பத்திரிசு லுமும்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ro:Patrice Lumumba
சி தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 72: வரிசை 72:
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:AFTv5Test‎]]


[[af:Patrice Lumumba]]
[[ar:باتريس لومومبا]]
[[arz:باتريس لومومبا]]
[[bg:Патрис Лумумба]]
[[bo:ཕ་ཁྲི་རི་ཟེ་ལི་མིན་བ།]]
[[ca:Patrice Lumumba]]
[[cs:Patrice Lumumba]]
[[da:Patrice Lumumba]]
[[de:Patrice Lumumba]]
[[el:Πατρίς Λουμούμπα]]
[[en:Patrice Lumumba]]
[[eo:Patrice Lumumba]]
[[es:Patrice Lumumba]]
[[et:Patrice Lumumba]]
[[eu:Patrice Lumumba]]
[[fa:پاتریس لومومبا]]
[[fi:Patrice Lumumba]]
[[fr:Patrice Lumumba]]
[[gl:Patrice Lumumba]]
[[he:פטריס לומומבה]]
[[hr:Patrice Lumumba]]
[[hu:Patrice Lumumba]]
[[id:Patrice Lumumba]]
[[it:Patrice Lumumba]]
[[ja:パトリス・ルムンバ]]
[[ko:파트리스 루뭄바]]
[[la:Patricius Lumumba]]
[[ln:Patrice Lumumba]]
[[lt:Patris Lumumba]]
[[lv:Patriss Lumumba]]
[[ml:പാട്രിസ് ലുമുംബ]]
[[mr:पॅट्रिस लुमुम्बा]]
[[nl:Patrice Lumumba]]
[[no:Patrice Lumumba]]
[[pa:ਪਤਰੀਸ ਲਮੂੰਬਾ]]
[[pa:ਪਤਰੀਸ ਲਮੂੰਬਾ]]
[[pl:Patrice Lumumba]]
[[pnb:پطرس لوممبا]]
[[pt:Patrice Lumumba]]
[[ro:Patrice Lumumba]]
[[ru:Лумумба, Патрис]]
[[simple:Patrice Lumumba]]
[[sk:Patrice Lumumba]]
[[sr:Патрис Лумумба]]
[[sv:Patrice Lumumba]]
[[sw:Patrice Lumumba]]
[[tl:Patrice Lumumba]]
[[tr:Patrice Lumumba]]
[[uk:Патріс Лумумба]]
[[wa:Patrice Lumumba]]
[[xmf:პატრის ლუმუმბა]]
[[yo:Patrice Lumumba]]
[[zh:帕特里斯·卢蒙巴]]

18:26, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

பத்திரிசு லுமும்பா
Patrice Lumumba
கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் 1வது பிரதமர்
பதவியில்
ஜூன் 24, 1960 – செப்டம்பர் 14, 1960
Deputyஅன்டோன் கிசெங்கா
முன்னையவர்பெல்ஜிய கொங்கோ
பின்னவர்ஜோசப் இலேயோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1925-07-02)2 சூலை 1925
ஒனலூவா, கட்டக்கொக்கொம்பே, பெல்ஜிய கொங்கோ
இறப்பு17 சனவரி 1961(1961-01-17) (அகவை 35)
எலிசபெத்வில், கட்டாங்கா
அரசியல் கட்சிகொங்கோ தேசிய இயக்கம்

பத்திரிசு எமெரி லுமும்பா (Patrice Émery Lumumba), (ஜூலை 2, 1925ஜனவரி 17, 1961) ஆப்பிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்சியத்திடம் இருந்து தமது நாட்டுக்கு ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

வாழ்க்கைச் சுருக்கம்

லுமும்பா பெல்ஜிய கொங்கோவில் டெட்டெலா என்ற இனத்தில் பிறந்தவர். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரச அஞ்சல் சேவையில் ஊழியராகச் சேர்ந்தார். 1955 இல் பெல்ஜிய தாராண்மைவாதக் கட்சியில் இணைந்தார். 3 வாரத்துக்கு படிப்பு காரணமாக பெல்ஜியம் சென்றவர் அங்கு அஞ்சல் சேவைப் பணத்தைக் கையாட முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டாண்டுகள் சிறை வைக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் இக்குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டு 12 மாதங்களில் ஜூலை 1956 இல் விடுதலையானார். இதன் பின் அவர் நாடு திரும்பி 'கொங்கோ தேசிய இயக்கம்' என்ற பெயரில் ஓர் இயக்கத்தை 1958 இல் ஆரம்பித்து பின்னர் அதன் தலைவரும் ஆனார். டிசம்பர் 1958 இல் கானாவில் இடம்பெற்ற அனைத்து ஆப்பிரிக்க மக்கள் மாநாட்டில் லுமும்பா கலந்து கொண்டார்.

