தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20: வரிசை 20:
* [[:en:Tamilology]]
* [[:en:Tamilology]]
* [[யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை]]
* [[யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை]]
* [[மூன்றாவது மொழிப் போர்]]


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

07:06, 27 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்

தமிழ் மொழியையும் தமிழர் பண்பாடு, வரலாறு, சமூகம், அறிவியல் போன்ற அம்சங்களையும் முதன்மையாக ஆயும் இயல் தமிழியல் ஆகும். தமிழியல் தமிழும் தமிழருக்கும் பிற மொழிகளுக்கும் இனங்களுக்கும் இருக்கும் உறுவுகளை சிறப்பாக ஆய்கின்றது. தமிழையும் தமிழர் சார் விடயங்களை பிறருக்கும், பிறர் மொழியையும் அவர்களுடைய சிறப்புகளைத் தமிழ் புலத்துக்கும் பரிமாறும் ஒரு துறையாக தமிழியலை பார்க்கலாம்.


தமிழும் தமிழரும் பிற மொழிகளுடனும் இனங்களுடனும் உறவுகளை வரையறை செய்யும் துறையாக தமிழியல் இருக்கின்றது. பிற மொழிகளையும் இனங்களையும் தமிழர்கள் அறியும், ஆயும் ஒரு துறையாகவும் இவ் இயலை பார்க்க வேண்டும். இன்றைய உலகமயமாதல் சூழலில் தமிழர்களுக்கு தமிழியல் முக்கிய இயலாக பரினாமித்துள்ளது.


தமிழியல் கல்வித்துறை தமிழை பாரம்பரியமாக ஆய்ந்த புலவர்கள் பண்டிதர்கள் மரபில் இருந்தோ அல்லது தமிழை தினசரி வாழ்வுக்கு பயன்படுத்தும் தமிழ் மக்களிடம் இருந்தோ தோன்றாமல் மேற்கத்தைய இன-மொழி ஆய்வு துறையின் ஒரு பகுதியாக தோற்றம் கண்டது. மேற்கத்தைய Oriental Studies - இந்தியவியல் (Indology) பின்புலத்தில் இருந்து தோன்றியது. இதன் நோக்கம் தமிழ் மொழியையோ தமிழர் சார் விடயங்களையோ மேம்படுத்துவது என்று சொல்ல முடியாது. மாற்றாக தமிழ் மொழியையும் தமிழர் சார் விடயங்களையும் ஆய்ந்து தங்களது தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்வதே ஆகும். காலனித்துவ நிர்வாகம், மத மாற்றம், தங்களது மேலான்மையை நிறுவுவது ஆகியவை இந்நோக்கங்களுக்குள் அடங்கும். இன்று இத்துறை South Asian Studies என்று மருபியுள்ளது; ஆனால் இன்று இவற்றின் நோக்கங்கள் சற்று ஆரோக்கியாமன மாற்றங்களுக்கும் உட்பட்டு நிற்கின்றன. எனினும் இன்றும் நாடுகளின் (எ.கா ஐக்கிய அமெரிக்கா) இராணுவ வெளிவிவகார நடவடிக்கைகளுக்கு இந்த துறைகளின் ஆய்வுகள் முக்கியமானவை; இத்துறைசார் புலமையாளர்களும் குறிப்பிடத்தக்க பங்களிக்கின்றார்கள்.


ஆரம்ப தமிழியல் ஆய்வாளர்கள் தமிழையும் தமிழரையும் கருப்பொருளாக நிறுத்தி, தம்மை சற்று உயரநிறுத்தி, ஊடறுத்து ஆய்ந்தார்கள். இவர்களில் காலனித்துவ ஜெர்மனிய, பிரேஞ்சு, டச்சு, ஒல்லாந்த, ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் முக்கியமானவர்கள். இவர்களின் ஆய்வுகள் பின்னாளில் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அறிந்து கொள்ள பெரிதும் பயன்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


இதுவரை பிறர் தமிழையும் தமிழரையும் ஆயும் ஒரு துறையாக தமிழியல் முதன்மையாக இருந்ததனால், இதன் ஆராய்ச்சி கட்டுரைகள் ஆக்கங்கள் பெரும்பாலனவை பிற மொழிகளிலேயே இருக்கின்றன. இன்று அனேக தமிழியல் ஆய்வுகளும் மாநாடுகளும் ஆங்கிலத்தில்தான் அமைகின்றன. தமிழ்நாட்டில் இடம்பெறும் தமிழர்களே பிரதானமாக பங்குகொள்ளும் களங்களும் ஆங்கிலத்தில் அமைகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


தமிழியலை மேற்கத்தைய ஆய்வாளார்களின் பிரதான ஆளுமைக்குள் இருந்து மீட்டெடுத்து தமிழர்களின் ஆளுமைக்குள் உட்படுத்தியதில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடும், தனிநாயகம் அடிகள் ஆரம்பித்த Tamil Culture ஆராய்ச்சி ஏடும் முக்கிய பங்கு வகித்தன.


இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழியல்&oldid=107781" இலிருந்து மீள்விக்கப்பட்டது