பொலன்னறுவை இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 82: வரிசை 82:
Image:Galvihara-sunny2.jpg|கல் விகாரை புத்தர் சிலை
Image:Galvihara-sunny2.jpg|கல் விகாரை புத்தர் சிலை
File:Council Chamber of Parakramabahu I.jpg|பராக்கிரமபாகுவின் சிலை
File:Council Chamber of Parakramabahu I.jpg|பராக்கிரமபாகுவின் சிலை
File:Satmahal Prasada.jpg|ஏழடுக்கு சத்மல் ப்ரஸாதய கட்டிடம்
File:Satmahal Prasada.jpg|ஏழடுக்கு சத்மல் பிரஸாதய கட்டிடம்
File:Polonnaruwa-panta.jpg|பராக்கிரம சமுத்திரம்
File:Polonnaruwa-panta.jpg|பராக்கிரம சமுத்திரம்
File:Council Chamber2 of Parakramabahu I.jpg|ராக்கிரமபாகுவின் மாளிகை
File:Council Chamber2 of Parakramabahu I.jpg|பராக்கிரமபாகுவின் மாளிகை
Image:Polonnaruwa-objecte de culte falic.jpg|பொலன்னறுவைச் சிவன் கோவில்களுள் ஒன்றிலுள்ள சிவலிங்கம்
Image:Polonnaruwa-objecte de culte falic.jpg|பொலன்னறுவைச் சிவன் கோவில்களுள் ஒன்றிலுள்ள சிவலிங்கம்
</gallery>
</gallery>

==மேற்கோள்களும் குறிப்புக்களும் ==
==மேற்கோள்களும் குறிப்புக்களும் ==
<references />
<references />

11:25, 20 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

Kingdom of Polonnaruwa
பொலன்னறுவை இராச்சியம்
පොළොන්නරු රාජධානිය
கிபி 1017–கிபி 1236
தலைநகரம்பொலன்னறுவை
பேசப்படும் மொழிகள்சிங்களம்,தமிழ்
சமயம்
பௌத்தம், இந்து
அரசாங்கம்மன்னராட்சி
• கிபி 1017-
இராசராச சோழன்
• கிபி 1055-1110
முதலாம் விஜயபாகு
• கிபி 1187-1215
கலிங்க மாகன்
வரலாறு 
• தொடக்கம்
கிபி 1017
• முடிவு
கிபி 1236
முந்தையது
பின்னையது
அனுராதபுர இராச்சியம்
தம்பதெனிய இராச்சியம்
பொலன்னறுவையிலுள்ள சிவன் கோயில்களுள் ஒன்று, மீள்கட்டுமானம் செய்யப்பட்டது.
எருது வடிவம் நீக்கப்பட்ட பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்.

பொலன்னறுவை இராச்சியம் (Polonnaruwa Kingdom) அல்லது பொலன்னறுவை இராசதானி (சிங்களம்: පොළොන්නරුව රාජධානිය) என்பது அனுராதபுர இராச்சியம் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் அவர்களால் இலங்கையில் உருவாக்கப்பட்ட இராச்சியம். இது முதலில் மும்முடிச் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. பின்னர் சிங்கள மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. இலங்கை நீர்வள நாகரிகத்தின் பொற்காலமாக இதனைக் குறிப்பிடலாம்.

வரலாறு

அநுராதபுர காலத்தின் போது பொலன்னறுவை புகழ் வாய்ந்த நகரமாகக் காணப்பட்டது. ஐந்தாம் மகிந்தன் அனுராதபுர இராசதானியை ஆட்சி செய்த போது இராசேந்திர சோழன் என்ற சோழ மன்னனால் இராசரட்டை கைப்பற்றப்பட்டது, பின் அப்பகுதி சோழப்பேரரசின் பகுதியாகியதுடன் அது 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப்பெயரிடப்பட்டது. பின்னர் இராசேந்திர சோழனால் உருகுணையில் ஐந்தாம் மகிந்தன் பிடிபட்டு சோழ நாட்டிற்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டான். சோழர்களால், மகாவலி கங்கையால் சூழப்பட்ட பொலன்னறுவை தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது. பொலன்னறுவை சோழர்களால் ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்டது. சோழர்கள் 52 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனாவான். இவன் விகாரைகள் பலவற்றை அமைத்தான். இவ்வரசன் பாண்டியர்களோடு திருமண ஒப்பந்தங்களைச் செய்தான்.

முதலாம் பராக்கிரமபாகு (கி.பி.1153 தொடக்கம் கி.பி.1186)

பொலன்னறுவையின் முதன்மையான ஆட்சியாளன் ஆவான். பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டிய பெருமை இவனையே சாரும்.

ஏனைய ஆட்சியாளர்கள்

முதலாம் பராக்கிரமபாகுவின் பின் நிசங்கமல்லன் ஆட்சி செய்தான். பின்னர் சில பலமற்ற அரசர்களும் அரசிகளும் ஆட்சி செய்தார்கள்.

வீழ்ச்சி

கலிங்க மாகன் உடைய படையெடுப்புடன் பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியுற்றது. இவன் கி.பி.1215 இல் பலம்வாய்ந்த ஏறக்குறைய 24000 பேரினைக்கொண்ட கேரளப்படையை கொண்டு இலங்கையை ஆக்கிரமித்தான்.

கலை மற்றும் பண்பாடு

கலைகள் அதிகம் வளர்ச்சியடைந்த காலமாக இதனைக் குறிப்பிட முடியும். பொலன்னறுவை காலக் கட்டடங்கள் இதனைப் பறைசாற்றுகின்றன. பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இந்து மதத்தின் செல்வாக்கை அறியலாம். அனுராதபுர சந்திரவட்டக்கல்லில் காணப்பட்ட எருது வடிவம் பொலன்னறுவை காலச் சந்திரவட்டக்கல்லில் இருந்து நீக்கப்பட்டமை இதற்கு ஆதாரமாகும்.

மதங்கள்

பெளத்த மதமே பிரதானமான மத்தமாகும். எனினும் சோழர் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் இந்து மதம் நன்றாகப் பரவியது. பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த முதலாம் பராக்கிரமபாகு மன்னன் முதலியோர் பெளத்த மதத்தில் நிலவிய பிரிவினைகளை ஒழித்தனர். இதன் மூலம் பெளத்த மதம் வளர்ச்சியுற்றது. இலங்கை மக்களின் கலாச்சாரத்தில் பெளத்த மதம் பின்னிப்பிணைந்து காணப்பட்டது.

பொருளாதார நிலமை

விவசாயம்

கைத்தொழில்

உலோகக் கைத்தொழில் உயர்மட்டதில் காணப்பட்டது, போர்ப்படைக்குத்தேவையான கருவிகள், சிலைகள் என்பன உருவாக்கப்பட்டன. வீடு கட்ட செங்கல்லையும் மரத்தையும் பயன்படுத்தினர். புடவை,சுரங்கக் கைத்தொழில்களும் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.[1]

கல்வி

காட்சியகம்

மேற்கோள்களும் குறிப்புக்களும்

  1. இலங்கை அரசின் 8 ஆம் ஆண்டு வரலாறு பாடநூல்
  • இலங்கை அரசின் 10ம் தர வரலாறு பாடப் புத்தகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலன்னறுவை_இராச்சியம்&oldid=1193226" இலிருந்து மீள்விக்கப்பட்டது