காப்பு = சம்பந்தர், பாடல்கள்
- திருப்பாட்டு = சுந்தரர் பாடல்கள்
- தேவாரம் = அப்பர் பதிகங்கள்
- பலச்ருதி (பலன் தரும் சுரிதகம் - தமிழ்) = திவ்ய பிரபந்த அடங்கல் பாடல்கள்
- அகர வரிசைப்படி தலங்கள்
- அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ
- க, கா, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ,
- ச, சா, சி, சு, செ, சே, சோ,
- த, தி, து, தூ, தெ, தே,
- ந, நா, நி, நீ, நெ, நொ,
- ப, பா, பி, பு, பூ, பெ, பே, பை,
- ம, மா. மீ. மு. மூ.
- வ. வா. வி. வீ. வெ. வே. வை.
- ஊர்கள்
(சுருக்கக் குறிப்பு : அ = அப்பர் எனப்படும் திருநாவுக்கரசர், ச = திருஞானசம்பந்தர், சு = சுந்தரமூர்த்தி)
அ
- அகத்தியான்பள்ளி ச
- அச்சிறுபாக்கம் ச
- அஞ்சைக்களம் சு
- அண்ணாமலை அ , ச
- அதிகை வீரட்டானம் அ , ச, சு
- அம்பர் இன்னம்பர் அ, ச
- அம்பர்ப் பெருந்திருக்கோயில் ச. சங்ககாலம் அம்பர்கிழான் அருவந்தை
- அம்பர் மாகாளம் ச
- அரசிலி ச தொண்டைநாடு
- அரிசிற்கரைப்புத்துர் அ , ச, சு. சங்ககாலம் 18 பாடல்கள் பாடிய புலவர் அரிசிற்கிழார்
- அவிநாசி, திருப்புக்கொளியூர் சு
- அழுந்தூர் – தேரழுந்தூர் ச சங்ககாலத்தில் அழுந்தூர்
- அன்பிலாந்துறை (அன்பில்) ச, அ
- அன்னியூர் அன்னியூர் இருப்பிடம் அ, ச. சங்ககால அரசன் அன்னி மிஞிலி
- அனேகதங்காவதம் ச - பெரும்பாணாற்றுப்படை 39-46 அடிகளில் கூறப்பட்டுள்ள காட்டுப் பகுதிதான் அன் ஏகதம் காவதம் சங்ககாலத்தில் காஞ்சித் தொண்டைமானின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்த நிலப்பகுதி பற்றிய செய்திகள்: பாடல் அடிகள் - "(1) அத்தம் செல்வோர் அலரத் தாக்கிக் கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக் கொடியோர் இன்று அவன் கடியுடை வியன்புலம்.(2) உருமும் உறாது (உருமும் அரிமா துன்பம் செய்யாது (3) அரவும் தப்பா (4) காட்டு மாவும் உறுகண் செய்யா (5) வேட்டாங்கு அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கிச் சென்மோ! இரவலர், சிறக்க நின் உள்ளம்"
ஆ
- ஆங்கூர்த் தான்தோன்றிமடம் அ , ச
- ஆடானை ச
- ஆப்பனூர் ச (இது மதுரையின் ஒரு பகுதியான செல்லூர்) 1 ஒப்புநொக்குக சங்ககாலத்துச் செல்லூர்
- ஆப்பாடி அ (திருப்பனந்தாள் அருகில் மண்ணி ஆற்றங்கரையில் உள்ளது) (சண்டேச நாயனார்)
- ஆமாத்தூர் அ, ச, சு
- ஆரூர் அ, ச, சு, 1
- ஆரூர் அரநெறி அ , (63 நாயன்மாகளில் ஒருவரான நமிநந்தி அடிகள் பூசித்தது)
- ஆரூர் பரவையுண் மண்டளி சு
- ஆலங்காடு அ, ச, சு 1
- ஆலம்பொழில் அ
- ஆலவாய் அ, ச, (மதுரை)
- ஆவடுதுறை அ, ச, சு,
- ஆவூர்ப்பசுபதீச்சரம் ச (சங்ககால ஆவூர்கிழார்)
- ஆனைக்கா அ, ச, சு (திருவானைக்காவல்)
இ
- இடும்பாவனம் ச
- இடைச்சுரம் ச தொ
- இடைமருது அ, ச, தெ, சு
- இடையாறு சு 1
- இந்திரநீலப் பருப்பதம் ச
- இராமனதீச்சரம் ச (திருக்கண்ணபுரம்)
- இராமேச்சரம் அ, ச 1
- இரும்பூளை ச (ஆலங்குடி வங்கனார் சங்ககாலப்புலவர்)
- இரும்பை மாகாளம் ச
- இளநகர் ச
ஈ
உ
- உறையூர் - மூக்கீச்சரம் ச
ஊ
எ
- எதிர்கொள்பாடி சு 1
- எறும்பியூர் அ 1
ஏ
- ஏடகம் (வைகை வடகரை) ச சம்பந்தர் தமிழோலை எள்ளத்தை எதிர்த்துச் சென்றதாகச் சொல்லப்படும் ஊர்
- ஏமம் – திருச்சிற்றேமம் ச
ஐ
- ஐயாறு அ, ச, சு 1 சங்கக்காலத்தில் இதன் பெயர் ஐயூர். ஐயூர் முடவனார் இவ்வூரில் வாழ்ந்த புலவர்.
