அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி பகுப்பு:1944இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் சேர்க்கப்பட்டது using HotCat |
Prash (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
[[பகுப்பு:1944இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]] |
[[பகுப்பு:1944இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]] |
||
{{stub}} |
{{SriLanka-geo-stub}} |
||
[[ca:Congrés Tàmil de Ceilan]] |
[[ca:Congrés Tàmil de Ceilan]] |
04:13, 3 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகஸ்ட் 29, 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்குழுவின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, சமபல பிரதிநிதித்துவம் கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சி சில ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்ற நிலையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ்க் காங்கிரஸ் முடிவு செய்தது.