இன்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
இதற்கன அடிப்படைக் காரணம், தமிழ் எழுத்து மொழியின் ‘மொழிப் பொருட் காரணம்‘ ஆனது இன்றுவரை தமிழ் மொழியை ஆராய்ந்து வருபவர்களால் ஆராய்ந்து அறியமுடியாது இருந்து வருவதாகும்.
இதற்கன அடிப்படைக் காரணம், தமிழ் எழுத்து மொழியின் ‘மொழிப் பொருட் காரணம்‘ ஆனது இன்றுவரை தமிழ் மொழியை ஆராய்ந்து வருபவர்களால் ஆராய்ந்து அறியமுடியாது இருந்து வருவதாகும்.


தொல்காப்பியன் ‘மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா‘ எனக் கூறியதற்கு நச்சினார்க்கினியரும், சேனாவரையரும் விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். மனிதர்களின் ஐம்புலன்களனூடான அறிந்துணர்வுகள் ‘தன்மை‘ (Nature)அடிப்படையிலானதாக இருக்கும் நிலையில், சேனாவரையரது விளக்கத்தினைச் சரியாக விளங்கிக்கொண்டால்,தமிழ் எழுத்து மொழியில் மனிதரால் எழுப்பக்கூடிய ஒவ்வொரு மூலத்தனியொலியும் ‘தன்மை‘ அடிப்படையிலான ஒரு குறிப்பிட்ட விபரிப்பினைச் செய்கிறது என்பதையும், இந்த மூலத்தனியொலிகளின் இணைவுடாக உருவாகும் தன்மை அடிப்படையிலான விபரிப்பு முழுமையானதாக இருக்கும் இணையொலியே ‘சொல்‘ (word) என்பதையும், அந்த முழுமையான விபரிப்பினை நாம் எவையெவைகளில் எம்மிலும், எமது சுற்றத்திலும், நாம் வாழும் பிரபஞ்சத்திலும் அடையாளங்காணகிறோமோ, அப்பொருட்கள் எல்லாம் அக்குறிப்பிட்ட சொல்லின் பொருள்கள் ஆகின்றன என்பதையும் அறியமுடியும். இந்தநிலையில், தமிழ் மொழி ஆய்வில் முதலாவது படியானது, மனிதரால் எழுப்பக்கூடிய மூலத்தனியொலி ஒவ்வொன்றும் தன்மை அடிப்படையில் செய்யும் விபரிப்பினை ஆராய்ந்து அறிவதாகத்தான் இருக்கமுடியும்.
தொல்காப்பியன் ‘மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா‘ எனக் கூறியதற்கு நச்சினார்க்கினியரும், சேனாவரையரும் விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். மனிதர்களின் ஐம்புலன்களினூடான அறிந்துணர்வுகள் ‘தன்மை‘ (Nature)அடிப்படையிலானதாக இருக்கும் நிலையில், சேனாவரையரது விளக்கத்தினைச் சரியாக விளங்கிக்கொண்டால்,தமிழ் எழுத்து மொழியில் மனிதரால் எழுப்பக்கூடிய ஒவ்வொரு மூலத்தனியொலியும் ‘தன்மை‘ அடிப்படையிலான ஒரு குறிப்பிட்ட விபரிப்பினைச் செய்கிறது என்பதையும், இந்த மூலத்தனியொலிகளின் இணைவுடாக உருவாகும் தன்மை அடிப்படையிலான விபரிப்பு முழுமையானதாக இருக்கும் இணையொலியே ‘சொல்‘ (word) என்பதையும், அந்த முழுமையான விபரிப்பினை நாம் எவையெவைகளில் எம்மிலும், எமது சுற்றத்திலும், நாம் வாழும் பிரபஞ்சத்திலும் அடையாளங்காண்கின்றோமோ, அப்பொருட்கள் எல்லாம் அக்குறிப்பிட்ட சொல்லின் பொருள்கள் ஆகின்றன என்பதையும் அறியமுடியும். இந்தநிலையில், தமிழ் மொழி ஆய்வில் முதலாவது படியானது, மனிதரால் எழுப்பக்கூடிய மூலத்தனியொலி ஒவ்வொன்றும் ‘தன்மை‘ (nature) அடிப்படையில் செய்யும் விபரிப்பினை ஆராய்ந்து அறிவதாகத்தான் இருக்கமுடியும்.


இப்படியறியப்பட்டவைகளை வைத்து ‘இன்பம்‘ என்றால் என்ன என்பதை அறிந்தாலே, ‘இன்பம்‘ என்றால் என்ன என்பதை விஞ்ஞான ரீதியாக வரையறை செய்யமுடியும்.
இப்படியறியப்பட்டவைகளை வைத்து ‘இன்பம்‘ என்றால் என்ன என்பதை அறிந்தாலே, ‘இன்பம்‘ என்றால் என்ன என்பதை விஞ்ஞான ரீதியாக வரையறை செய்யமுடியும்.