ஒ
ஓ
- ஓணக்காந்தன்தளி சு
- ஓத்தூர் ச தொ ஆண்பனையைப் பெண்பனை ஆக்கியது (திருவந்திபுரம்)
க
- கச்சி அனேகதங்காவதம் சு (கச்சி என்பது பழம்பெயர். காஞ்சி என்பது பிற்காலப் பெயர்)
- கச்சி ஏகம்பம் அ, சு, ச (ஏகு அம்பர் ஊர். ஏகும் நீர்மணலில் தோன்றியவர் ஏகம்பர். அம்பு என்பது நீரைக் குறிக்கும் பழந்தமிழ்ச்சொல். பண்டைக் காலத்தில் கச்சியில் ஓடிய ஆறு கம்பாநதி.)
- கச்சி மேற்றளி அ, சு, சங்ககாலத்தில் இந்தக் கச்சியில் இருந்துகொண்டு ஆண்ட அரசவள்ளல் தொண்டைமான் இளந்திரையன். பெரும்பாணாற்றுப்படை நூலில் சிறப்பிக்கப்பட்டவன்.
- கச்சிநெறிக் காரைக்காடு ச
- கச்சூர் ஆலக்கோயில் சு
- கஞ்சனூர் அ
- கடம்பந்துறை அ
- கடம்பூர் அ, ச, 1
- கடவூர் மயானம் சு, அ, ச
- கடவூர் வீரட்டம் அ, ச, சு (திருக்கடையூர்)
- கடிக்குளம் – கற்பகனார் குளம் ச
- கடுவாய்க்கரைப்புத்தூர் அ
- கடைமுடி ச
- கண்டியூர் அ,
- கண்டியூர் வீரட்டம் ச
- கண்ணார்கோயில் ச 1
- கயிலாயம் அ, ச 1
- கரவீரம் ச
- கருகாவூர் அ, ச
- கருங்குடி ச (மருதாசலநல்லூர்)
- கருப்பறியலூர் ச, சு (தலைஞாயிறு)
- கருவிலிக்கொட்டிடை அ
- கருவூர் ஆனிலை ச (ஆனிலையப்பர் என்னும் செந்தமிழை பசுபதீஸ்வரர் என மாற்றியுள்ளனர்
- கலயநல்லூர் சு (சாக்கோட்டை)
- கலிக்காமூர் ச (அன்னப்பன்பேட்டை) 1 2
- கழிப்பாலை அ, ச, சு (சிவபுரி), 1
- கழுக்குன்றம் அ, ச, சு 1
- கழுமலம் சு 1
- களர் – பாரிசாதவனம் ச
- கள்ளில் ச (சங்ககாலப் புலவர் கள்ளில் ஆத்திரையனார்)
- கற்குடி அ, ச, சு
- கன்றாப்பூர் அ 1
கா
- காட்டுப்பள்ளி - கீழைத்திருக்காட்டுப்பள்ளி ச , 1
- காட்டுப்பள்ளி – மேலைத்திருக்காட்டுப்பள்ளி ச, அ 1
- காவிரிப்பூம்பட்டினத்துத் திருப்பல்லீச்சரம் ச காவிரிப்பூம்பட்டினம்
- காளத்தி அ, ச, சு - வேறு கருத்து திருக்காளத்தி
- காறாயில் – திருக்காறை வாசல் ச தெ
- கானப்பேர் காளையார்கோயில்
- கானூர் அ, ச 1
கு
- குடந்தைக்காரோணம் – காசிவிசுவநாதர் கோயில் ச