லுமும்பாவின் கொங்கோ தேசிய இயக்கம் நாட்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை பெற்று வென்றது. அதே நேரத்தில் கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு ஜனவரி 18, 1960 இல் பிரசல்சில் நடந்தது. இம்மாநாட்டில் லுமும்பாவும் கலந்து கொண்டார். ஜனவரி 27 இல் மாநாட்டில் கொங்கோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது. மே, 1960 இல் நடந்த பொதுத்தேர்தலில் லுமும்பாவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அதனை அடுத்து ஜூன் 23, 1960 இல் லுமும்பா நாட்டின் பிரதமரானார். கொங்கோவின் விடுதலை ஜூன் 30, 1960 இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விடுதலை நாளன்று பத்திரிசு லுமும்பா தனது முதலாவது புகழ் பெற்ற உரையை நாட்டு மக்களுக்கு வழங்கினார்[1].

லுமும்பா பிரதமரான சில நாட்களுக்குள்ளேயே இராணுவத்தினர் தவிர மற்றைய அரசு ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை வழங்கினார். இது இராணுவத்தினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தைஸ்வில் இராணுவ முகாமில் இராணுவத்தினர் தமது மேலதிகாரிகளின் மீது தாக்குதல்களைத் தொடங்கினர். இது பின்னர் பல இடங்களுக்கும் பரவியது. விரைவில் சட்டம், ஒழுங்கு நாட்டில் இல்லாமலே போனது. பல ஐரோப்பியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்[2].

சோவியத் ஆதரவு

கட்டாங்கா மாகாணம் ஜூன் 1960 இல் மொயிஸ் த்சோம்பே தலைமையில் பெல்ஜியத்தின் ஆதரவுடன் தனது விடுதலையை அறிவித்தது. ஐநா படைகள் வரவழைக்கப்பட்டன. இதனால் லுமும்பா சோவியத் ஒன்றியத்தின் உதவியைக் கோரினார்.

கைது

பத்திரிசு லுமும்பா

செப்டம்பர் 1960 இல் அந்நாட்டின் அதிபர் அதிபர் காசா-வுபு, சட்டத்துக்கு மாறாக லுமும்பாவின் அரசைக் கலைக்க அறிவித்தார். மாற்றாக, லுமும்பா, அதிபர் காசா-வுபுவின் பதவியைப் பறிக்க முயன்றார். செப்டம்பர் 14, 1960 இல் சிஐஏஇன் ஆதரவுடன் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு லுமும்பா அரசைப் பதவியில் இருந்து கலைத்தார்.[2] லுமும்பா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஐநா படைகள் அவருக்குப் பாதுகாப்பு அளித்தனர். வீட்டுக் காவலில் இருந்து தப்பித்த லுமும்பா ஸ்டான்லிவில் நோக்கி நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டார். ஆனாலும் மொபுட்டுவின் படையினரால் அவர் 1960, டிசம்பர் 1 இல் 'போர்ட் ஃபிராங்கி' என்ற இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். உள்ளூர் ஐநா அலுவலகத்திடம் அவர் முறையிட்ட போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கின்ஷாசா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டார் லுமும்பா. இராணுவத்தினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயன்றது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் லுமும்பாவுக்கெதிராகச் சுமத்தப்பட்டன. சட்டத்தின் மூலம் மட்டுமே லுமும்பா விசாரிக்கப்படவேண்டும் என ஐநா செயலர் டாக் ஹமாஷெல்ட் கொங்கோ அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். சோவியத் ஒன்றியம், லுமும்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

ஐநா பாதுகாப்புச் சபையில் லுமும்பாவிற்கு ஆதரவாக சோவியத் ஒன்றியம் டிசம்பர் 14, 1960 இல் கொண்டுவந்த தீர்மானம் 8-2 வாக்குகளால் தோற்றுப் போனது. ஐநா செயலருக்கு கொங்கோ விவகாரத்தில் அதிக அதிகாரம் அளிக்க மேலை நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை சோவியத் ஒன்றியம் தனது வீட்டோ பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது.

லுமும்பாவின் பாதுகாப்புக் கருதி அவர் கட்டங்கா மாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

லுமும்பாவின் இறப்பு

ஜனவரி 17, 1961 இல் லுமும்பா பெல்ஜிய அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்[3]. அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கேப்டன் ஜூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்ஷூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் ஆவர்[4]. கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து அவரது இரு ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. பெல்ஜியத் தகவல் படி இக்கொலைகள் ஜனவரி 17, 1961 இரவு 9:40 க்கும் 9:43 க்கு இடையில் இடம்பெற்றது.

மூன்று வாரங்களின் பின்னரேயே லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது. லுமும்பா சிறையில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் உள்ளூர் வானொலி தகவல் தந்தது.

லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டதும் பல ஐரோப்பிய நகரங்களில் பெல்ஜியத் தூதரகங்களின் முன்னர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.[1]

1961 சோவியத் அஞ்சல் தலை

நினைவுச் சின்னங்கள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Independence Day Speech". Africa Within. {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. 2.0 2.1 Larry Devlin, Chief of Station Congo, 2007, Public Affairs, ISBN 1-58648-405-2
  3. "Correspondent:Who Killed Lumumba-Transcript". BBC. 00.35.38-00.35.49
  4. "Correspondent:Who Killed Lumumba-Transcript". BBC. 00.36.57
  5. http://www.cnn.com/WORLD/9707/26/russia.university/
  6. http://news.bbc.co.uk/1/hi/world/africa/3321575.stm

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரிசு_லுமும்பா&oldid=1348874" இலிருந்து மீள்விக்கப்பட்டது