12:02, 18 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இன்பம் வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன. இன்பத்தைக் கண்டுணருக் கூடியதாக இருந்துவரும்போதும்,‘இன்பம்‘ என்ற சொல்லினை மொழியியல் ரீதியாக வரையறை செய்ய முடியாத நிலையில்தான் மொழியியல் ஆய்வாளர்களும், அறிஞரும் இதுவரைகாலம் இருந்து வருகின்றனர்.

இதற்கன அடிப்படைக் காரணம், தமிழ் எழுத்து மொழியின் ‘மொழிப் பொருட் காரணம்‘ ஆனது இன்றுவரை தமிழ் மொழியை ஆராய்ந்து வருபவர்களால் ஆராய்ந்து அறியமுடியாது இருந்து வருவதாகும்.

தொல்காப்பியன் ‘மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா‘ எனக் கூறியதற்கு நச்சினார்க்கினியரும், சேனாவரையரும் விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். மனிதர்களின் ஐம்புலன்களினூடான அறிந்துணர்வுகள் ‘தன்மை‘ (Nature)அடிப்படையிலானதாக இருக்கும் நிலையில், சேனாவரையரது விளக்கத்தினைச் சரியாக விளங்கிக்கொண்டால்,தமிழ் எழுத்து மொழியில் மனிதரால் எழுப்பக்கூடிய ஒவ்வொரு மூலத்தனியொலியும் ‘தன்மை‘ அடிப்படையிலான ஒரு குறிப்பிட்ட விபரிப்பினைச் செய்கிறது என்பதையும், இந்த மூலத்தனியொலிகளின் இணைவுடாக உருவாகும் தன்மை அடிப்படையிலான விபரிப்பு முழுமையானதாக இருக்கும் இணையொலியே ‘சொல்‘ (word) என்பதையும், அந்த முழுமையான விபரிப்பினை நாம் எவையெவைகளில் எம்மிலும், எமது சுற்றத்திலும், நாம் வாழும் பிரபஞ்சத்திலும் அடையாளங்காண்கின்றோமோ, அப்பொருட்கள் எல்லாம் அக்குறிப்பிட்ட சொல்லின் பொருள்கள் ஆகின்றன என்பதையும் அறியமுடியும். இந்தநிலையில், தமிழ் மொழி ஆய்வில் முதலாவது படியானது, மனிதரால் எழுப்பக்கூடிய மூலத்தனியொலி ஒவ்வொன்றும் ‘தன்மை‘ (nature) அடிப்படையில் செய்யும் விபரிப்பினை ஆராய்ந்து அறிவதாகத்தான் இருக்கமுடியும்.

இப்படியறியப்பட்டவைகளை வைத்து ‘இன்பம்‘ என்றால் என்ன என்பதை அறிந்தாலே, ‘இன்பம்‘ என்றால் என்ன என்பதை விஞ்ஞான ரீதியாக வரையறை செய்யமுடியும்.

‘இன்பம்‘ என்ற இணையொலியானது பின்வருமாறு பிரிக்கப்படமுடியும்: ‘ இ + ன் + ப் + அ + ம்.‘ ஆகவே, ‘இன்பம்‘ என்பது: "உள்(ன்) நிறைவு(இ) ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை(ப்) கொண்டிருக்கும்(அ) மயக்த்தன்மை(ம்)" யாகும்.

இந்தநிலையில், "உள்நிறைவு ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் மயக்கத் தன்மை" உடையததை ‘இன்பம்‘ என்போம். உள்நிறைவுத் தன்மையானது மனிதனுக்குப் பலவிதமானவைகளால் உருவாக்கப்பட முடியும்.

மழலையின் பேச்சில், இசையின் இனிமையில், காற்றின் வருடலில், மழையில் நனைதலில், கூழின் ருசியில், இயற்கையில், நட்பில், காதலில், உழைப்பில் என வாழ்வின் பல தடங்களில் இன்பத்தை மனிதர் உணரலாம். சிறப்பாக "இன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும்." என சோ. ந. கந்தசாமி இந்தியத் தத்துவக் களஞ்சியம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.


மேலும் அவர் "பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்குமேல் இன்பம் சார்ந்த பாவியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்று தொல்ல்காப்பியர் இன்பதற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத்தக்கது" என்று சுட்டி காட்டுகிறார்.[1] தமிழர் மெய்யியலில், இலக்கியத்தில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. சோ.ந.கந்தசாமி. (2004). இந்தியத் தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். பக்கம் 43.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்பம்&oldid=1279189" இலிருந்து மீள்விக்கப்பட்டது