- குடந்தைக் கீழ்க்கோட்டம் அ,
- குடமூக்கு அ, ச, கும்பகோணம்
- குடவாயில் ச
- குத்தாலம் – திருத்துருத்தி ச 1
- குரங்கணில் முட்டம் ச
- குரங்காடுதுறை – தென்குரங்காடுதுறை அ, ச = ஆடுதுறை
- குரங்காடுதுறை - வடகுரங்காடுதுறை ச 1
- குரங்குக்கா அ
- குருகாவூர் ச, சு
- குற்றாலம் - குறும்பலா ச
- குறுக்கை அ , குறுக்கை வீரட்டம் அ
கூ
- கூடல், வெஞ்சமாக்கூடல் சு (வேறு கருத்து - கரூரிலிருந்து நெரூர், அரங்கநாதன்பேட்டை ஊர்களைத் தாண்டிச் சென்றால் அமராவதி ஆறு காவிரி ஆற்றுடன் கலக்கும் இடத்தில் உள்ள சிற்றூர் வெஞ்சமாக் கூடல். இங்கு மணலில் மூழ்கிக் கிடக்கும் கோயிலிலுள்ள கல்வெட்டுகள் இந்த ஊரை வெஞ்சமாக் கூடல் என்று குறிப்பிடுகின்றன. சங்ககாலத்தில் அகுதை என்பவன் இருந்துகொண்டு அரசாண்ட ஊர் இது)
- கூடலையாற்றூர் சு 1
கெ
கே
- கேதாரம் ச, சு
- கேதீச்சரம் ச ஈழநாட்டில் உள்ள ஊர் # கேதீச்சரம் சு
கை
கொ
- கொட்டையூர் அ இருப்பிடம் நிலப்படம்
- கொடுங்குன்றம் ச பாடல்கள்
- கொடுமுடி – திருப்பாண்டிக் கொடுமுடி ச, சு, அ (கொடுமுடி)
- கொண்டீச்சரம் அ பாடல்
- கொள்ளம்புதூர் ச மேலும்
- கொள்ளிக்காடு ச மேலும்
கோ
- கோகரணம் அப்பர் பாடல், சம்பந்தர் பாடல்
- கோட்டாறு ச வேறு கருத்து இந்தத் தலம் தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள துளுநாட்டுத் தலமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
- கோட்டூர் – இலம்பையங்கோட்டூர் ச மேலும்
- கோடிக்கா அ, ச மேலும்
- கோடிக்குழகர் சு
- கோணமலை [1] ச ஈ (திருக்கோணமலை)
- கோயில் அ, ச,சு. கோயில் என்பதே சைவத் திருமுறைகளைப் பொருத்தமட்டில் தில்லை அம்பலவாணரின் கோயிலையே குறிக்கும்.
- கோயிலூர் – உசாத்தானம் ச மேலும் பார்க்க
- கோலக்கா ச, சு சம்பந்தர் பாடல்
- கோவலூர் வீரட்டம் அ, ச, நடுநாடு சம்பந்தர் பாடல்
- கோழம்பம் அ, ச, இக்காலத்தில் திருக்குழம்பியம் என வழங்கப்படுகிறது.
