துறவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 31: | வரிசை 31: | ||
இசுலாம் மதத்தைப் பொறுத்தவரை துறவுக்கு அனுமதியில்லாத நிலையே உள்ளது. இது குறித்து இசுலாம் தத்துவ நூல்களில் பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. <ref>[http://kadayanalluraqsha.com/?p=2811 இஸ்லாம் துறவுறம். லுஹா] </ref> |
இசுலாம் மதத்தைப் பொறுத்தவரை துறவுக்கு அனுமதியில்லாத நிலையே உள்ளது. இது குறித்து இசுலாம் தத்துவ நூல்களில் பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. <ref>[http://kadayanalluraqsha.com/?p=2811 இஸ்லாம் துறவுறம். லுஹா] </ref> |
||
⚫ | |||
திருமணம் செய்ய சக்தியுள்ளவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்..! |
|||
. |
|||
⚫ | |||
திருமண உறவுக்கு ஏற்ற உடல்நலன் இல்லாமை, மஹருக்கான பொருள் தேடல், வேறு இக்கட்டான சூழல்... ஆகியன காரணமாக "இயலாதோர்" பற்றி இப்பதிவில் பேச யாதுமில்லை..! 'ஹஜ்' கூட (உடல்&செல்வ) சக்தி உடையவருக்கு மட்டுமே கட்டாயக்கடமை என்பதை நாம் அறிவோம்..! சக்தி இல்லாதவருக்கு அதுபற்றி கேள்விகணக்கு இல்லை அல்லவா..! |
|||
துறவற(?)த்துக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது..! |
|||
திருமணம் என்ற உறவை முறித்து விட்டு, துறவறம் (இதெல்லாம் ஓர் அறமா..?!) செல்லவும் இஸ்லாம் தடை விதித்துள்ளது. துறவறம் மூலம் இறையருளைப்பெற முடியும் என்ற கருத்தை இஸ்லாம் மறுக்கிறது. |
|||
“உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்கள் துறவறம் மேற்கொள்ளள அனுமதி கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் அனுமதியளிக்கவில்லை”.அறிவிப்பவர்: ஸஅத்பின் அபீவாக்காஸ் (ரலி) புஹ்காரி (5074), முஸ்லிம் (2715) |
|||
மேலும் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுக்கொண்டுதான் ஒருவர் இறையருளை அடைய முடியும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். |
|||
“அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன்; அல்லாஹ்வை பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன். மேலும் நான் பெண்களை மணமுடிந்தும் உள்ளேன் ஆகவே, என் வழி முறையை யார் வெறுப்பாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள். புஹ்காரி 5063), முஸ்லிம் (2714) |
|||
திருமண உறவை வெறுத்தோ அல்லது திருமணம் செய்து கொள்ள வசதி இல்லாததாலோ ஆண்மை நீக்கம் செய்து கொள்ள இஸ்லாம் எவரையும் அனுமதிக்கவில்லை. |
|||
“நான் ஆண்மை நீக்கம் செய்து கொள்ளலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். "அவ்வாறு செய்ய வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத்தடை விதித்தார்கள். அறிவிப்பவர்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5075), முஸ்லிம் (2720) |
|||
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்... 'துறவறம் தடை' என்பது மட்டுமல்ல... இந்த தடையிலிருந்து நாம் மீண்டு வெளியே வர வேண்டுமானால்... அதற்கு சக்தி இருந்தால்... 'திருமணம் கட்டாயம் செய்தே ஆக வேண்டும்' என்றே புரிகிறோம்..! இதிலிருந்து "சக்தியுள்ளவருக்கு திருமணம் கட்டாயக்கடமை" என்று புரியும்..! |
|||
==வெளியிணைப்புக்கள்== |
==வெளியிணைப்புக்கள்== |
10:14, 21 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்
துறவி என்பது உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவர், சந்நியாசி. [1][2] துறவிகள் பெரும்பாலும் காவி அணிவது வழக்கம்.
