ஒட்டக்கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி added Category:சைவச் சிற்றிலக்கிய ஆசிரியர்கள் using HotCat |
சி added Category:சைவ சமய நூலாசிரியர்கள் using HotCat |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]] |
||
[[பகுப்பு:சைவச் சிற்றிலக்கிய ஆசிரியர்கள்]] |
[[பகுப்பு:சைவச் சிற்றிலக்கிய ஆசிரியர்கள்]] |
||
[[பகுப்பு:சைவ சமய நூலாசிரியர்கள்]] |
16:27, 18 மே 2013 இல் நிலவும் திருத்தம்
ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு.
நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், சில நூற்றாண்டுகள் பின் வாழ்ந்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இதே போல கம்பரும் ஒட்டக்கூத்தருக்குப் பின் வாழ்ந்தவர் என்னும் கருத்து உள்ளது.
பெயர்ப் பொருள்
கூத்தர் என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் 'ஒட்டம்' (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார். [1]
ஒட்டக்கூத்தரின் நூல்கள்
- காங்கேயன் நாலாயிரக் கோவை
- மூவர் உலா
- குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
- ஈட்டியெழுபது
- அரும்பைத் தொள்ளாயிரம்
- தக்கயாகப் பரணி
- கலிங்கத்துப் பரணி
- எழுப்பெழுபது
இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.
ஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்
- புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர், புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149
- நான் கண்ட ஒட்டக்கூத்தர், சிறீநிவாச ரங்கசுவாமி, நாம் தமிழர் பதிப்பகம், 2004, ப்க்.1-90.
வெளி இணைப்புகள்
- ஒட்டக்கூத்தர் பாடிய உலாக்கள் (தமிழில்)
அடிக்குறிப்பு
- ↑ ஒட்டக்கூத்தர் அரும்பைத் தொள்ளாயிரம் பாடும்போது, அதில் லரும் ஒரு பாடலை ஒட்டி மற்றொரு பாடலைப் பாடுமாறு விக்கிரம சோழன் கேட்டதாகவும், ஒட்டக்கூத்தர் சோழன் விருப்பப்படி ஒட்டிப் பாடியதால் ‘ஒட்டக்கூத்தர்’ என்னும் பெயரைப் பெற்றார் என்னும் செய்தியும் கூறப்படுகிறது. - *மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005