- கோளிலி – திருக்குவளை ச, அ, சு, பாடல்
ச
- சக்கரப்பள்ளி ச (இது தஞ்சாவூர் ஐயம்பேட்டை)
- சத்திமுற்றம் அ (சத்திமுற்றப் புலவர்)
சா
- சாத்தமங்கை ச பாடல்கள்
- சாய்க்காடு அ, ச
சி
- சிக்கல் ச (சிக்கல்)
- சிராப்பள்ளி அ, ச, திருச்சிராப்பள்ளி
- சிவபுரம் – சண்பகவனம் ச, அ,
- சிறுகுடி ச (சங்ககாலம் சிறுகுடி கிழான் பண்ணன்)
சு
செ
- செங்காட்டங்குடி அ, ச பாடல் சிறுத்தொண்டர் (சிறுமைப்பட்ட தொண்டர்) பிள்ளைக்கறி
- செங்குன்றூர் – திருக்கொடிமாடச் செங்குன்றூர் ச கொ
- செங்கோடு ச (திருச்செங்கோடு)
- செம்பொன்பள்ளி அ, ச - இக்காலச் செம்பொனார் கோயில்
சே
சோ
- சோபுரம் ச நடு
- சோற்றுத்துறை அ, ச, சு, பாடல் பாடல்
த
- தண்டலை நீணெறி ச
- தரும்புரம் ச
- தலைச்சங்காடு ச இன்னும்
- தலையாலங்காடு அ - சங்ககாலத் தலையாலங்கானம் = ஆலங்கானம்
தி
- திங்களூர் - ஒன்றுகொலாம் அ அப்பூதி மகன் விடம் மேலும்
- திட்டை – திருத்தென்குடித்திட்டை ச
- திருந்துவேதன்குடி ச
- திலதைப்பதி ச விளக்கம் மேலும்
- தினைநகர் சு படங்கள்
து
தூ
- தூங்கானைமாடம் அ, ச பெண்ணாகடம், இக்கால வழக்குப்பெயர் பெண்ணாடம்
தெ
- தெங்கூர் – தேங்கூர் ச
- தெளிச்சேரி ச
தே
ந
- நணா – பவாநி ச (பவானி)
- நரையூர் அ, ச, நரையூர்
- நல்லம் அ, ச, தற்போதுள்ள கோனேரிராசபுரம்
- நல்லூர் - அவளிவண் நல்லூர் ச,அ, அவள் இவண் நல்லூர் அவள் (சத்தி) இங்கே குடிகொண்டுள்ள நல்லூர் என்பது பொருள்
- நல்லூர் - அறையணி நல்லூர் – அறைகண்ட நல்லூர் ச மேலும் செய்தி
- நல்லூர் – பந்தணை நல்லூர் ச , அ
- நல்லூர் - வெண்ணெய் நல்லூர் சு
- நல்லூர் அ, ச
- நல்லூர்ப்பெருமணம் ச மேலும் விளக்கம்
- நள்ளாறு அ, ச, சு,
- நறையூர்ச் சித்தீச்சரம் ச, சு
- நன்னிலத்துப் பெருங்கோயில் சு
- நனிபள்ளி – புஞ்சைநனிபள்ளி அ, ச, சு, சம்பந்தர் பாடல்
நா
- நாகேச்சரம் அ, ச, சு, அப்பர் பாடல், சம்பந்தர் பாடல்
- நாகைக்காரோணம் அ, ச, சு,
- நாட்டியத்தான்குடி சு
- நாலூர் மயானம் ச சங்ககாலத்து நாலூர் - சங்ககாலத்தில் நாலூர்க்கோசர் அரசனுக்காக இறை தண்டிய ஊர். (பாண்டியன் மறவன் நாலை கிழவன் நாகன் என்னும் வள்ளல் இருந்த ஊர் இந்த நாலை வேறு ஊர்.)
- நாவலூர் சு திருநாவலூர் சட்டமன்றத் தொகுதி, திருநாவலூர் கோயில்
நி
- நின்றியூர் அ, ச, சு, திருநின்றவூர் பெருமாள் கோயில் வேறு
நீ
- நீடூர் சு சங்ககால நீடூர்
- நீலக்குடி அ பாடலும் உரையும்
நெ
- நெடுங்களம் ச தெ
- நெய்த்தானம் அ, ச, சம்பந்தர் பாடல், அப்பர் பாடல்
- நெல்லிக்கா ச சம்பந்தர் பாடல்
- நெல்வாயில் ச
- நெல்வாயில் அரத்துறை அ, ந, சு, (அரம் போல் வெள்ளாறு அராவும் துறை இவ்வூரில் இருந்ததால் இதனை அரத்துறை என்றனர்)
- நெல்வெண்ணெய் – திருமுக்கால் ச நடுநாடு - நெய்வணை இக்காலப் பெயர். - மேலும் விளக்கம்
- நெல்வேலி ச - திருநெல்வேலி
நொ
ப
- பட்டீச்சரம் ச பழையாறைப் பட்டீச்சரம்
- பயற்றூர் அ, - இக்காலத்தில் திருப்பயத்தங்குடி என வழங்கப்படுகிறது
- பரங்குன்றம் ச சு, சம்பந்தர் பாடல், - திருப்பரங்குன்றம்
- பராய்த்துறை அ, ச,
- பருப்பதம் அ
- பழமண்ணிப்படிக்கரை சு
- பழனம் அ, ச, - பழனம் - பழனம் சொற்பொருள்
- பழுவூர் ச
- பழையாறை வடதளி அ
- பறியலூர் வீரட்டம் ச
- பனங்காட்டூர், திருவன் பார்த்தான் சு
- பனந்தாள் ச
- பனையூர் ச, சு,
பா
- பாச்சிலாச்சிரமம் ச, சு,
- பாசூர் அ, ச, - பாசூர் இக்காலம்.