இந்து மதம்
இந்து மதக் கருத்து
இந்து சமயம் "மனிதனின் வாழ்க்கையை பெரியோர்கள் நான்குவகையாக பிரித்தார்கள். அவைகள் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப்பிரஸ்தம், துறவறம் என்று கூறப்படுகின்றன. அவற்றில் பிரம்மச்சரியம் என்பது கிரகஸ்தம் ஆவதற்கு முன்பு கடைபிடிக்கும் சாதகர் நிலை(பயிற்சி நிலை) எனவும், வனப்பிரஸ்தம் என்பது துறவறம் மேற்கொள்வதற்கான சாதகர் நிலை எனவும் கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை பிறந்ததிலிருந்து பதினாறு வயது வரை பாலபருவம் எனவும் ,அந்த சமயம் அவனை எந்த நியதிகளும் கட்டுபடுத்துவதில்லை. அடிப்படைக் கல்வி மட்டுமே கட்டுபடுத்தும்.
பதினாறு வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை அவன் பிரம்மச்சாரி, அந்த சமயம் வாழ்க்கைகல்வியை கிரகஸ்தனாக இருப்பதற்கு வேண்டிய சகல விதமான விஷயங்களையும் படிப்பறிவாக அறிந்து கொள்கிறான்.
இருபத்து நான்கு வயதில் பிரம்மச்சரிய நிலையை முடித்து தான் கற்ற கல்வியை தனக்கென்று இறைவனால் உருவாக்கப்பட்ட மனைவியுடன் சேர்ந்து கிர்கஸ்தனாகி அனுபவ நிலைக்கு கொண்டு வருகின்றான். அந்த நிலை ஐம்பத்தாறு வயது வரை நீடிக்கிறது.
ஐம்பத்தாறு வயதிலிருந்து மனிதன் வனப்பிரஸ்த நிலைக்கு சென்றுவிடவேண்டும். அதாவது எதிலும் பொதுவான நோக்கம் கொண்டு துறவு நிலைப்பற்றி முழுமையாக படிப்பறிவாக அறிய வேண்டும். அதிகபட்சமாக அவன் எழுபத்திரண்டு வயதுக்கு மேல் வாழ்ந்தால் முற்றிலும் துறவியாகி விடவேண்டும்." [3] என்று மனிதன் வாழ்க்கையை நான்காகப் பிரித்துத் துறவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்கிறது
கிறித்துவ மதம்
கிறித்தவத்தில் துறவி எனப்படுவோர் துறவற சபையில் சேர்ந்து, அச்சபையின் சட்டங்களுக்கு கீழ்படிந்து, கற்பு, ஏழ்மை, கேழ்படிதல் என்னும் வார்த்தை பாடுகளை எடுத்துக் கொண்டோரைக் குறிக்கும்.
கிறித்தவ துறவிகளுக்கும் குருக்களுக்கும் வேறுபாடு உள்ளது. எல்லா குருக்களும் துறவிகள் அல்லர்.
ஆதி திருச்சபைகளில் வனத்து சின்னப்பரை போல் துறவிகள் தனியே வாழ்கை நடத்தினர். பிற்காலத்தில் இத்தகையோர் ஒருங்கே கூடி ஒரு குழுமமாக செப வாழ்வில் இடுபட்டனர். இத்தகையோரை ஒழுங்கு படுத்த புனித ஆசிர்வாதப்பர் பல சட்டங்களை இயற்றினார்[4]. இவையே இன்றளவும் பல இடங்களில் உள்ளது.
இசுலாம் மதம்
இசுலாம் மதத்தைப் பொறுத்தவரை துறவுக்கு அனுமதியில்லாத நிலையே உள்ளது. இது குறித்து இசுலாம் தத்துவ நூல்களில் பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. [5]
“இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5065), முஸ்லிம் (2710)
வெளியிணைப்புக்கள்
- Monastic life and Monastery of Provence in France
- "Monk" article in Catholic Encyclopedia (1913)
- Hitoryfish.net Texts and articles on Western Christian Monks, Monastics, and the Monastic Life.
- Full Text + Illustrations, Abbot Gasquet's English Monastic Life.
- Monasticism Synopsis on Orthodox Church in America's Website (www.oca.org)
- An Orthodox novice Photo from Valaam Monastery, Russia
- Contemplative spirituality in the tradition of the medieval hermits who settled on Mount Carmel.
- Immaculate Heart of Mary's Hermitage - Website of a Hermit of Saint Bruno
மேற்கோள்கள்
- ↑ புத்த பூர்ணிமா
- ↑ சென்னையில் துறவிகள் மாநாடு!
- ↑ மெய்ஞானத்தை அடையும் வழி- பகுதி-19
- ↑ Rule of St. Benedict - புனித ஆசிர்வாதப்பர் சட்டங்கள்
- ↑ இஸ்லாம் துறவுறம். லுஹா