தெளிவத்தை ஜோசப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 10: வரிசை 10:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலையக இலக்கியம்]]
[[பகுப்பு:மலையக இலக்கியம்]]
[[பகுப்பு:1934 பிறப்புகள்]]

22:06, 22 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பி. பெப்ரவரி 16, 1934) ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம். காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார்.

வெளியான நூல்கள்

  1. காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
  2. நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
  3. பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
  4. மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)
  5. இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும் (அச்சில், மூன்றாவது மனிதன் வெளியீடு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெளிவத்தை_ஜோசப்&oldid=1282174" இலிருந்து மீள்விக்கப்பட்டது