மீனவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 2: | வரிசை 2: | ||
== வரலாறு == |
== வரலாறு == |
||
கடலும் கடல் சார்ந்த இடமும் [[நெய்தல்]] எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் [[கப்பல்]] கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன. |
கடலும் கடல் சார்ந்த இடமும் [[நெய்தல்]] எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் [[கப்பல்]] கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன. <ref>[http://www.tamilheritage.org/old/text/ebook/kapal/fore1.html கப்பல் சாஸ்திரம் - இணைய நூல்]</ref> |
||
== சமூக அமைப்பு == |
== சமூக அமைப்பு == |
08:59, 28 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்
தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும் (1000 கி.மீ.)[1], தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. கடலில் உணவுக்காகவும் விற்பனைக்கும் மீன் பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு.
வரலாறு
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனப்பட்டது. பண்டைய தமிழர்கள் கடலில் கப்பல் கட்டுவதிலும் பயணம் செய்வதிலும் திறமைமிக்கவர்களாக இருந்தார்கள். கடல் கடந்து பரவிய தமிழர்களும் தமிழர் பண்பாடும் இதற்கு சான்று பகிர்கின்றன. [1]
சமூக அமைப்பு
தமிழகமீனவர்கள் மீன் பிடிக்கும் முறையை வைத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.
- வலையர்
- பரவர்
- கடையர்
வலையர்
வலையைவைத்து மீன்பிடித்ததால் அவர்கள் வலையர் எனப்பட்டனர்.
பரவர்
பரவலாக கடலில் பரந்து விரிந்து சென்று மீன்பிடித்ததால் அவர்கள் பரதவர் எனப்பட்டனர்.
கடையர்
இவர்கள் கரைஓரங்களில் மீன்பிடித்ததாலும் கடல் சார்ந்த கரைதொழில்கள் செய்ததால் (கரைவலை, சுண்ணாம்பு எடுத்தல், சங்கு சம்பந்தப்பட்ட தொழில்கள், கடல் பூச்சிகளை காயவைத்து விற்பனை) போன்ற தொழில்கள் செய்ததால் கரையர் எனப்பட்டனர் பின்பு கரையர் மருவி கடையர் எனவாகியது. இதற்கு சான்றாக இன்னும் இந்த இனமக்களில் உட்பிரிவாக சுண்ணாம்புகடையர், பூச்சிகடையர் எனபிரிவுகள் உள்ளனர், இன்றளவும் இம்மக்கள் கடற்கரை ஓரங்களில் வசித்துவருகின்றனர் இவர்கல் கரையர் எனப்பட்டதற்கு சான்றாக இராமேஸ்வரத்தில் கரையாதெரு என்ற ஊர் உள்ளது. (கரையர் தெரு கரையாதெருவாக மருவியது).
தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள்
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது[2].
கடற்கரைக் காட்சிகள்
-
தூண்டில் மூலம் மீன் பிடித்தல்
-
வலை மூலம் மீன் பிடித்தல்
-
வலை மூலம் மீன் பிடித்தல்
-
மீன்பிடிவலை
-
இரண்டு பெரிய மீன்களை பிடித்துச் செல்கின்றனர் மீனவர்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- Marine Small-Scale Fisheries of Tamil Nadu : A General Description (A Factual Document)
- Fishing Communities of Northeast and Ethnic Factor
- http://www.tn.gov.in/department/ahf.htm
- http://www.tn.gov.in/deptst/fisheries.htm
- Central Marine Fisheries Research Institute
- தமிழருக்கெதிரான கூட்டு சதி
- ‘கடலும் வாழ்வும்’
- amil fishing village, Tamil Nadu - நிழல்படத் துண்டு