- பாதாளீச்சரம் – பாம்பணி, பாமணி ச தெ
- பாதிரி நியமம் ச
- பாம்புரம் ச தெ
- பாலைத்துறை அ
- பாவநாசம் அ அப்பர் பாடல்
- பாழி – அரந்தைப் பெரும்பாழி ச - சங்ககாலத்தில் மிதியல் செருப்பு என் போற்றப்பட்ட சங்ககாலச் செருப்பாழி நகர் வள்ளல் நன்னனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
- பாற்றுறை ச
பி
- பிரம்புரம் அ, ச, சீர்காழி
பு
- புகலூர் அ, ச, சு, - கருவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள ஊர் புன்செய்ப்புகலூர் என்னும் புன்செய்ப்புகழூர்
- புகலூர் வர்த்தமானீச்சரம் ச - 63 நாயன்மார்களில் ஒருவரான முருகனார் மடம் கட்டிச் சிவனடியார்களுக்கு உணவு, உடை, உறையுள் வழங்கிவந்த இடம் இது. முருகனார் தொண்டைச் சிறப்பித்து சம்பந்தர் புகலூர் வர்த்தமானீச்சரம் பதிகம் பாடியுள்ளார்.
- புக்கொளியூர், திருப்புக்கொளியூர் சு (அவிநாசி)
- புத்தூர் அ, ச, - புத்தூர்
- புலியூர், ஓமாம்புலியூர் அ, ச,
- புலியூர், திருஎருக்கத்தம் புலியூர் ச நடு
- புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ச, அ - திருப்பாதிரிப்புலியூர்
- புலியூர், பெரும்புலியூர் ச
- புள்ளமங்கை ச
- புள்ளிருக்குவேளூர் ச
- புறம்பயம் அ, ச, சு,
- புறவார் பனங்காட்டூர் ச நடுநாடு - புறவார்பனங்காட்டூர்
- புன்கூர் அ, ச, சு, - புன்கூர்
- புனவாயில் ச, சு, இது வங்கக் கடற்கரையில் உள்ளது. எனவே புனல்வாயில் < புனவாயில் என மருவியுள்ளது.
பூ
- பூண்டி, முருகன்பூண்டி சு (திருமுருகன்பூண்டி)
- பூந்துருத்தி அ - அப்பர் பாடல் - பூந்துருத்தி நம்பி காடநம்பி அருளிய திருவிசைப்பா
- பூவணம் அ, ச, சு, - பூவணம்
- பூவனூர் அ பூவனூர் மேலும் செய்தி
பெ
- பெருந்துறை திருப்பந்துறை பேணுபெருந்துறை ச காவிரியின் தென்கரை
பே
- பேரெயில் அ - சங்ககாலப் புலவர் பேரெயின்முறுவலார் இந்த ஊரினர் ஆகலாம்.
பை
- பைஞ்ஞீலி அ, ச, சு, ஞீலி என்பது வாழை. நஞ்சை இக்காலத்திலும் பச்சைநாவி என்பர். பைஞ்ஞீலி என்னும் சொல் நச்சுவாழை என்னும் பொருளைத் தரும். பைஞ்ஞீலி இவ்வூர்க் கோயிலின் தலமரம்.
ம
- மங்கலக்குடி அ, ச,
- மணஞ்சேரி அ, ச, சம்பந்தர் பாடல், அப்பர் பாடல்
- மயிலாடுதுறை அ, ச, - இக்கால மயிலாடுதுறை
- மயிலாப்பூர் ச மயிலாப்பூர்
- மயேந்திரப்பள்ளி ச = திருநல்லூர்ப் பெருமணம்
- மருகல் அ, ச, - மருகல்
- மழபாடி அ, ச, சு, மழவர் என்போர் போர்முகத்துத் தூண் போல ஊன்றி நிற்பவர். மழவர் பெருமானை வச்சிர தம்ப நாதர் என வடசொல்லாக்கினர். அன்றியும் சிவன் மழு ஏந்திய பெருமான். மழு < மழவர் = மழுவேந்திய போர் மறவர்.
