நா. பார்த்தசாரதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 3: வரிசை 3:


==வாழ்க்கைச் சுருக்கம்==
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[படிமம்:Na parthasarathy with journalists.jpg|வலது|300px]]
[[தமிழ்நாடு]], [[விருதுநகர் மாவட்டம்]] , [[சிவகாசி]] வட்டத்தில் உள்ள நரிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். [[பாரதியார்]] ஆசிரியராய் இருந்த [[மதுரை]] சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், [[குறிஞ்சிமலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]].
[[தமிழ்நாடு]], [[விருதுநகர் மாவட்டம்]] , [[சிவகாசி]] வட்டத்தில் உள்ள நரிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். [[பாரதியார்]] ஆசிரியராய் இருந்த [[மதுரை]] சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். [[கல்கி (இதழ்)|கல்கி]] இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், [[குறிஞ்சிமலர் (புதினம்)|குறிஞ்சி மலர்]].


வரிசை 8: வரிசை 9:


[[1979]]ல் [[இந்தியன் எக்ஸ்பிரஸ்]] நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த [[தினமணி|தினமணிக் கதிர்]] வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், [[இராணி மங்கம்மாள்]] போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து ''சுந்தரக் கனவுகள்'' என்கிற தலைப்பில் ஒரு புதினம் எழுதினார்.
[[1979]]ல் [[இந்தியன் எக்ஸ்பிரஸ்]] நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த [[தினமணி|தினமணிக் கதிர்]] வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், [[இராணி மங்கம்மாள்]] போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து ''சுந்தரக் கனவுகள்'' என்கிற தலைப்பில் ஒரு புதினம் எழுதினார்.

[[படிமம்:Na parthasarathy with journalists.jpg|600px]]
==பயண இலக்கியம்==
==பயண இலக்கியம்==
பயணக் கட்டுரைகள் நா.பா. நிறைய எழுதினார். [[ரஷ்யா]], [[இங்கிலாந்து]], [[போலந்து]], [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]], [[சுவிட்சர்லாந்து]], [[இத்தாலி]], [[எகிப்து]], [[குவைத்]] போன்ற பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
பயணக் கட்டுரைகள் நா.பா. நிறைய எழுதினார். [[ரஷ்யா]], [[இங்கிலாந்து]], [[போலந்து]], [[பிரான்ஸ்]], [[ஜெர்மனி]], [[சுவிட்சர்லாந்து]], [[இத்தாலி]], [[எகிப்து]], [[குவைத்]] போன்ற பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

17:53, 31 மே 2013 இல் நிலவும் திருத்தம்

நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் புதின (நாவல்) எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற புதினங்களான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.

வாழ்க்கைச் சுருக்கம்

தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், குறிஞ்சி மலர்.

1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.

1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், இராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து சுந்தரக் கனவுகள் என்கிற தலைப்பில் ஒரு புதினம் எழுதினார்.

பயண இலக்கியம்

பயணக் கட்டுரைகள் நா.பா. நிறைய எழுதினார். ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

விருதுகள்

சாகித்ய அகாதமி பரிசு (சமுதாய வீதி), ராஜா சர் அண்ணாமலை பரிசு (துளசி மாடம்), தமிழ்நாடு பரிசு போன்ற பல பரிசுகளும் விருதுகளும் பெற்றிருக்கிறார்.

மறைவு

நாற்பத்தைந்து வயதிற்குமேல் எம்.ஏ. படித்துத் தேறி, டாக்டர் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார். பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என் தலைப்பில் ஆய்வேட்டினையும் சமர்ப்பித்தார். ஆனால் டாக்டர் பட்டம் கிடைக்க இரண்டே நாட்கள் இருந்த நிலையில் இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காலமானார்.

நா.பார்த்தசாரதியின் புதினங்கள்

  • கபாடபுரம்
  • சாயங்கால மேகங்கள்
  • மணிபல்லவம்
  • ஆன்மாவின் ராகங்கள்
  • குறிஞ்சி மலர்
  • பொன் விலங்கு
  • சாயங்கால மேகங்கள்
  • நிசப்த சங்கீதம்
  • ராணி மங்கம்மாள்
  • சமுதாய வீதி
  • துளசி மாடம்
  • பாண்டிமாதேவி
  • நித்திலவல்லி
  • வஞ்சிமாநகரம்
  • சத்தியவெள்ளம்
  • வெற்றி முழக்கம்

சான்றாவணங்கள்

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._பார்த்தசாரதி&oldid=1431064" இலிருந்து மீள்விக்கப்பட்டது