- மறைக்காடு அ, ச, சு, திருமறைக்காடு
மா
- மாகறல் ச திருமாகறல்
- மாணிகுழி ச நடுநாடு
- மாந்துறை ச
- மாற்பேறு அ, ச, மேலும் செய்தி
மீ
- மீயச்சூர் ச தெ , மீயச்சூர் இளங்கோயில் அ
மு
- முக்கூடல், பள்ளியின் முக்கூடல் அ
- முண்டீச்சரம் அ திருவெண்ணெய்நல்லூருக்கு அருகில்
- முதுகுன்றம் அ, ச, சு, மேலும்
- முல்லைவாயில் தென் திருமுல்லைவாயில் ச
- முல்லைவாயில், வட திருமுல்லைவாயில் சு
- முள்ளூர், கானட்டு முள்ளூர் சு (மலையமான் திருமுடிக்காரி ஆண்ட சங்ககால முள்ளூர் ஒரு மலைநாடு.
மூ
- மூக்கீச்சுரம் (உறந்தை) அ உறையூர்
வ
- வக்கரை ச
- வடுகூர் ச நடுநாடு - வடுகூர்
- வலஞ்சுழி அ, ச, திருவலஞ்சுழி
- வலம்புரம் அ, ச, சு,
- வல்லம் ச சங்ககாலத்தில் வல்லம், வல்லங்கிழவன் நல்லடி, வல்லத்துப் புறமிளை ஆரியர் படை உடைந்தது.
- வலிதாயம் ச
- வலிவலம் அ, ச, வலிவலம் மேலும் செய்தி
- வன்னியூர் அ இவ்வூருக்கு மக்கள் வழக்கில் உன்ன பெயர் அன்னியூர். சங்ககாலத்தில் அன்னி, அன்னி மிஞிலி ஆகியோர் வாழ்ந்த ஊர்.
வா
- வாஞ்சியம் அ, ச, சு,
- வாட்போக்கி அ
- வாய்மூர் அ, ச,
- வாழ்கொளிபுத்தூர் ச, சு,
- வான்மியூர் அ, ச, திருவான்மியூர்
வி
- விசயமங்கை அ, ச,
- விடைவாய் ச
- வியலூர் ச திருவியலூர் - சங்ககாலத்தில் சேரன் செங்குட்டுவன் போரிட்டழித்த வியலூர் சேரநாட்டு இடும்பில்புறத்தில் ஓடிய ஆற்றுக்கு எதிர்கரையில் இருந்தது.
- விளமர் ச
- விற்குடி வீரட்டம் ச
- விற்கோலம் ச
வீ
- வீழிமிழலை அ, ச, சு, பெருமிழலைக் குறும்பர் என்னும் பரம யோகி தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரை வழிபட்டு வாழ்ந்தவர்.
வெ
- வெண்காடு அ, ச, சு, சிறுத்தொண்ட நாயனாரின் பனைவி திருவெண்காட்டு நங்கை
- வெண்டுறை ச
- வெண்ணியூர் – கோயில்வெண்ணி அ, ச சங்ககாலத்து வெண்ணிப்பறந்தலைப் போர்
- வெண்பாக்கம் சு
வே
- வேட்களம் அ, ச,
- வேட்டக்குடி ச
- வேதிகுடி அ, ச,
- வேள்விக்குடி சு, ச,
- வேளூர் – திருக்கீழ்வேளூர் அ, ச
- வேளூர் – திருப்பெருவேளூர் அ, ச
- வேளூர், புள்ளிருக்குவேளூர் அ சங்ககாலத்தில் இது வேளூர் வாயில் என்னும் பெயருடன் விளங்கியது.
- வேற்காடு, திருவேற்காடு ச தொ திருவேற்காடு ஊர், திருவேற்காடு
வை
- வைகல் மாடக்கோயில் (செங்கணான் கட்டியது) ச மாடக்கோயில் விளக்கம்
- வைகாவூர் ச
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
- ↑ தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடிப் போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியும் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரே. திருஞானசம்பந்தர்; பாடல் எண் 5